Skip to main content

உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி ஏற்றதன் காரணம் இதுவா?

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. உள்துறை அமைச்சர் பதவி முன்னால் பா.ஜ.க வின் தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு அளிக்கப்பட்டது. அமித்ஷா உள்துறை அமைச்சர் ஆனதில் இருந்து உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் அதிரடியாகவே உள்ளது. காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ததில் இருந்து தற்போது பா. சிதம்பரம் கைது வரை அனைத்திலும் அதிரடி காட்டியவர் அமித்ஷா. நீண்ட நாட்களாகவே ஏன் அமித் ஷா இந்த பொறுப்பிற்கு வந்தார் என்ற சந்தேகம் இருந்தது. 

 

bjp



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த தடை செய்தார். அப்போது அனைத்து இந்துத்துவ இயக்கங்களும் அவரை எதிர்த்து பேச முடியாமல் மௌனம் சாதித்தனர். ஆனால் அவர் இறந்த பிறகு பா.ஜ.க வின் அடிமை ஆட்சியான அ.தி.மு.க வின் ஆட்சி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தது. பல்வேறு இடங்களில் இடத்திற்கு ஏற்றவாறு அனுமதி அளிப்பதும், மறுப்பதும் நீடித்து வந்த நிலையில் அக்டோபர் 08, 2019 அன்று புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த மாவட்ட கண்கானிப்பாளர் செல்வராஜிடம்l அனுமதி கோரப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க வின் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட காவல் கண்கானிப்பாளரை விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். 

 

bjp



இந்த நிலையில் பா.ஜ.க வின் இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் "புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அமைதியாக ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். அதற்காக மாவட்ட எஸ்.பி செல்வராஜிடம் அனுமதி கோரியிருந்தோம். ஆனால் அவர் கடைசி நேரத்தில் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துவிட்டார். ஆகையால் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி-ஐ உடனடியாக பணியிடமாற்றம் செய்ய கோரிக்கை விடுத்தோம். சில அரசியல் காரணத்திற்காக இது போன்று மறுப்பது ஏற்புடையது அல்ல" என்றனர். இதில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்திருந்தார். மதுரையில் ஊர்வலம் நடத்தத் தயாராகும் தருவாயில் பா.ஜ.க-வின் மாநிலங்களவை எம்.பி. இல.கணேசன் கைது செய்யப்பட்டார்.  அது போன்ற சமயத்தில் கூட எந்த ஒரு கடிதமும் மத்திய அமைச்சர்களுக்கோ, பிரதமருக்கோ அனுப்பி வைக்கப்படவில்லை. அப்போது கடிதம் அனுப்பினால் தற்போது மோடி 50 மேற்பட்ட பிரபலங்கள் மீது வழக்கு தொடுத்தது போல் மீதும் வழக்கு பாய்ந்திருக்கும் என்ற பயம் காரணமா என்ற சந்தேகம் எழுகிறது. வெளியே தெரிந்த நிகழ்வு இது ஒன்று தான். இது போல எத்துனை கடிதம் அனுப்பப்பட்டது என்பது பா.ஜ.க-வினருக்குதான் வெளிச்சம். இது போல பாஜக, ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளுக்கு எந்த சிக்கலும் வராமல் இருக்கத்தான் அமித் ஷாவை உள்துறை அமைச்சராக பா.ஜ.க நியமித்துள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இது குறித்து மாவட்ட எஸ்.பியிடம் கேட்டபோது "இதை நான் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் என்ன ஆகப் போகிறது? வரும் 20ஆம் தேதி அன்று ஊர்வலத்தை நடத்தவும் அனுமதி அளித்துவிட்டேன்" என்றார். "நாங்கள் ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே உயர்நீதிமன்ற அனுமதியுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களை நடத்தினோம். மேலும் இது போன்ற நல்ல இயக்கங்களின் செயல்பாடுகளை நிறுத்தியதால் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மேலும் இக்கடிதம் கட்சி சார்பாக அனுப்பப்பட்டது கிடையாது. அது ஒரு தனி நபர் முடிவு" என்றார் பா.ஜ.க-வின் மாநில பொது செயலாளர் வசந்த ராஜன். இது போன்று நடக்கும் நிகழ்வுகள் ஆட்சி அதிகாரத்தின் நம்பகத் தன்மையை கேள்விக் குறியாக மாற்றுகிறது. ஒரு வரை பணியிட மாற்றம் செய்ய சொல்லி கடிதம் வெளிப்படையாக எழுதுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


-அஹமத் அலி.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார்.