Skip to main content

திருவண்ணாமலை சிப்காட் விவகாரத்தில் நடந்தது என்ன?

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

What happened in the Tiruvannamalai chipcat case?

 

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சிப்காட் தொழிற்பூங்கா திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் – காஞ்சிபுரம் அருகே 2,937 ஏக்கர் பரப்பளவில் இரு அலகுகள் செயல்பட்டு வருகிறது. பல்லாயிரக் கணக்கானோர் இங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மேல்மா, குரும்பூர், வட ஆளப்பிறந்தான், தேத்துறை, இளநீர்குன்றம், அத்தி, காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், வீரம்பாக்கம் உட்பட 11 கிராமங்கள். இங்கு சிப்காட் மூன்றாவது அலகை அமைப்பதற்காக அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், 2018 ஆம் ஆண்டு 3174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அரசாணை வெளியிடப்பட்டது.

 

திமுக ஆட்சி அமைந்ததும் தொழில்துறையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. செய்யார் சிப்காட் தொழிற்பூங்காவில் மேல்மா சிப்காட் விரிவாக்கப் பணிகள் 54 அலகுகளாகப் பிரித்து 20 அலகுகள் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்ட இடத்தினை கையகப்படுத்தி பணிகளைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டது. இதனை எதிர்த்து மேல்மா கிராமத்தை மையமாக வைத்து 13 கிராம மக்கள் அமைதிப் போராட்டம் நடத்தத் துவங்கினர். ஜூலை 2 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் தொடர்ச்சியாக நடந்து வந்தது. சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகேயும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம், அரசாணை பிறப்பித்த அதிமுகவும், நிலங்களைக் கையகப்படுத்தக்கூடாது என முரணாகப் போராட்டம் நடத்தியது.

 

What happened in the Tiruvannamalai chipcat case?
மக்கள் போராட்டம்

 

இந்நிலையில் நவம்பர் 2 ஆம் தேதி தங்களது நிலத்தைக் கையகப்படுத்தக்கூடாது, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்கிற தங்களது கோரிக்கையை, போராட்டத்தை கண்டுகொள்ளாத அரசாங்கத்தை கண்டித்து தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை செய்யாறு உதவி கலெக்டர் அனாமிகாவிடம் ஒப்படைக்க, செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முகப்பு வாயிலிலிருந்து விவசாயிகள் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அனுமதியின்றி ஒன்றுகூடி ஊர்வலமாகச் செல்ல முயன்றதாக 96 பெண்கள் உள்பட 147 விவசாயிகளைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்த போலீஸார், செய்யாறு நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார் அன்றிரவு சொந்த ஜாமீனில் விடுவித்தும் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்யாறு சப் கலெக்டர் அனாமிகா வந்து, அவர்களது கோரிக்கை மனுவினை வாங்கிக் கொண்டார்.

 

What happened in the Tiruvannamalai chipcat case?
செய்யாறு சப் கலெக்டர் அனாமிகா

 

நவம்பர் 4 ஆம் தேதி விடியற்காலை போராட்டத்தில் முன்னின்ற 20 பேரைக் கைது செய்து ஒரே சிறையில் அடைக்காமல் வேலூர், கடலூர், புழல் எனப் பிரித்து சிறையில் அடைத்தனர். மேல்மா கூட்டுச் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எஸ்.பி கார்த்திகேயன் தலைமையிலான 500 அதிரடிப்படை போலீஸார் போராட்டப் பந்தலைப் பிரித்து அவர்களைப் பலவந்தமாகப் போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த பேருந்து கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டது. அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

What happened in the Tiruvannamalai chipcat case?
கலெக்டர் பா. முருகேஷ்

 

இந்நிலையில் நவம்பர் 15 ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பா. முருகேஷ், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான அருள், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன், எருமைவெட்டி தேவன், மணிப்புரம் சோழன், மேல்மா திருமால், நர்மாபள்ளம் மாசிலாமணி, குறும்பூர் பாக்யராஜ் ஆகியோருக்கு குண்டர் தடுப்பு காவலில் வைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. 

 

விவசாயிகள் தங்களது வாழ்வுரிமைக்காகப் போராடுகிறார்கள். அவர்களைக் குண்டர்கள்போல் கைது செய்வது எந்த விதத்திலும் சரியானதல்ல என எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி சீமான், அ.ம.மு.க. டிடிவி தினகரன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.வும் வாழ்வுரிமை கட்சித் தலைவருமான வேல்முருகன், திருமுருகன் காந்தி உட்பட அனைவரும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

What happened in the Tiruvannamalai chipcat case?
முதல்வர் மு.க. ஸ்டாலின்

 

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு, “கிருஷ்ணகிரியில் இருந்து இங்கு போராட்டம் நடத்துகின்றனர்” என்று தெரிவித்திருந்தார். மேலும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார் தமிழ்நாடு அரசிடம், வெளியாட்களின் தூண்டுதலின் பேரில் இத்தகைய தவறை செய்யமாட்டோம் எனக் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நேற்று (17ம் தேதி) மாலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கைதான 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஏற்றப்பட்டது 'மகாதீபம்'- பக்தியில் ஆர்ப்பரித்த திருவண்ணாமலை

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

Loaded 'Mahadeepam' - Tiruvannamalai chanted with devotion

 

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கருவறை முன்புள்ள மண்டபத்தில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்காகக் கோயிலுக்குள் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் தற்போது  ஏற்றப்பட்டுள்ளது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தீபத்தை தரிசித்தனர். இந்த மகா தீபம் 11 நாட்களுக்குத் தொடர்ந்து எரிவதற்காக 4 ஆயிரத்து 500 கிலோ நெய்யும், 1500 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

தீபத் திருவிழாவைக் காண்பதற்காக 35 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் சுமார் 14 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு உதவுதற்காக அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள 044-28447703, 044-28447701, 8939686742 என்ற தொலைபேசி எண்கள் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகள் காணாமல் போனால் அது குறித்து தகவல் தெரிவிக்க 9342116232 - 8438208003 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

அய்யங்குளத்தை திறந்து வைத்த அமைச்சர்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

nn

 

பக்தி நகரான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றிலும், கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான குளங்கள் இருந்தன. இந்த குளங்களில் அதிகமான குளங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி கட்டடங்களாகி விட்டன. இப்போது வெகு சில குளங்களே உள்ளன. அதனை பாதுகாக்க வேண்டும் என்று ஆன்மீகவாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

திருவண்ணாமலை நகரில் உள்ள சில குளங்களில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முடிவில் தெப்பம் விடும் நிகழ்ச்சி நடைபெறும். அதில் அய்யங்குளமும் ஒன்று. இந்த குளத்தின் கரைகள், 32 படிக்கட்டுகளில் 10க்கும் மேற்பட்ட படிகள் உடைந்து, சிதிலமடைந்து பல ஆண்டுகளாக இருந்து வந்தன. இக்குளத்தில் அதிகளவு சேறு சேர்ந்து புதைகுழியாக மாறின. சில ஆண்டுகளுக்கு முன்பு மஹாளய அமாவாசையின் போது தர்ப்பணம் கொடுக்க பூஜை செய்ய சிவாச்சாரியார்கள், ஐயர்கள் குளத்தில் இறங்கிய போது ஐந்துக்கும் மேற்பட்டோர் மூழ்கி இறந்தனர்.

 

அப்போது முதல் அக்குளத்தை செப்பனிட்டு சீர் செய்ய வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஐயர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலுவிடம் அய்யர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தூர்வாரும் பணியை செய்ய உத்தரவிட்டிருந்தார்.

 

அதன்படி 3 ஏக்கர் பரப்பளவில் 360 அடி நீளமும், 360 அடி அகலமும் 32 அடி ஆழமும் கொண்ட குளத்தினை தூர்வாரி, சீரமைத்து, புனரமைக்கும் பணியினை அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைச்சர் வேலு நடத்தும் தூய்மை அருணை இயக்கத்தின் சார்பில் செய்தார்.

 

nn

 

அந்த பணியினை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அப்போது அந்த குளம், நகரத்தில் வாரந்தோறும் தூய்மை பணியில் ஈடுபடும் ஐநூறுக்கும் அதிகமான தூய்மை அருணை இயக்கத்தினர் வருகை தந்திருந்தனர். குளத்தின் மையத்தில் 4 கால் மண்டபம் உள்ளது. சிதிலமடைந்த அந்த மண்டபத்தினை சீர் செய்து அதில் நந்திசிலை அமைத்து தரவேண்டும் என அய்யர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அங்கே நந்தி சிலை வைக்கப்படும் என அறிவித்தார் அமைச்சர் எ.வ.வேலு. அதன்படி நந்தி சிலையும் வைக்கப்பட்டது. தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் இறுதி நிகழ்வாக தெப்பம் விடும் உற்சவம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐயங்குளத்தில் கப்பல் உற்சவம் நடத்த வேண்டும் என்பதற்காக வேக வேகமாக பணிகள் முடிக்கப்பட்டு, நவம்பர் 25 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட ஐயங்குளத்தினை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்