Skip to main content

மூவரணி சீற்றம்.. பதறிப்போன ஓ.பி.எஸ்... அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

Published on 09/07/2019 | Edited on 10/07/2019

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து முடிவெடுக்க அனைத்துக கட்சிக் கூட்டம் சென்னையில் 08.07.2019 திங்கள்கிழமை மாலை துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

 

all party meeting



அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்துகளை விளக்கினார்.


எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல என்றும், அது சமூக நீதி என்றும், நீதிமன்றங்கள் கூறிய கருத்தை மேற்கோள் காட்டி பேசினார். அடுத்து பேசிய தேமுதிக பிரமுகர் டாக்டர் இளங்கோ, இதை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என்றார். 

 

பாமக தலைவர் ஜி.கே. மணி பேசும்போது, சாதி வாரி இட ஒதுக்கீடு மூலம் 100 சதவீத இடஓதுக்கீடு வேண்டும் என்றும், அதில் உயர் சாதிக்கும் கொடுக்கலாம் என கூறினார். ஆனால் இந்த பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்கவே கூடாது என்றார். 
 

மதிமுக சார்பில் பேசிய மல்லை சத்யா, இதில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி இருக்கிறது, இட ஒதுக்கீட்டை நீர்த்து போகச் செய்யும் அபாயம் இருக்கிறது என்பது குறித்தும் விளக்கமாக பேசினார்.
 

 விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் பேசும்போது, இது பாஜகவின் சூழ்ச்சி என்று பேச, அதற்கு தமிழிசை எதிர்ப்பு தெரிவித்தார்.


அது போல் சீமான் பேசும் போது, டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசமாக குறுக்கிட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைதிப் படுத்தினார். நீங்கள் தான் முன்னேறி விட்டீர்களே..? முன்னேறியவர்களுக்கு எதுக்கு இட ஒதுக்கீடு என சீமான் கிண்டலடிக்க... ஆசிரியர் வீரமணியும், ஸ்டாலினும் சிரித்தனர்.


பாஜக சார்பில் தமிழிசை இதை ஆதரித்துப் பேச, அதைவிட தீவிரமாக ஆதரித்து டாக்டர் கிருஷ்ணசாமி பேச கூட்டம் அதிர்ந்தது. 
 

காங்கிரஸ் சார்பில் பேசிய கோபன்னா, சி.பி.எம். சார்பில் பேசிய பாலகிருஷ்ணன் , தமாகா சார்பில் பேசிய ஞான தேசிகன் ஆகியோர் சில மாற்றங்களுடன் இதை ஆதரிக்க வேண்டும் என்றதும், ஸ்டாலின் சிரித்தப்படியே கவனித்தார். 


 

all party meeting


கமல்ஹாசன் மிக நிதானமான வார்த்தைகளில், இந்த இட ஒதுக்கீட்டை மக்கள் நீதி மய்யம் எதிர்ப்பதாக கூறினார்.
 

சி.பி.ஐ. சார்பில் பேசிய முத்தரசன் அவர்கள், இதை கடுமையாக எதிர்த்து, சி.பி.எம். நிலைப்பாடு வேறு, தங்கள் நிலைப்பாடு வேறு என உணர்த்தினார். அவர் கருத்தை ஒட்டியே , முஸ்லிம் லீக் சார்பில் பேசிய அபுபக்கரும் கருத்து கூறினார்.
 

த.கொ.இ.பே. சார்பில் தனியரசு பேசும்போது, ஒரு சொட்டு வியர்வை சிந்தாமல், போராடாமல், அந்த முன்னேறிய ஏழைகள் இட ஒதுக்கீடு பெறுகிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் ஆதிக்கம் செய்கிறார்கள் என்றவர், பாமக, விசிக கருத்துகளை வழிமொழிந்து பேசினார். 
 

மஜக சார்பில் பேசிய தமிமுன் அன்சாரி, முன்னேறிய சமூகத்தில் உள்ள எந்த ஏழை 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கிறார்? பசி உள்ளவனும், ஏப்பம் விடுபவனும் ஒன்றா? அவர்கள் அல்வா கொடுக்கிறார்கள். அது அல்வா அல்ல, ஃபெவிகால் பசை என சாடினார்.

 

Thamimun Ansari



 

 

முக்குலத்தோர் புலிப் படை சார்பில் பேசிய கருணாஸ், பிராமணர் ஆதிக்கம் இருப்பதாகவும், புள்ளி விபரங்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு புரிய வைக்க முடியாது. ஆனால் பணிய வைக்க முடியும் என்றார்.
 

நிறைவாக பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், அரை மணி நேரத்தில் பல ஆதார நூல்களை எடுத்துக் காட்டி , ஒரு சமூக நீதி வகுப்பையே எடுத்து விட்டார். தமிழிசையை எனது அன்பு மகள் என கூறினார். அமைச்சர் விஜயபாஸ்கரையும் பாராட்டினார். எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ஆகியோர் சமூக நீதிக்காக ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து, இதன் வழியிலேயே தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்றார். அதன்படி நல்ல முடிவெடுப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

 

bjp-congress




கூட்டத்தில் இடையிடையே பொன்முடிக்கும், தமிழிசைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சை பலரும் ஆட்சேபித்தனர். ஒரு கட்டத்தில் கிருஷ்ணசாமி, இங்குள்ள முடிவை ஏற்க கூடாது, மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முரண்டு பிடிக்க, அது நடைமுறை சாத்தியமல்ல என தமிமுன் அன்சாரி உடனே மறுத்தார். அப்படியெனில், நீட் தேர்வுக்கும் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவோமா? என தனியரசு சீறினார். டென்ஷனான கருணாஸ் கூட்டத்தை முடிங்க என பாய, மூவரணியின் சீற்றத்தை கண்டு, ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர் விஜயபாஸ்கரும் பதறிப் போயினர்.
 

ஒரு வழியாக, சமூக நீதி காத்த அம்மா வழியில் முடிவெடுப்போம் என்று கூறி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தை நிறைவு செய்தார். பிறகு எல்லோரையும் அவரும், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, அன்பழகன் ஆகியோரும் சிரித்தப்படியே வழியனுப்பி வைத்த பிறகே பெருமூச்சு விட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.