Skip to main content

என்னாச்சு நித்திக்கு? ரகசியம் சொல்லும் பக்தர்கள்! 

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

What happen to nithiyanatham Devotees who tell secrets!

 

உலகமெங்கும் உள்ள பக்தர்களை அவர்களது நோய்களில் இருந்து குணப்படுத்துவேன் என்ற சொன்ன நித்யானந்தாவுக்கு இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள் அவரது ஆசிரமவாசிகள். சமீபத்தில் கோவை மீடியா என்கிற செய்தி நிறுவனம் நித்யானந்தாவின் கைலாசா நாட்டை பற்றி உண்மைத் தகவல்களை வெளியிடப் போவதாக அறிவித்தது. அதற்கான டிரெயிலரும் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த டிரெயிலர் ஒரு மணி நேரத்திலேயே காணாமல் போய்விட்டது. அதற்கு காரணம் நித்யானந்தாவின் பக்தர்கள், எதுவும் வெளியிட வேண்டாம் எனச் சொன்னதால்தான்.

 

அந்த காணொளியில் பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமம் காட்சிப்படுத்தப்பட்டது. அதில் யாரும் இல்லை. சுடுகாடு போல காணப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் ராஜபாளையம், சேலம், திருவண்ணாமலை பகுதியில் இருக்கக்கூடிய ஆசிரமங்கள் செயலிழந்து நிற்கின்றன.

 

கடந்த 2018 ஜூன் மாதம் 6-ஆம் தேதி நித்யானந்தாவுக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை அவரிடம் வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கடந்த 4 வருடங்களாக நித்தி இந்தியாவில் இல்லை. நித்திக்கு எதிரான வழக்கில் 60 முறை கோர்ட் நித்திக்கு சம்மன் கொடுத்திருக்கிறது. அவருக்கு எதிராக இன்டர்போல் மூலம் கைது செய்யும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

 

இதற்கிடையே ஜனார்த்தன சர்மா என்பவரின் இரண்டு மகள்களைக் கடத்திக் கொண்டு சென்றதாக குஜராத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில், எங்களை யாரும் கடத்தவில்லை என கடத்தப்பட்டதாக சொல்லப்படும் இரண்டு பெண்களும் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஜமைக்காவில் உள்ள நீதிமன்றத்தின் தூதரக அதிகாரிகளின் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்கள். அவர்களை "நீங்கள் ஜமைக்காவை விட்டு வெளியே செல்லக்கூடாது' என குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பார்த்தால் நித்தி மேற்கிந்தியத் தீவு பகுதிகளில் உள்ள ஒரு தீவில் ஒளிந்துகொண்டு கைலாசா என படம் காட்டிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் நித்திக்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.

 

ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்தில் வனவாட்டா என்கிற தீவில் தான் கைலாசா நாடு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இயங்கும் கருடா ஏர்வேஸ் மூலம் நீங்கள் கைலாசாவுக்கு வரலாம் என நித்தி தனது வீடியோவில் பேசி இருந்தார். அந்த தீவில் கைலாசா பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் ஒரு வங்கிக் கணக்கையும் ஆபரேட் செய்து வந்தார். அந்த வங்கிக் கணக்கு சமீபத்தில் மூடப்பட்டுவிட்டது. எனவே நித்தி வனவாட்டாவில் இல்லை. ஆனால் அங்கு இருக்கக்கூடிய மேற்கிந்தியத் தீவுகளின் வட்டாரத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

 

அவர் பொதுவாக உடற்பயிற்சிகள் எதையும் செய்யும் பழக்கத்தைக் கொண்டவர் இல்லை. ஆனால் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பார். அவருக்கு ஜுரம் வந்தால் கூட வெளியே தெரியாது. ஏனென்றால் மற்றவர்களின் வியாதியை குணப்படுத்துபவர் எப்படி தனக்கு வந்த வியாதியை வெளியே சொல்லுவார். இப்பொழுது அவர் வெளியிடும் பதிவுகளில் "ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை. இருபது நிமிடம்கூட தூங்க முடியவில்லை' என பிதற்றியிருக்கிறார். ஆனால் நான் நல்ல உடல் நிலையில் இருக்கிறேன் சமாதியில் இருக்கிறேன், எனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள்கூட என்ன வியாதி என்று கண்டுபிடிக்க சிரமப்படுகிறார்கள்' என கூறுகிறார்.


உண்மையில் நித்திக்கு என்ன என அவருக்கு நெருக்கமான பக்தர்கள் வட்டாரத்தில் கேட்டோம். இதுபற்றி உண்மையை சொல்லக்கூடிய ஒரே ஒரு ஆள் ரஞ்சிதா மட்டுமே. அவர் நித்தியுடன் இருக்கிறார். அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது, அளவுக்கு அதிகமான வயாகரா போன்ற மருந்துகளை உட்கொண்டதால் இரண்டு கிட்னியும் நித்தியானந்தாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.


கடந்த மூன்றரை வருடங்களாக நித்தியானந்தாவின் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. அவருக்கு வருமானம் இல்லை. தலைமறைவாக இருக்கும் நித்தியை மருத்துவமனையில் சேர்த்தால் அது செய்தியாகிவிடும். அவரை அவர் எந்த நாட்டில் இருக்கிறாரோ அந்த நாட்டின் சட்டவிதிகள்படி இந்திய போலீஸ் சர்வதேச உதவியுடன் கைது செய்துவிடும். அதனால் ஒரு கருணைப் பார்வை அரசாங்கம் தன் மீது காட்டாதா? நான் ஒரு இந்து சாமியார் என மத்திய பா.ஜ.க. அரசுக்கு செய்தி அனுப்ப நித்தி முயல்கிறார் என்கிறார்கள்.


"மொத்தத்தில் விதி வலியது. நோயில் தவிக்கும் நித்தி விரைவில் நலம் பெறவேண்டும் என்பது பக்தர்கள் உள்ளிட்ட அனைவரின் விருப்பம். அதன்பின், சட்டத்தின் வலையில் சிக்கிக் கொள்வார்' என்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கைலாசாவின் பிரதமர் ரஞ்சிதா; நித்தியிடம் இருந்து கைமாறும் பவர்!

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

Ranjitha Prime Minister of Kailash

 

சமீபத்தில் வேலை தேடுவதற்கான தளமும் செயலியுமான ‘லிங்க்டு இன்’ பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம், நித்யானந்தாமாயி சுவாமி என்ற தலைப்பில் இருக்க, அதன் கீழே கைலாசாவின் பிரதமர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இயக்குநர் இமயம் என தமிழர்களால் பாராட்டப்படும் பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் படத்தில் அறிமுகமான ரஞ்சிதா, 20 படங்களுக்குப் பின் தன் கேரியரில் ஒரு தொய்வைச் சந்தித்தார். இந்த தொய்வு காலகட்டத்தில்தான் நித்தியானந்தாவுடனான அறிமுகம் ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் தமிழின் மற்றொரு இயக்குநரான மணிரத்னத்தின் ‘ராவணன்’ படத்திலும் வாய்ப்பு கிடைத்தது ரஞ்சிதாவுக்கு. சினிமாவா, ஆன்மிகமா என்ற நிலை வந்தபோது, நித்தியானந்தா அளித்த நம்பிக்கையின் அடிப்படையில் படவாய்ப்புகளை முற்றிலுமாக உதறித் தள்ளிவிட்டு நித்தியானந்தாவின் பிரதான சிஷ்யையாக மாறினார்.

 

காலம் நித்தியானந்தாவை உயரத்திலிருந்து பாதாளத்துக்குத் தள்ளி, நாடுவிட்டு நாடு ஓட வேண்டிய சூழல் உண்டான போது, கூடவே அவரது பிரதான சிஷ்யையாக ரஞ்சிதாவும் ஓட வேண்டியதானது. அப்போதெல்லாம் தான் இழந்த வாய்ப்புகளையும் உயரங்களையும் பற்றி குற்றம் சாட்டும் தொனியில் மீண்டும் மீண்டும் நித்தியானந்தாவிடம் பேசுவதை ரஞ்சிதா வழக்கமாக வைத்திருந்தார். அதற்குப் பரிசாகத்தான் கைலாசாவின் பிரதமர் பட்டத்தை ரஞ்சிதாவுக்கு அளித்திருக்கிறார் நித்தி.

 

Ranjitha Prime Minister of Kailash

 

லிங்க்டு இன் புரொஃபைலைத் தவிர வேறெந்த செய்தியும் ரஞ்சிதா குறித்து ஊடகங்களில் காணப்படாத நிலையில், நித்தியானந்தாவின் முன்னாள் சிஷ்யரும் தனது பழைய தர்மத்திலிருந்து ஒதுங்கி வாழும் ஒருவரைத் தொடர்புகொண்டு ரஞ்சிதா அலைஸ் நித்தியானந்தாமயி சுவாமி குறித்த விவரங்களைக் கேட்டோம்.

 

"நித்தியானந்தாவின் அடுத்தகட்ட தலைமைப் பொறுப்பு ரஞ்சிதாவிடம்தான் இருக்கிறது. டெக்னிக்கலாக கண்ட்ரோல் அவரிடம் வந்துவிட்டது. அங்கே உள்ளே இருப்பவர்களிடமிருந்து இப்போது வரும் தகவல் இதுதான். இதில் பழைய ஆட்களுக்குக் கொஞ்சம் வருத்தம் என்றாலும் நித்திக்கு அடுத்த இடத்தை அடைந்திருப்பது ரஞ்சிதாவுக்கு ஆதாயம்தான்'' என்கிறார்.

 

 

Next Story

ஐ.நா.வில் ஆட்டம் போட்ட நித்தி சிஷ்யைகள்; கசிந்த கைலாசா ரகசியம்!

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

Nithiyantha kailasa UN ConferenNithiyantha kailasa UN Conference ce
கோப்புப் படம் 

 

ஐ.நா. அமைப்பு பெண்கள் மேம்பாடு தொடர்பாக நடத்திய மாநாடு ஒன்றில், ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளக் கூடிய கூட்டங்களில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் கலந்துகொண்டு, நித்தியானந்தா மீது மனித உரிமை மீறல்களும் துன்புறுத்தல்களும் நிகழ்த்தப்படுவதாக குற்றம்சாட்டி நாடகமாடியுள்ளனர்.

 

தன் மீதுள்ள வழக்கை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் 2019-ல் இந்தியாவை விட்டு தப்பியோடிய நித்யானந்தா, ஆன்மிக வியாபாரத்தில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தில் ஈக்வடார் கடற்கரைப் பகுதியில் சில தீவுக்கூட்டங்களை வாங்கி அதற்கு கைலாஸா எனப் பெயரிட்டு அங்கேயே தனது ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.

 

இந்தியாவை விட்டே தப்பியோடியிருந்தாலும் அவருக்கு மீண்டும் இந்தியா திரும்பவும் இங்கு மீண்டும் ஒரு ஆன்மிக(?) சாம்ராஜ்யத்தை நிறுவவும் ஆசையிருப்பதால் சமூக ஊடகங்கள் மூலம் கைலாஸா குறித்த செய்திகளைத் திரும்பத் திரும்ப பரப்பி வருகிறார். அவரது வலைத்தளம் உலகின் முதல் இந்து நாடு கைலாஸா எனவும் இங்கே இருபது லட்சம் பேர் இந்து மதத்தைப் பின்பற்றி வருவதாகவும் தெரிவிக்கிறது. கைலாஸாவுக்கென தனி வங்கி, கொடி, பாஸ்போர்ட் ஆகியவை உள்ளதாக அவர்கள் தெரிவித்தாலும் உலகம் கைலாஸாவை இதுவரை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.

 

இந்த நிலையில்தான் பிப்ரவரி 22, 2023 அன்று பெண்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ஜெனிவாவிலுள்ள ஐ.நா. சபையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அது நிறைவுற்ற சில தினங்களில் கைலாஸாவின் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலிருந்து இந்த மாநாட்டில் கலந்துகொண்ட கைலாஸாவின் பிரதிநிதிகள் குறித்த படங்களும் செய்திகளும் வெளியாகத் தொடங்கின.

 

Nithiyantha kailasa UN Conference

 

“உலக அரங்கில் ஜொலிக்கும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாஸா! ஐ.நா. மாநாட்டில் பெண்கள் தலைமைத்துவம் பற்றிய பேச்சில் பிரதிநிதித்துவம்! என்றொரு செய்தி நித்தியானந்தா தரப்பினரால் பிப்ரவரி 22-ஆம் தேதிக்குப் பின் வெகுவாகப் பரப்பப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை களைவதற்கான குழுவின் 84-வது அமர்வில், ஐ.நா.வுக்கான கைலாஸாவின் நிரந்தரத் தூதர் மா விஜயப்பிரியா நித்தியானந்தா, லாஸ் ஏஞ்சல்ஸ் கைலாஸாவின் தலைவர் மா முக்திதா ஆனந்தா, செயிண்ட் லூயிஸின் கைலாஸா தலைவர் மா சோனா காமத், யுனைடெட் கிங்டத்தின் கைலாஸாவுக்கான தலைவர் நித்ய ஆத்மதாயகி, ப்ரான்ஸின் கைலாஸாவுக்கான தலைவர் மா பிரியப்ரேமா நித்யானந்தா ஆகியோர் உள்ளிட்ட குழு பங்கேற்றது.

 

பாலின அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடுகள், வன்முறைகள் பற்றிப் பேச பெண் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் இந்துப் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு எதிராக கைலாஸாவின் பெண் உறுப்பினர்கள் குரல்கொடுத்தனர் என நீள்கிறது அந்தச் செய்தி. இந்தச் செய்தி, கைலாஸாவை ஒரு நாடாக ஐ.நா. அங்கீகரிக்கிறதா… கைலாஸா பிரதிநிதிகளுக்கு ஐ.நா.வில் அத்தனை முக்கியத்துவம் அளிக்கப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்பியது. ஆனால் பி.பி.சி. உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் நித்தியானந்தாவின் டுபாக்கூர் வேலையை அம்பலப்படுத்தின. இந்தச் செய்தி குறித்து விளக்கமளித்திருந்த ஐ.நா. அதிகாரி, “கைலாஸா பிரதிநிதிகள், சமர்ப்பித்த விஷயங்கள் ஐ.நா. பேசிய பிரச்சினைகளிருந்து விலகியவை, அவற்றோடு தொடர்பற்றவை” என்றார். மேலும், “இந்த மாநாட்டில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதில் கைலாஸா இடம்பெறவில்லை. அரசுசாரா அமைப்புகள், தன்னார்வலர்கள் என யாரும் பங்குபெறக்கூடிய பிப்ரவரி 22, 24-ல் ஐ.நா. நடத்திய இரண்டு பொதுக்கூட்டங்களிலேயே கைலாஸா பிரதிநிதிகள் பங்குபெற்றனர்” என்கிறார் இந்தப் பொதுக்கூட்டங்களை மேற்பார்வை செய்த விவியன் குவாக்.

 

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேள்வியெழுப்பலாம் என சொல்லப்பட்டபோது, ஐ.நா.வுக்கான கைலாஸாவின் நிரந்தரத் தூதர் என தன்னை அறிமுகம் செய்துகொண்ட விஜயப்பிரியா நித்யானந்தா, கேள்வி கேட்பதுபோல் எழுந்து, “கைலாஸாவின் குடிமக்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி அனைத்தும் இலவசம். தன்னிறைவான வளர்ச்சியுடன் திகழும் நாடு” என்று கூறியதுடன், “இந்து மதத்தின் பூர்விக மரபு, வாழ்க்கை முறைகளைப் புதுப்பிப்பதற்காக நித்தியானந்தா மிகக் கடுமையான துன்புறுத்தல், மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார். கைலாஸா மக்களும் அதேபோல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதை நிறுத்த தேசிய, சர்வதேச அளவில் என்ன செய்யலாம்?” என கேள்விகள் கேட்டுள்ளார்.


ஆக, யார் வேண்டுமானாலும் பங்குபெறக்கூடிய ஐ.நா.வின் இரண்டு கூட்டங்களில் கலந்துகொண்டு அவற்றின், புகைப்படம், வீடியோ காட்சிகளை சமூக ஊடகங்களில் கடைபரப்பி, கைலாஸா ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுபோலவும், கைலாஸாவுக்கு நாடுகள்தோறும் தூதர்கள் இருப்பதுபோலவும், நித்தியானந்தாவை இந்தியாவே துன்புறுத்துவது போலவும் சீன் போட்டுள்ளனர் நித்தியின் சிஷ்யைகள்.


இந்தியாவில் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை சட்டபூர்வமாக எதிர்கொண்டு பதிலளிக்கவியலாத நித்தியானந்தா, எட்டாத தொலைவிலிருக்கும் தைரியத்தில் தன் மீது மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுவதாக ஐ.நா. கூட்டங்களில் தனது சீடர்களை வைத்து நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்.

 

- க.சுப்பிரமணியன்