Skip to main content

கம்யூனிஸ்ட்டுகள் இனி என்ன செய்ய வேண்டும்?

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

இந்தியாவில் விடுதலைக்குப் பிறகு கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக கருதப்பட்ட கேரளாவும், மேற்குவங்கமும், தெலங்கானாவும் இப்போது  கம்யூனிஸ்ட்டுகளின கையைவிட்டு போகிறதோ என்ற கவலை எழுந்துள்ளது.
 

communist


பொதுவாகவே உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் நாடுகள் தங்கள் அணுகுமுறைகளில் சீர்திருத்தம் செய்துவரும் நிலையில் இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் அரசியல் மக்களிடம் சென்றடையவில்லை என்பதை அந்தக் கட்சித் தலைவர்களே இன்னும் உணரவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சியில் பிரகாஷ் காரத் மேற்கொண்ட வறட்டுவாத கோட்பாட்டு அரசியல் அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இப்போதேனும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒப்புக்கொள்வார்களா என்பது தெரியவில்லை.

1996ல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. கம்யூனிஸ்ட்டுகளின் முக்கிய எதிரியாக இருந்த காங்கிரஸ் கட்சியே கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசுவை பிரதமர் பதவிக்கு ஆதரிப்பதாக அறிவித்தது. அந்த வாய்ப்பை, கட்சி டாகுமெண்ட்டைக் காட்டி எதிர்த்தவர் பிரகாஷ் காரத். இந்த வாய்ப்பை மறுக்கக்கூடாது என்று ஜோதிபாசுவும், ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தும் கருத்துத் தெரிவித்த பின்னரும் விவாதப் பொருளாக்கி அரசியல் தலைமைக்குழுவிலிருந்த 11 பேரில் 6 பேரின் ஆதரவோடு பிடிவாதமாக நிராகரித்தவர் காரத்.

ஆனால், ஆட்சி அமைக்க போதுமான ஆதரவு இல்லாத நிலையிலும், 161 இடங்களுடன் தனிப்பெருங்கட்சி என்ற தனது தகுதியை வைத்து அரசு அமைக்கும் வாய்ப்பை பிடிவாதமாக பெற்று பிரதமர் பொறுப்பை ஏற்றார் வாஜ்பாய். 13 நாட்கள் என்றாலும் பாஜக இந்தியாவில் பிரதமர் பொறுப்பை ஏற்கிற அளவுக்கு பெரிய கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த அதை வாஜ்பாய் பயன்படுத்தினார். 13 நாட்கள் கழித்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவியை ராஜினாமா செய்தார் வாஜ்பாய்.

 

communist


காங்கிரஸ் கட்சி 140 இடங்களைப் பெற்றிருந்தாலும் கூட்டணி அரசாங்கத்தை திறமையாக நடத்துகிறவர் ஜோதிபாசு என்ற வகையில் அவரை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தது காங்கிரஸ். திமுக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் ஒப்புக்கொண்டன. ஆனால், பிரகாஷ் காரத்தின் முட்டுக்கட்டையால் அன்றைக்கு அந்த வாய்ப்பு பறிபோனது.

அதையடுத்து, தேவகவுடாவுக்கு பிரதமர் வாய்ப்பு கிடைத்தது. தேவகவுடாவின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்று ஐ.கே.குஜ்ராலை மாற்ற காங்கிரஸ் நிர்பந்தித்தது. கூட்டணி அரசு நீடித்தால் தனது வளர்ச்சி பாதிக்கும் என்ற நினைப்பில் மக்கள் மத்தியில் கூட்டணி அரசுக்கு தொல்லை கொடுக்கத் தொடங்கியது. இந்நிலையில்தான் ஐக்கியமுன்னணி அரசு ராஜினாமா செய்தது. அதைத்தொடர்ந்து வந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 182 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் 141 இடங்களையே பெற்றது.

இந்தச் சமயத்தில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு சிறிய கட்சிகளின் ஆதரவுடன் வாஜ்பாய் தலைமையில் பாஜக அரசு அமைத்தது. கடந்தமுறை தீண்டத்தகாத கட்சியாக பார்க்கப்பட்ட பாஜகவை இப்போது பல கட்சிகள் ஆதரிக்கும் நிலை உருவானது. ஆனால், திமுக அரசை கவிழ்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வாஜ்பாய் அரசு ஏற்க மறுத்ததால் 13 மாதங்களில் ஓரு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் கவிழ்த்து அதிமுக. 1999ல் நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்த பாஜக 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்தியாவில் முழு பதவிக்காலத்தை நிறைவு செய்த கூட்டணி அரசு என்ற பெயரை பெற்றது.

ஜோதிபாசுக்கு கிடைத்த பிரதமர் வாய்ப்பை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டிருந்தால், அது பாஜகவைப் போல வளர்ச்சி பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சில மக்கள் நலத்திட்டங்களை அறிவித்திருக்கலாம். அப்படி அறிவிப்பதை காங்கிரஸ் தடுத்திருந்து பதவியை இழக்க நேர்ந்திருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கே சாதகமாக அமைந்திருக்கும்.

 

communist



சரி, அந்த வாய்ப்புதான் பறிபோனது. பாஜக அரசை தூக்கியெறிய 2004 ஆம் ஆண்டு சிபிஎம் பொதுச்செயலாளர் புதிய தந்திரத்தை உருவாக்கினார். காங்கிரஸையும் மற்ற மதசார்பற்ற மாநிலக் கட்சிகளையும் அணிதிரட்டி ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சித்தார். அதற்காக அவர் முதலில் சந்தித்த தலைவர் கலைஞர்தான். சுர்ஜித்திடம் கலைஞர் வைத்த யோசனை ஒன்றுதான்…

“தேசிய அளவில் கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவிக்க வேண்டும்”

கலைஞரின் கோரிக்கையை சோனியாவிடம் தெரிவித்தார் சுர்ஜித். உடனே, சோனியாவும் கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் தயார் என்று அறிவித்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று மத்தியில் அரசு அமைந்தது. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் கீழ் அந்த அரசு செயல்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தியது. அப்போதும் பிரகாஷ் காரத் போட்ட முட்டுக்கட்டையால் அந்த வாய்ப்பும் போனது. சபாநாயகர் பொறுப்பையாவது ஏற்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியதால் சோம்நாத் சாட்டர்ஜி சபாநாயகரானார்.

இந்த ஆட்சிக்காலத்தில் பெட்ரோல் டீசல் விலையோ, சமையல் வாயு விலையோ ஒரு பைசா கூட ஏறவில்லை. இடதுசாரிகளின் வேண்டுகோளை மத்திய அரசு அப்படியே ஏற்றது. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் இடம்பெற்றபடி, 100 நாள் வேலைத் திட்டத்தை நிறைவேற்ற முனைப்போடு செயல்பட்டு அதை நிறைவேற்றியது மத்திய அரசு. அரசுக்கு ஆதரவு தரும் ஒரு கட்சியின் சொல்லுக்கெல்லாம் கட்டுப்பட்டு நடந்தார் மன்மோகன்சிங். ஆனால், அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்று கம்யூனிஸ்ட்டுகள் பிடிவாதமாக இருந்தனர். அதை மன்மோகன் இல்லாவிட்டால் இன்னொருவர் நிறைவேற்றியே தீருவார் என்று தெரிந்தும், அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். பிரதமர் கொடுத்த எந்த விளக்கத்தையும் ஏற்க தயாராக இல்லை. கடைசியில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கம்யூனிஸ்ட்டுகள் கொண்டுவந்தனர். அந்த தீர்மானத்தை ஆதரித்து பாஜகவும் வாக்களித்தது. ஆனால், மன்மோகன்சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.

காங்கிரஸுடனான உறவை முறிப்பதில் பிரகாஷ் காரத் முக்கிய பங்குவகித்தார். அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டை கம்யூனிஸ்ட்டுகள் இப்போதுவரை சமாளிக்கத்தான் செய்கிறார்கள். பொலிட்பீரோ எடுத்த முடிவு என்பார்கள். பொலிட்பீரோ என்பது கேரளா, மேற்கு வங்க உறுப்பினர்களை மையமாகக் கொண்டது என்று விமர்சகர்கள் கூறுவதை ஏற்க மாட்டார்கள். 100 கோடி மக்களின் நலன்களை பொலிட்பீரோவின் 11 உறுப்பினர்கள் தீர்மானிப்பது எப்படி சரியாகும் என்ற கேள்விகளுக்கு இப்போதுவரை சரியான பதிலே இல்லை.

கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸை பகைத்தது, 2009 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸுடன், காங்கிரஸ் கட்சி கைகோர்க்கும் நிலையை உருவாக்கியது. இதன்விளைவாக திரிணாமுல் காங்கிரஸ் மேற்குவங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றி, இடதுமுன்னணியை வீழ்த்தியது. அப்போதிருந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு வங்கி மேற்கு வங்கத்தில் சரியத் தொடங்கியது. 2004 தேர்தலில்  50.50 சதவீத வாக்குகளுடன் 35 இடங்களை இடதுமுன்னணி பெற்றது. காங்கிரஸ் கட்சி 14.56 சதவீத வாக்குகளுடன் 6 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் 21 சதவீத வாக்குகளுடன் ஒரு இடத்தை மட்டுமே பெற்றிருந்தது. பாஜக 8 சதவீத வாக்குகளை வைத்திருந்தாலும் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.
  kalaignar


2009 தேர்தலில் காங்கிரஸும் திரிணாமுல் காங்கிரஸும் கூட்டணி அமைத்து 26 இடங்களை கைப்பற்றின. திரிணாமுல் காங்கிரஸின் வாக்குச்சதவீதம் 31.18 ஆகவும், காங்கிரஸின் வாக்குச்சதவீதம் 13.45 ஆகவும் இருந்தது. இடதுமுன்னணியின் வாக்குச்சதவீதம் 42.60 ஆக குறைந்தது. பாஜக 6.14 சதவீத வாக்குகளுடன் முதல்முறையாக மேற்குவங்கத்தில் 1 தொகுதியுடன் தனது கணக்கைத் தொடங்கியது.

2014 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 34 இடங்களுடன் 39 சதவீத வாக்குகளைப் பெற்றது. இடதுமுன்னணியின் வாக்குச் சதவீதம் 29.71 ஆகி, வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்றது. பாஜகவின் வாக்குச்சதவீதம் 17.02 ஆக உயர்ந்து, 2 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் 9.58 ஆக குறைந்ததுடன் தொகுதிகளும் 4 ஆக சரிந்தது.

2019 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 43.28 சதவீத வாக்குகளுடன் 22 இடங்களையும், பாஜக 40.25 சதவீத வாக்குகளுடன் 18 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 5.61 சதவீத வாக்குகளுடன் 2 இடங்களையும் பெற்றன. இடதுமுன்னணி 7.43 சதவீத வாக்குகளுடன் ஒரு இடத்தைக்கூட பெறவில்லை.

திரிபுராவில் பாஜகவின் வாக்குச்சதவீதம் 49.03 சதவீதமாக உயர்ந்து 2 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 25.34 சதவீதம் வாக்குகளையும், இடதுமுன்னணி 17.31 சதவீதம் வாக்குகளையும் பெற்று ஜீரோவாகி இருக்கின்றன.

அதாவது நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த இரண்டு மாநிலங்களில் கம்யூனிஸ்ட்டுகள் அல்லது இடதுசாரிகள் தங்களுடைய அடித்தளத்தையே இழந்து வருகிறார்கள். மேற்கு வங்கத்தில் கிட்டத்தட்ட 2004 ஆம் ஆண்டு பாஜக இருந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த அளவுக்கான வீழ்ச்சியை இடதுசாரிகள் எப்படி சமாளித்து எழப்போகிறார்கள்?

உலகம் முழுவதும் சித்திரவதைகளால் ஒடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள், ஜனநாயக அரசியலுக்கு ஏற்ப தங்களுடைய வியூகங்களை மாற்றி, சாமான்ய மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து, வெகுஜன இயக்கங்களாக மாறி பல நாடுகளில் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றி இருக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட்டுகள் இனியாவது மேதாவி அரசியலை கைவிட்டு, சாமானிய அரசியலுக்கு திரும்ப வேண்டும். ஆர்எஸ்எஸ் எப்படி வெகுஜன அரசியலில் முன்னேறுகிறது என்பதையாவது பாடமாக படிக்கலாம். தனது வெகுஜன இயக்கங்களில் ஏதேனும் ஒன்றை அரசியலுக்கு தயார்படுத்தலாம். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசியல் ஆர்வம் மிகுந்த, செல்வாக்குள்ள, முற்போக்கு எண்ணம் கொண்டவர்களை அரசியல் வகுப்பு என்று கொல்லாமல் உடனடியாக உறுப்பினர்களாக்க வேண்டும். மக்கள் மத்தியில் அவர்கள் தங்களையும் கட்சியையும் பிரபலப்படுத்த அனுமதிக்க வேண்டும். உள்ளூர் தலைவர்களை உருவாக்கி மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்த வேண்டும். மொத்தத்தில் அந்தந்த மாநிலத்துக்கு ஏற்றவகையில் தலைமையை உருவாக்க வேண்டும். குறிப்பாக பிராமணீயத் தலையீடுகளை குறைக்க வேண்டும். சமூகநீதித் தத்துவம்தான் இந்தியாவில் வெற்றிபெறும் என்பதை புரிந்து செயல்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

 

 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

'தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் இருக்கும்'- பிரகாஷ் காரத் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Marxist Communist will support Tamil Govt's ongoing case'- Leadership Committee Member Prakash Karath Speech

தி.மு.க கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில்  ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி மற்றும் நகர செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார். திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி, அவை தலைவர் மோகன், முன்னாள் நகர்மன்ற தலைவர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே. பாலு உள்பட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் பிரகாஷ் கரத் பேசுகையில், 'மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்திய நாடு என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் மொழி இருக்கிறது. கலாச்சாரம் இருக்கு பண்பாடு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமூக கட்டுப்பாடு இருக்கிறது. இவை அனைத்தும் இணைந்தது தான் இந்தியா என்கிற ஒரு மகத்தான நாடாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி இந்தக் கட்டமைப்பையும் இந்த ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து இந்தியாவை ஒற்றை நாடாக ஒரு எதேச்சை அதிகாரம் நாடாக மாற்ற விரும்புகிறேன். நம்முடைய கலாச்சார பன்முகத்தன்மையை அழிந்து ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே தலைவர் என்ற சூழ்நிலையை உருவாக்க பாஜக முயன்று வருகிறது.

மத்திய அரசு ஆளுநரை வைத்து அனைத்து துறைகளிலும் தலையீடு செய்கின்றன ஒரு மோசமான சூழ்நிலை உள்ளது. மாநில அரசுகளுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தராமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் மாநில அரசுகளால் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நிலைமை கேரளாவிலும் உள்ளது. மத்திய அரசின் செயலை கண்டித்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிய நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் மத்திய அரசு மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு ஆதரவாக உறுதுணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். மாநிலங்களுக்கு நிதியை வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்தை மறுப்பது ஆளுநர்களைக் கொண்டு ஆட்சியில் தலையிடுவது போன்றவற்றை தடுத்து நிறுத்தக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மோடி அரசாங்கம் ஊழலின் மொத்த உருவமாக உள்ளது என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. மெகா ஊழலாக தேர்தல் பத்திரம் மோசடி ஊழல் நடைபெற்று உள்ளது. தேர்தல் பத்திரம் மூல மாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு 50 சதவீதத்திற்கும் மேலாக வழங்கி உள்ளன. தேர்தல் பத்திரம் மூலமாக 8,752 கோடி வாரி சுருட்டி உள்ளது பாரதிய ஜனதா கட்சி. இந்த மெகா ஊழலை மத்திய அரசு எப்படி செய்து உள்ளது என்றால் அமலாக்குத்துறை, மத்திய விசாரணை முகமைகளை கொண்டு சோதனை நடத்துவது அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டுவது, லஞ்சம் வாங்க வாங்குவது பத்திரமாக வாங்குவது போன்ற வழிகள் மூலமாக நிதியை பெற்றுள்ளது'
என்று கூறினார்.