Skip to main content

ஓட்டு போடப்போகும்போது இதையெல்லாம் செய்யாதீர்கள்...

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

நாளை தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக அனைவரும் தயாராகி வருகின்றனர். வாக்கு செலுத்தப்போகும்போது என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். 

 

voting


 

  • வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் எவ்விதமான வாகனங்களையும் நிறுத்தக்கூடாது, கூட்டமாக நின்று பேசக்கூடாது. முதியவர்கள் மற்றும் இயலாதவர்கள் வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். 
     
  • மறக்காமல் பூத் ஸ்லிப்புடன், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ அட்டையை எடுத்துச்செல்லவேண்டும். 
     
  • முதலில் அடையாள அட்டை பரிசோதனை, அடையாள மை ஆகியவற்றை முடித்தபின்பு சென்று வாக்களிக்க வேண்டும். 
     
  • உங்கள் வாக்கு நீங்கள் வாக்களித்தவருக்குதான் பதிவாகிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். வாக்குப்பதிவு மின்னணு சாதனத்திலும், ஒப்புகைச்சீட்டு சாதனத்திலும் சரியாக இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும். அப்படி அதில் ஏதும் குளறுபடி இருப்பின் அதை அதிகாரியிடம் தெரிவிக்கவேண்டும். 
     
  • அங்கு சென்று சத்தமாக பேசுவது, கூடிப்பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. 
     
  • ஆண், பெண் வரிசை தனித்தனியாக இருக்கும், அதைப்பார்த்து நிற்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள், மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். பெண்களுக்கென இருக்கும் சிறப்பு வாக்குச்சாவடிக்குள் ஆண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
     
  • வாக்குச்சாவடிக்குள் செல்ஃபி எடுப்பது, வாக்கு செலுத்துவதை புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது. 
     
  • அடையாள அட்டை இல்லாமல் செல்லக்கூடாது, நீண்ட நேரம் வாக்கு செலுத்தும் இடத்தில் நிற்கக்கூடாது, வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. 
  •  
  •  
  •  

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.