Skip to main content

பாஜக வெல்ல முடியாத கட்சியா? அந்தக் கட்சி இழந்ததும் பெற்றதும்!

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

பாஜக சந்தித்த இடைத்தேர்தல்களின் முடிவுகளையும், மாநில சட்டமன்ற தேர்தல்களில் அந்தக் கட்சி கையாண்ட தந்திரங்களையும் கவனித்தால் இந்த உண்மை புரியும்.

 

Narendra modi

 

மோடி பதவியேற்ற 100 நாட்கள் முடிந்த நிலையிலேயே 10 மாநிலங்களில் 33 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உ.பி., குஜராத், தெலங்கானா மாநிலங்ளைச் சேர்ந்த 3 மக்களவை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 33 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜகவுக்கு சொந்தமான 24 தொகுதிகள் இருந்தன. இவற்றில் 13 தொகுதிகளை அது இழந்தது. உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் ராஜினாமா செய்த மக்களவைத் தொகுதியில் அவருடைய உறவினரே வெற்றி பெற்றார். தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்த தொகுதியில் அவருடைய கட்சியும், குஜராத்தில் மோடி ராஜினாமா செய்த வதோதரா தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றன. குஜராத்தில் பாஜகவுக்கு சொந்தமான 3 தொகுதிகளையும், ராஜஸ்தானில் பாஜகவுக்கு சொந்தமான 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது.

 

2015 ஆம் ஆண்டு தெலங்கானா, ம.பி.யில் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், டிஆர்எஸ்சும், காங்கிரஸும் தலா ஒரு தொகுதியை கைப்பற்றின. இதில் ம.பி.யில் பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியது.

 

2016ல் மேற்குவங்கம், அசாம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிங்களில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸும், ம.பி., அசாமில் தலா ஒரு தொகுதியை பாஜகவும் தக்கவைத்துக் கொண்டன.

 

amit shah

 

2016ல் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, புதுவை, அசாம், ஆகிய 5 மாநிலத் தேர்தல்களில் அசாமில் மட்டுமே பாஜகவின் கூட்டணி தந்திரம் வெற்றிபெற்றது. தேர்தலுக்கு முன், காங்கிரஸில் நீண்டகாலம் இருந்த தலைவர்கள் பலரை பதவி ஆசைகாட்டி பாஜக தன்பக்கம் இழுத்திருந்தது. இருந்தாலும் தனது தலைமையிலான கூட்டணி அரசு என்று அது சொல்லிக் கொண்டது. மற்ற நான்கு மாநிலங்களில் பாஜகவின் ஜம்பம் பலிக்கவில்லை.

 

அதன்பிறகு 2017ல் கோவா, குஜராத், ஹிமாச்சலபிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

 

இந்த மாநில தேர்தல்களில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி புது எழுச்சி பெற்றது. சொந்த மாநிலத்திலேயே பலவிதமான நாடகங்களை அரங்கேற்ற வேண்டிய நிலைக்கு மோடி தள்ளப்பட்டார். முந்தைய தேர்தலில் பெற்றிருந்த 115 இடங்களில் 99 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

 

இமாச்சலப்பிரதேசம், உ.பி., உத்தரகாண்ட் மாநிலங்களில் தனியாக ஆட்சி அமைத்த பாஜக, கோவா, மணிப்பூர், மாநிலங்களை ஆளுநர் உதவியோடு விலைக்கு வாங்கியது. இந்த களேபரத்தில், பஞ்சாபில் காங்கிரஸ் பெற்ற முக்கியமான வெற்றி மறைக்கப்பட்டது.

 

2017ல் பஞ்சாபில் குருதாஸ்பூர், ராஜஸ்தானில் ஆல்வர், ஆஜ்மீர், ஆகிய மூன்று மக்களவை தொகுதிகளிலும் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்தது. மேற்கு வங்கத்தில் உலுபேரியா மக்களவை தொகுதியில் திரிணாமுல் வெற்றிபெற்றது.

 

இப்படிப்பட்ட நிலையில்தான், 2018ல் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 25 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கையில் இருந்த திரிபுராவில் ஆளுங்கட்சிக்கு எதிரான முதலாளிகள், மற்றும் பழங்குடியினரின் எதிர்ப்புணர்வை கார்பரேட்டுகளின் உதவியோடு பணத்தை வாரியிறைத்து பாஜக அறுவடை செய்தது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியையும், அதன் 38 சதவீத வாக்குகளையும் மொத்தமாக பாஜக விலைக்கு வாங்கியிருந்தது.

 

மேகாலயாவில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற பாஜக, 21 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸை பின்னுக்கு தள்ளி, ஆளுநர் உதவியோடு மாநிலக்கட்சி ஆட்சி அமைக்க உதவியது. அதோடு அந்த அரசில் இடம்பெற்று பாஜக கூட்டணி அரசு என்று சொல்லிக்கொண்டது. நாகாலாந்திலும் இதே டெக்னிக்கை பயன்படுத்தியது.

 

இந்நிலையில்தான், உ.பி., பிகாரில் நடைபெற்ற 3 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இவற்றில் கோரக்பூர், புல்பூர் தொகுதிகள் முதல்வர் யோகி, துணை முதல்வர் மவுரியா ஆகியோர் வெற்றிபெற்ற தொகுதிகள் ஆகும். பிகாரில் அராரியா தொகுதியில் லாலுவின் ஆர்.ஜே.டி. வெற்றிபெற்றதன் மூலம் பாஜகவுடன் நிதிஷ்குமார் அமைத்த கூட்டணிக்கு மக்கள் பதிலடி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

2019 தேர்தலில் மீண்டும் மோடிதான் ஜெயிப்பார் என்று பாஜக கூறிவரும் நிலையில், இந்தத் தோல்விகள் அந்தக் கட்சியை இடிபோல தாக்கியிருக்கிறது. அதாவது, தற்போதைய நிலையில் மக்களவையில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடத்தைக் காட்டிலும் ஒரு இடம் குறைவாகவே வைத்திருக்கிறது.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.