Skip to main content

நமக்கு நல்ல சிக்னல் கிடைச்சிருக்கு..! அமைச்சர்களிடம் எச்சரிக்கை தொனியில் பேசிய எடப்பாடி!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

ddd

 

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் இடைக்கால பட்ஜெட் இம்மாதம் 22-ந்தேதி தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தல் காலம் என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அளிக்க திட்டமிட்டு, என்ன மாதிரியான சலுகைகளை அறிவிக்கலாம் என பொருளாதார நிபுணர்களுடன் விவாதித்து முடித்திருக்கிறார் எடப்பாடி.

 

குறிப்பாக, "இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பெண்கள், இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் நம்பிக்கையை தேர்தல் களத்தில் கவரும் வகையில் புதிய அறிவிப்புகள், இலவசங்கள், தள்ளுபடிகள் என சில பல அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவிக்க முடிவு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி'' என்கின்றனர் பேரவை செயலக அலுவலர்கள்.

 

இதுகுறித்து அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக கேபினெட் கூட்டத்தை 13-ந்தேதி தலைமைச் செயலகத்தில் நடத்திய எடப்பாடி, தமிழக தொழில்துறை மூலம் நிறைவேற்ற வேண்டிய சில திட்டங்களுக்கு ஒப்புதலைப் பெற்றிருக்கிறார். கேபினெட்டின் ஒப்புதல் பெறுவதையும் கடந்து, அந்த கூட்டத்தில், தேர்தல் அரசியல் மற்றும் கட்சி அரசியல் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த விவகாரம் கட்சியின் சீனியர்கள் மட்டத்தில் எதிரொலிக்கும் நிலையில், அது குறித்து நாம் விசாரித்தபோது, "கேபினெட் கூட்டம் முடிந்ததும் அதிகாரிகளை வெளியே அனுப்பிவைத்து விட்டு தேர்தலை சந்திப்பது பற்றி அமைச்சர்களிடம் விவாதித்துள்ளார் எடப்பாடி. அப்போது, உளவுத்துறை எனக்கு கொடுத்துள்ள சர்வே ரிப்போர்ட்டில், எந்த ஒரு கட்சிக்கும் 100 சதவீத ஆதரவு அலை வீசவில்லை. சர்வே எடுக்கும் போது ஒரு விதமாகவும், தனிப்பட்ட முறையில் பேசும்போது ஒரு விதமாகவும் கருத்துகளை வாக்காளர்கள் பதிவு செய்கிறார்கள். அதனால் தங்களின் விருப்பு வெறுப்புகளை ஓரங்கட்டி விட்டு தேர்தல் பணிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தினால் மூன்றாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது'' என உளவுத்துறை சொல்லியிருப்பதாக தெரிவித்துள்ளார் எடப்பாடி.

 

மேலும், ஒவ்வொரு தொகுதியிலுமுள்ள பிரச்சனைகள், வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் விவகாரங்கள், மக்களின் எதிர்பார்ப்புகள் என பல விசயங்களை உளவுத்துறை தனது ரிப்போர்ட்டில் கொடுத்திருப்பதையும் பகிர்ந்து கொண்ட எடப்பாடி, அம்மா (ஜெ.) இருக்கும் போது தேர்தலில் எப்படி கவனம் செலுத்துவோமோ அதே தீவிரத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் கொடுத்தது, விவசாயிகளின் கடன் தள்ளுபடி ஆகியவை நமக்கு நல்ல சிக்னலை தந்திருக்கிறது. புதுசா நாம் சொல்லப்போகும் அறிவிப்புகளும் நமக்கு நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். அதனால், அமைச்சர்கள் தங்களின் விருப்பு வெறுப்புகளை ஓரங்கட்டிவிட்டு தேர்தல் பணி செய்யுங்கள். மீண்டும் ஒரு குடும்பத்தின் அதிகார வளையத்துக்குள் நாம் சிக்கிவிடக் கூடாது எனச் சொல்லியுள்ளார் .

 

அப்போது குறுக்கிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்., "நாம் என்ன பேசுகிறோம்னு தெரியாமலே சில அமைச்சர்கள் பேசிவிடுகிறார்கள். அது சரியில்லை. சட்ட அமைச்சர் (சி.வி.சண்முகம்) சமீபத்தில் பேசியவை குறிப்பிட்ட சமூகத்தை இழிவு செய்வதாக இருக்கிறது. ஒருமையில் பேசுவதும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதுமான பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும்'' எனச் சொல்ல, சீனியர் அமைச்சர்கள் சிலரும் ஓபிஎஸ்சின் கருத்தை ஆமோதித்ததோடு, "சட்ட அமைச்சர் அப்படி பேசியிருக்கக் கூடாது. அவரது வார்த்தைகள் ரொம்பவும் ஓவர்'' என ஆதங்கப்பட்டிருக்கிறார்கள்.

 

ddd

 

"நேற்றே அதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டேன்'' எனச் சொன்ன சி.வி.சண்முகம், "குறிப்பிட்ட சமூகத்தை மையப்படுத்தி நான் பேசவில்லை. என் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. என்னுடைய வார்த்தைகள் அவரை (டிடிவி தினகரன்) மையப்படுத்தி மட்டும்தான்'' எனச் சொல்லியிருக்கிறார்.

 

அப்போது, "இனி பேட்டி கொடுக்கும் போதோ, நிகழ்ச்சிகளில் பேசும் போதோ அமைச்சர்கள் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் ஒருமையில் பேசாதீர்கள். அநாகரீகமாக சின்னதாக நாம் நடந்துகொண்டால் கூட அதுதான் பெரிதாகக் காட்டப்படும். அநாகரீகமாக நாம் நடந்து கொள்வதைத்தான் எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள். அதற்குப் பலியாகிவிடாதீர்கள்'' என எச்சரிக்கை தொனியில் பேசியுள்ளார் எடப்பாடி" என்று அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு நடந்ததைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அதிமுகவின் சீனியர்கள்.

 

cnc

 

இந்த விவாதம் முடிந்ததும் ஒவ்வொரு அமைச்சரும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறி தங்களின் துறை அலுவலகத்திற்குத் திரும்பினர். சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி மூவரும் காரிடாரில் பேசிக்கொண்டே நடந்தனர். அப்போது, "நிதானமிழந்து நான் பேசுவதாக தினகரன் சொல்கிறார். நிதானமிழந்துங்கிற வார்த்தை, கேட்க டீசண்டாக இருக்கலாம். ஆனா, அது என்னை கேவலப்படுத்துற வார்த்தைதானே? அதான், அப்படி பேசினேன்'' என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

 

சண்முகத்தின் பேச்சு அ.ம.மு.கவில் மட்டுமின்றி, அதிமுகவில் சாதி ரீதியாகவும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. அதாவது, இரு பெரும் சமூகத்திற்கிடையே மோதலை உருவாக்க ஆட்சியாளர்கள் தரப்பில் சிலர் முயற்சிக்கிறார்கள். அதற்கு சண்முகத்தைப் பயன்படுத்துகின்றனர் என்கிற குரல் அதிமுகவிலுள்ள வன்னியர் சமூகத் தலைவர்களிடம் எதிரொலிக்கிறது.

 

 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.