Skip to main content

"விஜய் வளர வளர எனக்கு அந்த ஆசை வந்தது... ஜெ.,விடம் 15 சீட் கேட்டது உண்மைதான்..." - எஸ்ஏசி பேட்டி!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

ுி

 

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் அடிக்கடி அரசியல் தொடர்பான கருத்து மேடைகளில் பேசும் வழக்கம் உடையவர், தன்னுடைய படங்களைப் போலவே எதையும் மறைத்து பேசத் தெரியாதவர். தற்போது அவரது மகனும், நடிகருமான விஜய் இடையே வருத்தம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், விஜய் அரசியல் வருகை பற்றி அவரிடம் கேள்விகளை எழுப்பினோம். எவ்வித தயக்கமுமின்றி நம்மிடம் அவர் பேசியதாவது, " எனக்கு அரசியல் ஆசை எப்போதும் இருந்ததில்லை என்பதை பலமுறை தெளிவுப்படுத்தியிருக்கிறேன்.

 

விஜய்க்கு ஆரம்பத்தில் படத்தில் நடிப்பதற்கு பல்வேறு இயக்குநர்களிடம் நானே பேசினேன். அதற்கு தகுந்த சூழ்நிலை அமையாத காரணத்தால் நானே அறிமுகப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முதல் படம் சுமாராகப் போனது, பிறகு அடுத்தடுத்து நல்ல படங்கள் வந்து, இன்றைக்கு அவர் இந்த நிலையில் இருப்பதற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன் என்பது உண்மை. அவரின் வளர்ச்சியை அருகில் இருந்து பார்த்து வந்ததால் அவர் வளர வளர அவரை அரசியலுக்கு அழைத்து வந்து மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது உண்மைதான். நான் எதையும் மறைத்து பேச மாட்டேன் என்பது உங்களுக்கு தெரியும். 

 

எனவே அந்த எண்ணம் எனக்கு வந்ததை எடுத்து, சினிமாவில் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதை போல அரசியலிலும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சில முயற்சிகளை எடுத்தேன். அதில் அவருக்கு உடன்பாடில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர் நடிக்கும் படத்தின் கதை கேட்பது, நல்ல கதையை பரிந்துரை செய்வது என்று இருந்தேன், சில ஆண்டுகளாக அவரே பார்த்துக்கொள்கிறார். நான் எதிலும் தலையிடுவதில்லை. எனவே இதற்கு பிறகு அவர் அரசியலுக்கு வருவாரா என்று அவர் சொன்னால்தான் எனக்கே தெரிய வரும். தற்போது உள்ளாட்சி தேர்தலில் அவரது ரசிகர்கள் போட்டியிடுவதாக தகவல் வந்திருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2011ம் சட்டப்ரேவை தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தோம்.

 

நாங்கள் எங்களுக்கு 15 சீட் கேட்டோம். அவர்கள் 3 தருவதாக கூறினார்கள். நாங்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. நாங்கள் ஆதரவு தருகிறோம், ஆனால் எங்களுக்கு இந்த எண்ணிக்கையில் சீட் வேண்டாம்,  ஆதரவு மட்டும் முழுவதுமாக தருகிறோம் என்றோம். என்னை 40 இடத்தில், அதாவது திமுக வலிமையாக இருந்த இடங்களில் பேச சொன்னார்கள், நானும் பேசினேன். தேர்தல் வெற்றிக்கு பிறகு அவர்களின் வெற்றிக்கு அணிலாக இருந்தோம் என்று தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டோம். அதையே அந்த அம்மாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை" என்றார்.


 

Next Story

அப்பாவின் பேச்சை அப்பவே கேட்காத விஜய்

Published on 05/01/2023 | Edited on 06/01/2023

 

 “The criticism of Vijay; The unfulfilled dream of a doctor” - S.A. Chandrasekar

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களைச் சந்தித்தோம். அப்போது அவரிடம் “விஜய்யின் சினிமா ஆசையை ஆரம்பத்தில் நிறைவேற்ற ஏன் தயக்கம் காட்டினீர்கள். அத்தோடு விஜய் நடிக்க ஆரம்பித்த பிறகு வந்த விமர்சனம் என்ன” என்ற கேள்வியை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’ ஓடவில்லை. ஆனால் அந்த படப்பிடிப்பின் நாட்களில் விஜய்க்குள் ஒரு நடிகன் ஒரு கலைஞன் இருப்பதை நான் உணர்ந்தேன். அவனை வெளியே கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் அவரை வைத்து நான் பல படங்கள் எடுத்தேன். 

 

நாளைய தீர்ப்பு ஓடவில்லை அதனால் விமர்சனம் எதுவும் வரல., அடுத்து செந்தூர பாண்டிக்கு வரவில்லை. அது விஜயகாந்த்திற்காக ஓடியது என்று விட்டுட்டாங்க போல. அடுத்தபடியாக ரசிகன், முழுக்க முழுக்க ரொமாண்டிக் கமர்சியல் படம் 150 நாட்கள் ஓடியது. அதற்கு தான் விமர்சனம் வந்தது.  

 

நான் விஜய்யை சினிமாவுக்கு போகக் கூடாது என்று சொல்லவில்லை. என்னோட பொண்ணு மூன்று வயதில் கேன்சர் நோயால் இறந்து போயிடுச்சு. அது என்னை ஆறு மாத காலம் இயங்கவிடாமல் செய்தது. அதனால் எனக்கு விஜய்யை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதுவும் கேன்சர் ஸ்பெசலிஸ்ட் டாக்டராக்கி இலவச மருத்துவமனை ஒன்றை உருவாக்கி முழுக்க முழுக்க கேன்சரை குணப்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். இனியொரு குழந்தை கேன்சரால் இறந்துவிடக்கூடாது என்பது என் நோக்கமாக இருந்தது.

 

விஜய்க்கு நடிப்பின் மீதே ஆர்வம் இருந்ததால் அவரது அப்பாவின் கனவு லட்சியமான கேன்சர் ஸ்பெசலிஸ்ட் டாக்டர் கனவு நிறைவேறாமல் போனது. 

 


 

Next Story

“குடும்ப உறவுகள்தான் மிகவும் முக்கியம்" - நினைவுகளைப் பகிர்ந்த இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

“Family relations are the most important - Director S.A.Chandrasekar shared his memories 

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களைச் சந்தித்தோம். அப்போது அவரிடம் நாம், “உறவுகளின் முக்கியத்துவம் பற்றியும், நீங்கள் சமூக அக்கறை உள்ள படங்கள் எடுக்க காரணம் என்னவாக இருந்தது” போன்ற கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு...

 

என்னதான் அப்படி இப்படின்னு போனாலும் சண்டை சச்சரவு ஆனாலும் குடும்ப உறவுதான் முக்கியம். பணமா? பாசமா? என்று பார்த்தால் பாசம்தான் முக்கியம். பணம் பெரிசில்லை வாழ்க்கையில். உறவுகளின் முக்கியத்துவம் இப்பெல்லாம் இல்லாமல் போய்விட்டது. இப்பெல்லாம் உறவுகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. கணவன் மனைவிதான் எல்லாமே என்றாகிவிட்டது. அதிகபட்சம் போனால் கூட குழந்தைகள் இருக்கிறார்கள். அவ்வளவுதான் என்று ஆகிவிட்டது. 

 

ஸ்ரீதர், கே.சங்கர், கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள் உணர்வுக்கும், உறவுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் தந்து படமெடுத்த சமயத்தில், நான் சினிமாவில் நுழைந்தபோது சமூக அக்கறையை மையமிட்டு படங்கள் எடுத்தேன். அதுவே எனது பாணியும் ஆகிப் போனது.

 

சட்டம் எல்லாருக்குமே சமமாக இருக்கிறது. ஆனால் வேறுபாடு ஏன் ஏற்படுகிறது என்பதை மையமிட்டு படங்களை எடுக்க ஆரம்பித்தேன். அது எனக்குத் தனியான அடையாளத்தை தந்தது. சட்டம் சந்திரசேகர் என்பதுதான் என் பெயராகவே இருந்தது.