Skip to main content

பசுமை சாலைக்காக முடக்கப்பட்டதா புதிய இரயில்வே பாதை ?. - வெளிவரும் புதிய தகவல்கள்

Published on 20/06/2018 | Edited on 20/06/2018

விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை திண்டிவனம் டூ ஜோலார்பேட்டைக்கு புதியதாக இரயில் பாதை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை. நீண்டகால கோரிக்கை கடந்த 2008ல் செயல்பாட்டுக்கு வந்தது. அந்த திட்டம் 4 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. அந்த திட்டம் நிறுத்தப்பட காரணம்மே சேலம் – சென்னை இடையிலான பசுமை வழி விரைவுச்சாலை திட்டம் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 


திண்டிவனத்தில் இருந்து பெங்களுரூ செல்ல வேண்டும் என்றால் செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர் என 270 கி.மீ சாலை வழியாக பயணம் செய்து பெங்களுரூ செல்ல வேண்டும். திண்டிவனம் டூ கிருஷ்ணகிரி வரை இருவழிப்பாதை, அதுவும் கண்டும் குழியுமான சாலை. திண்டிவனத்தில் இருந்து பெங்களுரூ போய்சேர போய்ச்சேர 10 மணி நேரமாகிவிடும். இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்துகளில், கார்களில் பயணம் செல்கின்றனர். திண்டிவனத்தை விட செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, சிங்காரப்பேட்டை மக்கள் ஆயிரக்கணக்கில் பெங்களுருவில் உள்ளனர். அவர்கள் அனைவரும்மே பேருந்தையே பயன்படுத்துகின்றனர். இந்த மார்கத்தில் இரயில்பாதை அமைத்து இரயில் சேவை தொடங்கினால் மக்களின் பிரச்சனை தீரும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. இதனை பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்தது.
 


2004ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்துக்கொண்டு இருந்தபோது, அந்த அமைச்சரவையில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கு வகித்துக்கொண்டு இருந்தது. அப்போது மக்களின் நீண்ட கால கோரிக்கையான திண்டிவனம் டூ ஜோலார்பேட்டை, திண்டிவனம் டூ நகரி இடையே இரயில் பாதை அமைக்கும் திட்டத்தினை கொண்டு வந்தார் இரயில்வே இணை அமைச்சராக இருந்த வேலு. அதற்கான ஆய்வுக்கும் நிதி ஒதுக்கினார். திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு இரயில் சேவை கிடையாது. அதேபோல் திருவண்ணாமலையில் இருந்து பெங்களுரூக்கும் இரயில் சேவை கிடையாது. சென்னைக்கு இரயில் இயக்க வேண்டும்மென்றால் வேலூர், காட்பாடி வழியாகத்தான் இயக்கவேண்டும். அதேபோல் விழுப்புரத்தில் இருந்து பெங்களுரூக்கு ரயில் இயக்க வேண்டும் என்றாலும் திருவண்ணாமலை, வேலூர் காட்பாடி வழியாகத்தான் செல்ல வேண்டும். இது தலையை சுத்திக்கொண்டு மூக்கை தொடும் வேலை. இதுவே, திண்டிவனம் டூ ஜோலார்பேட்டைக்கு திருவண்ணாமலை வழியாக இரயில் பாதை அமைத்தால் வேலூர், காட்பாடி செல்லாமல் பெங்களுரூவுக்கும், சென்னைக்கும் திருவண்ணாமலையில் இருந்து செல்லலாம், நேரம் குறைவு, எரிபொருள் மிச்சம், வாரியத்துக்கும் நல்ல வருமானம் கிடைக்கும், இந்த ஒரு பாதையால் என இரயில்வே துறை அதிகாரிகள் கணக்கிட்டனர்.

 

Was the new railway path frozen for the green road? - new information coming out


 


திண்டிவனத்தில் இருந்து செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், சிங்காரப்பேட்டை, திருப்பத்தூர் வழியாக ஜோலார்பேட்டைக்கு 160 கி.மீ தூரம் இரயில்பாதை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக திண்டிவனம் டூ திருவண்ணாமலை இடையே முதலில் இரயில் பாதை அமைக்க 2008 செப்டம்பர் மாதம் செஞ்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. திண்டிவனம் டூ திருவண்ணாமலை இடையே 71 கி.மீ மின்பாதை 227 கோடி திட்டமதிப்பில் அமைப்பது என மத்தியரசு அறிவித்தது. இந்த பாதையில் 8 பெரிய பாலங்கள், 68 சிறிய பாலங்கள், திண்டிவனம் டூ திருவண்ணாமலை இடையே 8 இடங்களில் இரயில் நிலையங்கள் அமைப்பது எனவும், திருவண்ணாமலையை ஜங்ஷனாக மாற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக 2008ல் 10 கோடி, 2009ல் 20 கோடி, 2010ல் 40 கோடி, 2011ல் 20 கோடி என மத்திய இரயில்வே துறை ஒதுக்கியது. சங்கராபரணி, வராகநிதி, துரிஞ்சலாறு கடக்கும் பகுதியில் மட்டும் இரயில்வே பாலங்கள் அமைக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்தி தரப்படும் வேலைகள் அடுத்து வந்த ஜெ ஆட்சிக்காலத்தில் நொண்டியடித்தன. இதனால் ஒதுக்கப்பட்ட பணம் திரும்ப சென்றதால் 2012க்கு பின் நிதி ஒதுக்குவதை மத்திய இரயில்வே வாரியம் நிறுத்திவிட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
 


அதற்கான காரணம் இப்போதுதான் வெளிவந்துள்ளது.  திருவண்ணாமலையை அடுத்த கவுத்திமலையில் இரும்புதாது வெட்டியெடுக்க ஜிண்டால் முயன்றது. அந்த நிறுவனத்துக்கு சேலத்திலும் நிறுவனம் உள்ளது. இங்கு வெட்டியெடுக்கப்படும் கனிம வளத்தை சேலத்துக்கு அனுப்பி அங்கு அதை பிரித்துயெடுத்து மீண்டும் சென்னை துறைமுகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுயிருந்தது. இதற்கு சாலை மார்க்கத்தை விட இரயில் மார்க்கம் சரியாக இருக்கும் என திட்டமிடப்பட்டுயிருந்தது. திண்டிவனம் – ஜோலார்பேட்டை பாதை அமைத்தால் ஜிண்டாலுக்கும் சாதகமாக இருக்கும் என கணக்கிடப்பட்டது. திருவண்ணாமலைக்குள் ஜிண்டால் வரவிடாமல் தடுத்து விரட்டியது மக்கள் போராட்டம். அந்த நிறுவனம்மே இந்த திட்டத்தை முடக்க காரணமாகிவிட்டது என்கிறார்கள் சிலர்.
 

நிதி ஒதுக்கப்படாமல் நிறுத்தப்பட்ட இந்த திட்டத்தினை மோடி பிரதமராக வந்தபின் சேலம் – சென்னை இடையே பசுமை விரைவுச்சாலை அமைக்கப்படும்போது, வர்த்தக ரீதியாக திருவண்ணாமலை டூ திண்டிவனம் ரயில்பாதை திட்டம் நட்டத்தில் இயங்கும், நட்டத்தில் இயங்குவதற்கு எதற்கு புதிய மின்பாதை அமைக்க வேண்டும் என முடிவு எடுத்து இந்த திட்டத்தினை நிறுத்திவைத்துள்ளார்கள் என்கிறார்கள் பசுமைவழி சாலை எதிர்ப்பு போராட்டக்குழுவில் உள்ள சிலர். இந்த திட்டத்தை செயல்படுத்துங்கள் என எம்.பியாகி 4 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை திருவண்ணாமலை எம்.பி வனரோஜா, ஆரணி எம்.பி செஞ்சி.ஏழுமலை என இரண்டு அதிமுக எம்.பிக்களும் குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
 

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, இந்த திட்டம் முடங்கியிருக்க பசுமை வழிச்சாலையும் ஒருக்காரணம் என்கிறார்கள். அரசாங்கம் என்பது மக்களுக்கானது என்கிற கருத்து மெல்ல மெல்ல அழிந்து கார்ப்பரேட்களுக்கு என்பது வெட்ட வெளிச்சமாகிவருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.