Skip to main content

பெர்சண்டேஜ் உலகில் நேர்மைக்கு ஏது இடம்? குட்டிச்சுவரான நெடுஞ்சாலைத் துறை!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

wall

 

“நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களில் பலரும், தங்களது அதிகாரத்தை, மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துவது இல்லை. தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் என 5 அடுக்குமுறை உள்ளது. இவர்கள், சாலை மற்றும் இதர பணிகளுக்கு மதிப்பீடு செய்து, பணத்தை அனுமதிக்கும் அதிகாரத்தை, நேர்மையாகப் பயன்படுத்தினால், இத்துறையில் ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வரை, மக்கள் பணம் விரயமாவதைத் தடுக்க முடியும். இவர்களோ, அரசியல்வாதிகள் எப்படியெல்லாமோ பணத்தைச் சுருட்டுவதற்கு வழி ஏற்படுத்தி தருகின்றனர். வெளிப்படையாக கமிஷன் பெறுவதும் இத்துறையில் அங்கீகரிக்கப்படுகிறது’’ என்கிறார் அத்துறையின் நேர்மையான பொறியாளர் ஒருவர்.


தற்போது, கோட்டபொறியாளருக்கு, திட்ட மதிப்பீடு ஒன்றுக்கு, ரூ.2 லட்சம் வரை அனுமதி வழங்கும் அதிகாரம் நடைமுறையில் உள்ளது. இந்த அதிகாரத்தை வைத்து, தமிழகம் முழுவதும், பெரிய அளவில், கொள்ளையடிக்கின்றனர். அதாவது, தடுப்புச் சுவர் என்ற பெயரில், ரூ.2 லட்சத்துக்கு மதிப்பீடு வழங்கும் அதிகாரம், தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

ஒரு அலுவலகத்திற்கு குறைந்தபட்சம் 50 தடுப்புச் சுவர்களுக்காவது எஸ்டிமேட் தயாரிப்பார்கள். அதற்கான ஒப்பந்தப் பணிகளை, சின்ன ஒப்பந்தக்காரர்கள் மூலம் செய்வதற்கு கோட்ட பொறியாளர் அனுமதியளிப்பார். அவர்களிடமிருந்து 30 பெர்சன்டேஜ் கமிஷனை நேரடியாக, அவர் பெற்றுக்கொள்வார். அதன்பிறகு, உதவி கோட்ட பொறியாளருக்கும், உதவி பொறியாளருக்கும் தலா 5 பெர்சன்டேஜ் என, மொத்தம் 40 பெர்சன்டேஜ், முன்கூட்டியே போய்ச் சேர்ந்து விடும். அடுத்து, விரைவாகப் பணிகளை முடிக்கச் செய்து, ஒப்பந்தக்காரர்கள் பில் தொகையைப் பெறும்போது, அலுவலகச் செலவுக்கென்று 10 பெர்சன்ட் தொகையைக் கொடுத்தாக வேண்டும். ஆக, தடுப்புச்சுவரின் 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், ரூ.1 லட்சம், பெர்சன்டேஜ் கணக்கில் போய்விடும். அதனால், மதிப்பீட்டில் உள்ளபடி பணி நடப்பதில்லை. தேவையே இல்லாத இடத்தில் தடுப்புச் சுவர் கட்டவேண்டும் என்று மதிப்பீடு செய்வதால், ஒரு கோட்டத்தில் 5 பிரிவாக அலுவலகங்கள் இருந் தால், குறைந்தபட்சம் ரூ.5 கோடி விரயமாகிவிடும். தமிழகம் முழுவதும் 300 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. ஒரு அலுவலகத்துக்கு ரூ.5 கோடி என்றால், மொத்தம் ரூ.1,500 கோடி ஆகிறது. ஆண்டுக்கு இருமுறை என்பதால், ரூ.3,000 கோடி வரை ஊழல் நடக்கிறது. கரோனா காலத்திலும் ஊழல் குறையவில்லை.

 

"திட்ட மதிப்பீடு மற்றும் தடுப்புச்சுவர் கட்ட வேண்டிய அவசியம் உள்ள இடங்களைத் தேர்வு செய்யும் அதிகாரம், அந்தந்த பகுதி மக்களிடம் இருந்தால் ஊழலைத் தடுக்கலாம். அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டால், 90 பெர்சன்ட் ஊழலை இல்லாமல் செய்துவிட முடியும்'' என்றார் நேர்மையான அதிகாரி.

 

பெர்சண்டேஜ் உலகில் நேர்மைக்கு ஏது இடம்?

 

-ராம்கி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.