Skip to main content

கட்சியினரின் உள்ளடி வேலை! துரோகிகளை களையெடுங்கள்! திமுக விசுவாசிகள் குரல்!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021
ddd

 

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் ஒரு பங்கு இடத்தினை எதிர்க்கட்சிகள் பிடித்துள்ளன. அதிலும் தி.மு.க 173 தொகுதிகளில் போட்டியிட்டு 125 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும் 49 இடங்களில் தோல்வி என்பதை தி.மு.க.வினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோல்வியடைந்த தொகுதிகளில் ஏன் தோல்வி என்பதை கட்சி தலைமை தீவிரமாக விசாரணை நடத்தவேண்டும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற குரல்கள் தி.மு.க.வினரிடம் எழுந்துள்ளன.

 

"கொங்கு மண்டலம் எனப்படும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 68 தொகுதிகள் உள்ளன. இதில் 44 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016 தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்ற கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் சில தொகுதிகளில் இந்தமுறை தி.மு.க தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் சாதி வாக்குகள் மட்டுமல்ல சொந்தக் கட்சியினரின் உள்ளடி வேலையும் பின்னணியில் இருக்கிறது. அதனால் இதில் தலைமை தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். தவறு செய்த நிர்வாகிகள், செயல்படாத நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்காக 46 தனித்தொகுதிகள் உள்ளன. இந்த தனித்தொகுதிகளில் எப்போதும் அ.தி.மு.க தனிக்கவனம் எடுத்து செயல்படுகின்றது என தேர்தலுக்கு முன்பே நக்கீரன் எச்சரித்தது. எச்சரிக்கைக்குப் பின்பும் தி.மு.க. பெரியளவில் கவனத்தை செலுத்தவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 46 தனித்தொகுதிகளில் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு மீதியிருந்த 27 இடங்களில் நேரடியாக போட்டியிட்டோம். அ.தி.மு.க, கூட்டணி கட்சிகளுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு மீதி யிருந்த 38 இடங்களில் அதுவே போட்டியிட் டது. தேர்தல் முடிவில் தனி தொகுதிகளில் மட்டும் தி.மு.க. கூட்டணி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் அ.தி.மு.க மட்டும் 17 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

 

2011-ல் 46 தனி தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 2016-ல் அ.தி.மு.க 32 இடங்களிலும், தி.மு.க 14 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தல்களோடு ஒப்பிடும்போது தனித்தொகுதி களில் தி.மு.கவின் வெற்றி பெரியது தான். அதேநேரத்தில் தி.மு.க சுலபமாக வெற்றி பெறவேண்டிய தொகுதிகளில் தேர்தலுக்கு முன்பே குறிப்பிட்டதுபோல் வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி நடந்து தோல்வியை சந்தித்துள்ளது. அதாவது கே.வி.குப்பம், அரூர், திண்டிவனம் போன்ற தொகுதிகளில் உட்கட்சி பிரச்சனையும், வேட்பாளர் தேர்வுமே குளறுபடி'' என்கிறார்கள் தி.மு.க பிரமுகர்கள்.

 

"கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை, சேலம் மாவட்டங்களில் படுதோல்வி யடைந்தது ஏன் என்கிற கேள்வியோடு எம்.பியும், கழக சட்டத்துறை செயலாளருமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் ஒரு குழுவை அமைத்து நேரடியாக கள விசாரணைக்கு அனுப்பியுள்ளார் தி.மு.க தலைவரான முதல்வர் ஸ்டாலின். அந்த டீமும் உன்னிப்பாக அனைத்தையும் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மற்ற மாவட் டங்களில் தோல்வியடைந்த தொகுதிகளில் ஏன் தோல்வி என்பதை விசாரணை நடத்த வேண்டும். தி.மு.க போட்டியிட்ட ஆரணி, போளூர், கே.வி.குப்பம், திண்டிவனம், மயிலம், கிருஷ்ணகிரி, பென்னாகரம் போன்ற தொகுதிகளும் அரக்கோணம், வாணியம்பாடி போன்ற கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் தி.மு.க பலமாகவுள்ள தொகுதிகள். இங்கெல்லாம் தி.மு.க தோல்வியடைய காரணம், கட்சியில் உள்ள துரோகிகள் தான். அந்த துரோகிகள் யார் என்பது வேட்பாளர்களுக்கு, கட்சியின் தீவிர விசுவாசிகளுக்கு நன்றாக தெரியும். அவர்களிடம் விசாரித்து துரோகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

2018-ல் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் வரை அறிவாலயத்துக்கு அழைத்து நேரடியாக சந்தித்து தங்கள் பகுதியில் கட்சியில் உள்ள பிரச்சனைகளை கேட்டார். புகார் பெட்டி வைத்து தொண்டர்களின் மனநிலையை அறிந்தார் தலைவர் ஸ்டாலின். அந்த புகார்களை தலைமை கழக நிர்வாகிகளை வைத்து ரகசிய விசாரணை நடத்தி, தவறு செய்த நிர்வாகிகளை கட்சி பதவிகளில் இருந்து மாற்றம் செய்து டம்மியாக்கினார். அதுவும் பாதியில் நிறுத்தப்பட்டது. அதேபோல் இப்போதும் நடக்காமல், தவறு செய்த நிர்வாகிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல், ஆட்சிக்கு வந்துவிட்டால் கட்சி வளர்ந்துவிடாது. தொய்வான பகுதியில் கட்சியை வளர்க்க தீவிரமாக முயற்சி செய்யவேண்டும். அதற்கு முதலில் துரோகிகளை களையெடுக்க வேண்டும். சாதி, மதங்களை கடந்து மண் மீது, மொழி மீது, கட்சி மீது, மக்கள் மீது பற்றுக்கொண்ட இளைஞர்களை இயக்கத்துக்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் கட்சி இன்னும் வலிமையடையும்'' என்கிறார்கள்.

மக்களின் நலன் காக்கும் முதல்வர் கட்சித் தொண்டர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்வாரா?

 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.