Skip to main content

20 நாளில் 300 சதவீதம் லாபம் கொடுத்த வோடபோன் ஐடியா பங்குகள்! முதலீட்டாளர்கள் காட்டில் அடைமழை!!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

 Vodafone Idea shares gain 300% in 20 days,  Investors money gained

இந்திய டெலிகாம் துறைகளில் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்களின் பங்குகள் மளமளவென உயர்ந்துள்ளன. குறிப்பாக, கடந்த இருபதே நாள்களில் வோடபோன் ஐடியா பங்குகளின் மதிப்பு 300 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது. 
 


முகேஷ் அம்பானியன் ரிலையன்ஸ் ஜியோ (ஆர்ஜியோ) நிறுவனத்தில் பேஸ்புக் நிறுவனம் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளது. மேலும், ஆர்ஜியோ நிறுவனம் சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி, ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்களிடமும் கணிசமாகப் பங்குகளைக் கைமாற்றிவிட்டு 75 ஆயிரம் கோடிகளைத் திரட்டி விட்டார் முகேஷ் அம்பானி. 

இந்தியாவில், தொலைத்தொடர்பு துறையில் ஆர்ஜியோ வருகைக்குப் பிறகு ஏனைய சிறு நிறுவனங்கள் பலத்த அடி வாங்கின. இந்த வர்த்தகப் போட்டியில் பார்தி ஏர்டெல் இரண்டாம் இடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் வோடபோன் ஐடியா நிறுவனமும் களத்தில் நிற்கின்றன. இந்நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்யப்போவதாகத் தகவல்கள் வெளியானதால், அந்நிறுவனத்தின் பங்குகளும் கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்தன. திங்களன்று பார்தி ஏர்டெல் பங்குகள் அதிகபட்சமாக 593 ரூபாய் வரை சென்று, இறுதியில் 583- இல் நிறைவடைந்தது.

ஆர்ஜியோவுக்கு பேஸ்புக், பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு அமேசான் என பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது கண் வைக்க, கூகுள் நிறுவனம் நாட்டின் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமான வோடபோன் ஐடியாவிடம் இருந்து 5 சதவீத பங்குகளை வாங்க இருப்பதாக கடந்த மே இறுதியில் தகவல்கள் கசிந்தன. இப்போது வரை அந்தத் தகவலை கூகுள் நிறுவனமோ, வோடபோன் ஐடியா நிறுவனமோ ஆணித்தரமாக மறுக்கவில்லை என்பதால் முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வோடபோன் ஐடியாவில் முதலீடுகளைக் கொட்டி வருகின்றனர்.

இதனால் கடந்த 20 வேலை நாள்களில் மட்டும் இந்நிறுவனப் பங்குகள் 50 சதவீதம் அல்ல... 100 சதவீதம் அல்ல... கிட்டத்தட்ட 300 சதவீதம் வரை தடாலடியாக உயர்ந்து இருக்கின்றன. 

 

 


கடந்த வெள்ளியன்று (ஜூன் 5) வோடபோன் ஐடியா நிறுவன பங்குகள் 10.50ல் முடிவடைந்தன. இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு திங்களன்று சந்தை திறந்தவுடனேயே நிப்டியில் இப்பங்கின் விலை 11.55 ஆக என்ற நிலையில் வர்த்தகம் துவங்கியது. அதிகபட்சமாக 12.60 ரூபாய் வரை உயர்ந்து, இறுதியில் 12 ரூபாயில் முடிவடைந்தது. 

கடந்த மே 11- ஆம் தேதி, வோடபோன் ஐடியா நிறுவனப் பங்குகள் விலை 4.20 ரூபாயாக இருந்தது. அடுத்த ஒரு வாரம் இப்பங்குகள் 20 பைசா, 30 பைசா என மெதுவாக உயர்ந்து வந்த நிலையில்தான், அதாவது மே 28- ஆம் தேதியன்று, இந்நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாகத் தகவல்கள் கிளம்பின. ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் ஆர்ஜியோவில் முதலீடு செய்வதாகத் தகவல் பரவிய அடுத்தடுத்த சில நாள்களிலேயே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் மளமளவென எகிறின. 

அந்த அனுபவம்தான் முதலீட்டாளர்களிடையே வோடபோன் ஐடியா பங்குகளின் மீதும் பார்வையைக் குவித்திருக்கிறது. முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டு இப்பங்குகளை வாங்கி வருவதால் 20 வேலை நாள்களில், மே 11- ஆம் தேதி நிலவரத்துடன் (4.20) ஒப்பிடுகையில், தற்போது 300 சதவீதம் வரை (12.60) வரை உயர்ந்திருக்கிறது. இது, முதலீட்டாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

இது ஒருபுறம் இருக்க, இண்டஸ் டவர்ஸ் என்ற செல்போன் கோபுரம் கட்டுமான நிறுவனத்துடன் வோடபோன் ஐடியா வரும் 11- ஆம் தேதி புதிய வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்ள இருப்பதும், இப்பங்குகளின் விலையேற்றத்துக்கு இன்னொரு முக்கியக் காரணம் என்கிறார்கள். ஓராண்டுக்கு முன்னதாகக் கடும் சரிவைச் சந்தித்த இந்நிறுவனம், மூடப்படலாம் என்ற தகவல்களும் வேகமாகப் பரவின. ஆனால் ஓரே ஆண்டில் மீண்டும் பங்குகளின் விலையேறியதை அடுத்து, இதன் சந்தை மதிப்பும் கூடியுள்ளது.
 

http://onelink.to/nknapp


கடந்த மே 29- ஆம் தேதி, அதிகபட்சமாக வோடபோன் ஐடியா பங்குகள் ஒரே நாளில் 34 சதவீதம் வரை உயர்ந்தது. திங்களன்று இப்பங்குகள் 14.29 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தன. கடந்த 52 வாரங்களில் இப்பங்குகள் அதிகபட்சமாக 14 ரூபாயாக உயர்ந்துள்ளது. குறைந்தபட்சமாக 2.40க்கு விற்றுள்ளன. இன்று (ஜூன் 9) கடந்த 52 வாரத்தில் அதிகபட்ச விலையைக் கடக்கும் என்பதோடு, கடந்த ஓராண்டில் இல்லாத புதிய உச்சத்தை எட்டும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களிடம் நிலவுகிறது. 


 

 

Next Story

சோதனை மேல் சோதனை; ஹர்திக் பாண்டியாவுக்கு விபூதி அடித்த சகோதரர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Police action Hardik Pandya's brother for Money laundering case

முன்னணி இந்திய கிரிக்கெட் அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்து வருபவர் ஹர்திக் பாண்டியா. முன்னதாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த ஹர்திக் பாண்டியா அந்த அணியிலும் கேப்டனாகத் தொடர்ந்தார். ஆனால், மும்பை அணியின் நட்சத்திர வீரர், ரோகித் ஷர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிற்கு சென்றதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ஆண்டு கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு மோசமான வரவேற்பு கிடைக்கிறது. ஆனாலும், ரசிகர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியை கேப்டனாக வழி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தன் சகோதரர் ஒருவரால் மேலும் ஒரு பிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் உடன்பிறந்த சகோதரர் க்ருணால் பாண்டியா. இவரும் இந்திய அணியிலும், ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் சகோதரர்கள் இருவரும் பிஸினஸிலும் காலூன்ற நினைத்துள்ளனர். அதற்கு பாண்டியா சகோதரர்களின், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா துணையாக வந்துள்ளார். மூவரும் சேர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ‘பாலிமர்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா தலா 40 சதவீதம் என்றும், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா 20 சதவீதம் என்றும் முதலீடு செய்தனர். ஒப்பந்தத்தில் லாபத்தையும் இதே விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்து கொண்டனர். இதில், ஹர்திக் மற்றும் க்ருணால் இருவருமே முழு நேர கிரிக்கெட் வீரர்கள் என்பதால் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சகோதரர் வைபவ் பாண்டியா எடுத்துக்கொண்டுள்ளார்.

Police action Hardik Pandya's brother for Money laundering case

இதனையடுத்து வைபவ், தனது இரு சகோதரர்களுக்கும் தெரியாமல் அதே தொழிலில் ஈடுபடும் மற்றொரு நிறுவனத்தை ரகசியமாக துவக்கியுள்ளார். இது ஹர்திக், க்ருணால் பாண்டியாக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த விதிகளுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர் செய்ததாக கூறப்படுகிறது. மறுபுறம், சகோதரர்கள் மூவரும் இணைந்து கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய நிறுவனத்தின் லாபம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. இதைக் கவனித்த ஹர்திக் பாண்டியா என்ன பிரச்சனை என நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்துள்ளார். அதில், ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் வைபவ் சொந்தமாக தனி நிறுவனத்தை தொடங்கி இருப்பது தெரிய வந்ததுள்ளது. தங்கள் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த வைபவ் பாண்டியாவை நம்பி, பாண்டியா சகோதரர்கள் புது நிறுவனத்தைத் தொடங்கிய நிலையில், அவரே இப்படி செய்தது பாண்டியா சகோதரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைபவ் பாண்டியா ரகசியமாக புதிய கம்பெனி தொடங்கியதால் பழைய கம்பெனிக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் பழைய கம்பெனியில் தனக்கான லாபத்தின் சதவீதத்தை 20 சதவீதத்தில் இருந்து 33.3 சதவீதமாக வைபவ் அதிகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன் முதலில் மூன்று பேர் சேர்ந்து தொடங்கிய கூட்டு நிறுவனத்தில் கிடைத்த பணத்தை அடிக்கடி தனது சொந்த நிறுவனத்திற்கு வைபவ் மாற்றிக் கொண்டுள்ளார். பாண்டியா சகோதரர்களுக்கு தெரியாமல் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை வைபவ் மாற்றியதாக தகவல் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்த அதிர்ச்சி பின்னணி முழுமையாக தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா தன்னை ஏமாற்றிய வைபவிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்ததாகவும், உடனே உனது பெயரை களங்கப்படுத்திவிடுவேன் என்று ஹர்திக் பாண்டியாவை வைபவ் மிரட்டியதாக தகவல் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ஒன்று விட்ட சகோதரரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹர்திக் பாண்டியா, வைபவிற்கு எதிராக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வைபவை கைது செய்து 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரித்து வருகின்றனர். வைபவ் மொத்தம் 4.3 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக ஹர்திக் பாண்டியா தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகே, மோசடி சம்பவம் குறித்து தகவல்கள் முழுமையாக தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். பிரபல கிரிக்கெட் வீரருக்கு சகோதரரால் நடந்த  மோசடி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ஐ.டி. ஊழியர் ஏமாற்றம்; லட்சக்கணக்கில் மோசடி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
18 lakh rupees scam by IT employee claiming profit from stock trading

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(46) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை என்ற ஒரு லிங்கை டவுன்லோட் செய்தார். அப்போது அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித் தருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை நம்பிய ராமச்சந்திரன், மோசடி நபர்கள் கூறிய 8 வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக கடந்த 3 மாதத்தில் ரூ.18 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அவருக்கு லாபத் தொகையும் தரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்பத் தராமல் ஏமாற்றிவிட்டனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ராமச்சந்திரன், இதுகுறித்து ஆன்லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.