Skip to main content

தலைவன் பண்பு பற்றி விவேகானந்தர்

Published on 04/07/2018 | Edited on 04/07/2018
vivekanandar

 

 

 

 

 

ஜெனரல் ஸ்ட்ராவ் என்கிற என் ஆங்கிலேய நண்பர் ஒருவர் சிப்பாய்க் கலகத்தின்போது இந்தியாவில் இருந்தார். அவர் சிப்பாய்க் கலகம் பற்றிய பல கதைகளை என்னிடம் கூறுவார். ஒரு நாள் அவருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது இடையில் நான் அவரிடம் கேட்டேன், "சிப்பாய்கள்  போதுமான அளவுக்குத் தேர்ச்சி பெற்ற வீரர்களாய் இருக்கிறார்கள். மேலும் அதோடு அவர்களிடம் தேவையான அளவு துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் உணவுப் பொருள்களும் இருந்திருக்கின்றன. அப்படி இருந்தும் அவர்கள் ஏன் படுதோல்வி அடைந்தார்கள்?'' என்று கேட்டேன்.

 

 



அதற்கு அவர் சொன்னார்: "சிப்பாய் கலகத்தின் படைத்தலைவர்கள் போரில் தங்கள் முன்னணியில் ஈடுபடுவதற்குப் பதிலாக படைக்குப் பின்னால் பாதுகாப்பான  ஒரு பகுதியில் இருந்து கொண்டு, "வீரர்களே சண்டையிடுங்கள்' என்று  கத்திக் கொண்டிருந்தார்கள். தலைமை ஏற்பவர்கள் தாங்கள் முதலில் மரணத்தை நோக்க முன்வந்தால் அல்லாமல் எஞ்சிய படைவீரர்கள் முழுமனதுடன் போரில் ஈடுபட முன்வர மாட்டார்கள்'' என்று பதில் கூறினார்.

 

 



"தலைவன் என்பவன் தன் தலையைப் பலி கொடுக்கக் கூடியவனாய் இருக்க வேண்டும். ஓர் லட்சியத்துக்காக நீ உன் உயிரையும் அர்ப்பணிக்கக் கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்கமுடியும். ஆனால் நாம் அனைவரும் தேவையான தியாகம் எதையும் செய்யாமலேயே தலைவர்களாகிவிட விரும்புகிறோம். அதன் விளைவு வெறும் பூஜ்ஜியமாய் விடுகின்றது. நாம் சொல்வதை எவரும் கேட்பதில்லை'' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

 


 

Next Story

டெல்லியில் இன்று தொடங்குகிறது ஜி20 உச்சி மாநாடு

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

G20 summit begins today in Delhi

 

ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்றும், நாளையும் என இரு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

 

இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் அதிபர் பிராங் வால்டர் சென்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், ஆப்பிரிக்க ஒன்றிய தலைவரும் கொமோரஸ் அதிபருமான அசாலி அசவுமானி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜெய் லவ்ரோ, ஓமன் துணை பிரதமர் சயித் பகத் மின் மக்மூத் அல் சாயித், ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், சர்வதேச நிதியத் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் டெல்லி வந்துள்ளனர். 

 

 

Next Story

“விவேகானந்தர் வார்த்தையை மெய்ப்பிப்பவர் மோடி” - அண்ணாமலை

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

Vivekanandas words come true Modi Annamalai

 

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் இராமேஸ்வரத்திலிருந்து ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தை நேற்று தொடங்கினார். இந்த நடைப்பயணத்தை நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அண்ணாமலை நடத்தும் இந்த பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும், ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நடைபயணத் தொடக்க விழாவில் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “இந்த நடைபயணம் வெறும் அண்ணாமலையின் நடைபயணம் அல்ல. இது ஒவ்வொரு பா.ஜ.க தொண்டனின் நடைபயணம். கூட்டணி கட்சியினரின் நடைபயணம். இதனை ஒரு வேள்வியாக கருதுகிறோம். விவேகானந்தர் கால்நடையாக கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் வரை நடந்தே வந்தார். அதை போல் அமெரிக்காவிற்கு சென்று திரும்பிய விவேகானந்தர் ராமேஸ்வரம் வந்து இறங்கினார். அப்போது அவர், பாரத மாதா இனி தூங்கப்போவதில்லை என்று கூறினார். அந்த வார்த்தையை மெய்ப்பட வைத்தவர் பிரதமர் மோடி. இன்றைக்கு உலகம் முழுவதும் இந்தியாவைப் பெருமைப்பட வைக்கிறார். இந்தியாவின் வளர்ச்சியை உன்னிப்பாக உலக மக்கள் கவனித்து வருகின்றனர். கோடிக்கணக்கான மக்களைப் பசி என்ற கோரப்பிடியில் இருந்து மோடி மீட்டு வருகிறார். கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த அரசு வீடு கட்டிக்கொடுத்துள்ளது.

 

பிரதமர் மோடி ஒரு சாதாரண மனிதன். அதனால், தற்போது இந்தியாவில் சாதாரண மக்களுக்கான ஆட்சி நடத்தி வருகிறார். குஜராத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண மனிதன் இந்த 9 ஆண்டு கால ஆட்சியில் இந்திய மக்களை பெருமைப்படுத்தி இருக்கிறார். பாரத தாய் போல் தமிழ்த்தாயும் இனி விழித்து எழ வேண்டும்.  தி.மு.க அரசு வெறும் ஊழல் செய்யும் அரசாகத்தான் இருக்கிறது. ஒரு குடும்பம் மட்டும்தான் சம்பாதித்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கிடைக்காத திட்டங்கள் எல்லாம் மோடியின் ஆட்சியில் கிடைத்திருக்கின்றன.

 

மோடி மனதளவில் தமிழராக வாழ்கிறார். இந்தியாவிலேயே வேறு எந்தப் பிரதமரும் தமிழர்களின் புகழையும் கலாச்சாரத்தையும் பிரதமர் மோடி அளவுக்கு உயர்த்திப் பிடித்தது கிடையாது. அவர் தமிழை மிகவும் நேசிக்கிறார். மோடியின் முகவரியாக அவரது திட்டங்கள் எல்லாம் அனைத்து வீடுகளிலும் உள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொருத்தவரை நிரந்தரமாக இருக்கக்கூடிய பிரதமர் நம்மிடம் இருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் திங்கட்கிழமை நிதிஷ் குமார் பிரதமர், செவ்வாய்க்கிழமை மம்தா பானர்ஜி பிரதமர், புதன்கிழமை கே.சி.ஆர். பிரதமர் என ஒவ்வொரு நாளும் ஒரு பிரதமர்கள் வருவார்கள். கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவை தனது மூச்சாக, கருவாக செயல்படுகின்ற மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். மூன்றாவது முறையாக அவர் பிரதமராக அமரும் போது இந்தியா மூன்றாவது பொருளாதார நாடாக உயரும். அதனை நாம் பார்க்கத்தான் போகிறோம். இந்த யாத்திரைக்கு தமிழகத்தின் அரசியலை மாற்றக்கூடிய சக்தி இருக்கிறது” என்று கூறினார்.