Skip to main content

செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 12 வரையிலான ஆளுநரின் பணிகள் ஒரு பார்வை!

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

செப்டம்பர் 8 ஆம் தேதியிட்ட நக்கீரன் இதழில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அந்த கட்டுரை ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இந்தியத் தண்டனைச் சட்டம் 124 ஆவது பிரிவின் கீழ் நக்கீரன் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

 
ஆளுநரின் எந்தப் பணியை செய்யவிடாமல் நக்கீரன் தடுத்தது என்பதை குறிப்பிட்டு சொல்லாவிட்டாலும், ஆளுநர் பன்வாரிலால், கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை மேற்கொண்ட முக்கியமான பணிகளைப் பற்றி ஒரு பார்வை பார்த்துவிடலாம்…

 
செப்டம்பர் 7 ஆம் தேதி ஆளுநர் தனது செயலாளர் ராஜகோபாலுடன் கரூர் மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
 

sep8


செப்டம்பர் 8 ஆம் தேதி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அதே நாளில் கல்வி நிறுவனங்களில் ராக்கிங் ஒழிப்பு தொடர்பான கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

 
செப்டம்பர் 10 ஆம் தேதி சென்னை வேலப்பன்சாவடியில் ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

 
செப்டம்பர் 13 ஆம் தேதி சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள மாமர சுயம்பு சித்தி வினாயகர் கோவிலில் சாமி கும்பிட்டார்.
 

sep.,

 
செப்டம்பர் 14 ஆம் தேதி தமிழகம் வந்த ஆந்திரா ஆளுநர் நரசிம்மனை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அதேதினம் பார்வையிழந்தோர் தினத்தில் பார்வையிழந்தோர் சங்கத்தினரை சந்தித்து நிதி வழங்கினார்.

 
செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் தூய்மைப் பணியை தொடங்கிவைத்தார். அதேநாளில் அதே மாவட்டத்தில் நடைபெற்ற ரத்ததானம் நிகழ்ச்சியையும், இ-சேவை மையத்தையும், நியாயவிலைக் கடையையும் பார்வையிட்டார்.

 
செப்டம்பர் 26 ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பாபநாசம் சிவனின் 128 ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பிரகாஷ் மேனன் எழுதிய புத்த வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.
 

sep27


செப்டம்பர் 27 ஆம் தேதி சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று சிறப்பு விருதுகளை வழங்குகிறார்.

 
செப்டம்பர் 29 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லா மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்ற சென்னை தொழில் வர்த்தக கூட்டமைப்பினர் மத்தியில் பேசினார்.
 

oct 1


அக்டோபர் 1 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற முதியோர் தங்குமிடத்தை தொடங்கிவைத்தார்.


அக்டோபர் 5 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவிலும், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவிலும் பங்கேற்றார்.

 
அக்டோபர் 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் 8 ஆவது இந்திய ஐஸ்கிரீம் காங்கிரஸ் கண்காட்சியைத் தொடங்கிவைத்து ஸ்டால்களை பார்வையிட்டார்.

 
அக்டோபர் 10 ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் பாரிதிய வித்யாபவனில் நடைபெற்ற தேசிய அஞ்சலக வாரக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

 
அதேநாளில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனை விழாவிலும், சென்னை வந்த குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவை முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் விமானநிலையத்தில் வரவேற்றார்.
 

oct 11


அக்டோபர் 11 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற தாமிரபரணி ஆற்று விழாவில் பாபநாசத்தில் ஆளுநர் பன்வாரிலால் நீராடினார்.

 
இவைதான் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல், அக்டோபர் 11 ஆம் தேதிவரை ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகள். இந்த நிகழ்ச்சிகள் எதிலும் யாரும் அவருடைய பணியை குறுக்கிட்டு தடுத்ததாகவோ, தாக்கியதாகவோ செய்தியே இல்லை. ஆளுநர் மாளிகையும் பொத்தாம் பொதுவாகத்தான் ஆளுநரின் பணியைத் தடுத்ததாக கூறியிருக்கிறது. அதனால்தான் நீதிமன்றமே 124 ஆவது பிரிவின்கீழ் நக்கீரன் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்திருக்கிறது.

 

Next Story

“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முதல்கட்ட வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
First Phase Voting; Preparations are intense

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 950 வேட்பாளர்கள் உள்பட 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரன் ரிஜிஜு, எல். முருகன், ஜிதேந்திர சிங், சர்வானந்த் சோனோவால், அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் சஞ்சீவ் பல்யான் என 8 பேர் போட்டியில் உள்ளனர். தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் உள்ளார். மேலும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி, தமிழகத்தின் முன்னாள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதே சமயம் முதற்கட்ட தேர்தலுடன் தமிழகத்தின் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இதே போன்று திரிபுரா மாநிலம் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பதற்றமான 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளில் நவீன ஆயுதங்களுடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் தீவிரமடைந்துள்ளது.