Skip to main content

விக்கிரவாண்டி எங்களுக்கு கேரண்டி..! கம்பு சுத்தும் கழகங்கள்!

Published on 08/10/2019 | Edited on 14/10/2019

இன்னும் 6 நாட்களில் தேர்தலை சந்திக்க இருக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் ஜூரம் உச்சகட்டத்தில் இருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்திருந்தாலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் இலை காணாமல் போக, விக்கிரவாண்டி உள்ளிட்ட பல தொகுதிகளில் சூரியன் உதித்திருந்தது. அந்த வகையில் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி சில மாதங்களுக்கு முன் உடல் நிலைக்காரணமாக மரணமடைந்தார்.

மூன்று மாதங்களுக்கு மேலாக காலியாக இருக்கும் இந்த தொகுதிக்கு வேலூர் மக்களைவை தொகுதியுடன் சேர்ந்தே தேர்தல் நடத்தப்படும் என்று பார்க்கப்பட்ட நிலையில், அப்போது வேலூர் தேர்தல் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி தலைமைகள் பிரச்சாரத்தை முடிக்கிவிட்டுள்ளது. அடுத்த சில தினங்களில் முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பிரச்சார களத்தில் குதிக்க உள்ளனர். அதிமுக தரப்பில் 15க்கும் மேற்பட்ட அமைச்சர் படை விக்கிரவாண்டியை சுற்றி வருகிறது. 100க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களும் அதிமுகவிற்காக கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
 

jkn



கடந்த தேர்தலில் தனியாக நின்ற பாமக 40000 வாக்குகள் வாங்கிய நிலையில், அந்த வாக்குகள் முழுவதுமாக அதிமுகவுக்கு வந்து சேரும் என்று நம்புகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். 2014 தேர்தலில் தனியாக தருமபுரியில் வெற்றிபெற முடிந்த அன்புமணியால் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற முடியவில்லையே? என்றால் இது 'இடைத்தேர்தல்' என்று கமுக்கமாக சிரிக்கிறார்கள் அண்ணா திமுக நிர்வாகிகள்.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 22 தொகுதி இடைதேர்தலை நியாபகப்படுத்தினால், சார் அது மக்களவை தேர்தலின் போது நடந்தது என்று சொல்லிக்கொண்டே கடந்து செல்கிறார்கள். இவர்களின் எண்ணம்தான் என்ன? என்று அதிமுக நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது பல அதிர்ச்சிகரமான தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.

 

hjk



அதில், " விக்கிரவாண்டி தொகுதியை முதல்வர் ஒரே ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலாக நினைக்கவில்லை. தன்னுடைய ஆட்சிக்கு மக்கள் போடும் மார்க்காக பார்க்கிறார். தான் அதிக மார்க் எடுக்கவில்லை என்றாலும், திமுக தன்னை விட குறைவான மதிப்பெண்ணை எடுக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை போட்டுள்ளார். அந்த வகையில், தொகுதியின் சந்துபொந்துகளை கூட நன்கு அறிந்து வைத்துள்ள சண்முகத்திடம் இந்த பொறுப்பை கொடுத்துள்ளார். பாமக வாக்குகளை திமுக யாரை வைத்து சமாதானம் பேசினாலும் அதிமுகவிற்கு வருவதை தடுக்க முடியாது. ஏனென்றால் சில மாதங்களாக பாமக தலைமைக்கும், திமுக தரப்புக்கும் நடக்கும் சண்டை உலகறிந்த ஒன்று. எனவே பாமகவின் வாக்குகளை வன்னிய பிரதிநிதிகளை வைத்து வளைத்து போடலாம் என்ற திமுகவின் கனவு கானல் நீராகத்தான் போக போகிறது. அதிமுகவின் மற்ற கூட்டணி கட்சியினருக்கு அங்கு போதுமான அளவு வாக்கு பலம் இல்லை என்றாலும், பாமக அதிமுகவை காப்பாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதனை தெரிந்து கொண்டதால்தான், வன்னிய வாக்குகளை மடைமாற்ற இன்று திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு ராமதாஸும் பதில் அளித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள மூன்று மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை. மாவட்ட செயலாளர் நியமனத்திலேயே வன்னியர்களுக்கு இடம் தராத திமுக, அரசாங்க  வேலைவாய்ப்பில் எப்படி இடம் தரும் என்ற கேள்வி அனைவரிடமும் தற்போது எழுந்துள்ளது. எனவே திமுகவின் அறிவிப்பு தேர்தல் களத்தில் பயன்தராது, அதிமுக 20000 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும்" என்றார்.

அதிமுக தரப்பில் நிலைமை இப்படி என்றால் விக்கிரவாண்டியில் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதில் தவறு நிகழும் பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி மோடி எதிர்ப்பலையில் கிடைத்த ஒன்று, அதிமுக பாஜக இல்லாமல் தனித்து நின்றிருந்தால் அவர்களே வெற்றிபெற்றிருப்பார்கள் என்ற செய்தி உடனடியாக சொல்லப்படும். இது இன்னும் 15 மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் திமுகவிற்கு பின்னடைவை கொடுக்கும். எனவே இதனை நன்கு உணர்ந்ததாலோ என்னவோ இத்தொகுதி மீது திமுக தலைமை அதீத அக்கறை காட்டி வருகிறது.

அதன் உச்சபட்சமாக, " திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிப்பு திமுக தலைமை அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதுதொடர்பான கோரிக்கை எதுவும் எழாத நிலையில், அதற்கான அவசியம் எங்கு வந்தது என்ற வினாவும் அரசியல் அரங்கில் தற்போது திமுக தரப்பை பார்த்து எழுப்பப்படுகிறது.

இதுதொடர்பாக திமுக பிரமுகரிடம் பேசியபோது, "பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் அவரை போல ஸ்டாலினுக்கு ஓய்வு இல்லை. காலையில் ஆரம்பித்து இரவு வரை திமுகவை வம்பிழுக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. 2014 தேர்தலில் தனியாக தருமபுரியில் வெற்றிபெற முடிந்த அன்புமணியால் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற முடியவில்லையே? பாமகவால் வெற்றிபெற முடியும் என்றால், அவர்களின் கோட்டை என்று சொல்லப்பட்ட தருமபுரியை ஏன் கோட்டை விட்டார்கள். வெற்று கூச்சல் இடுவதற்கு பாமகவை விட ஒரு சிறந்த கட்சி தமிழகத்தில் இன்னும் பிறக்கவில்லை.
 

cvj



மூன்று மாவட்ட செயலாளர்கள் பதவி இருந்தும் வன்னியருக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று அவர் கூறுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட்ட கதைதான். கட்சி தொடங்கிய நாளில் இருந்து கூடவே இருக்கும் ஜி.கே மணியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, முதலில் அவர்கள் கட்சியில் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் இருக்கிறது என்று காட்டச் சொல்லுங்கள். வார்டு மெம்பரில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வரை அவர் மகனே போட்டியிடுவார், அவரை தவிர வேறுயாரும் கட்சியில் இல்லையா? திமுகவில் வன்னியர் மாவட்டச் செயலாளர்கள் இல்லையா என்ன? நடந்து முடித்த நாடாளுமன்ற தேர்தலில் 5-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வன்னிய இன பிரதிநிதிகளை திமுக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கவில்லையா? அதையும் தாண்டி தலைவர் ஸ்டாலின் அவர்கள் இந்த உள் ஒதுக்கீடு விவகாரத்தை தேர்தலுக்காக கையில் எடுக்கவில்லை. ஏற்கனவே கலைஞரால் கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லப்பட்ட ஒன்றுதான். எங்களால் இரண்டு தேர்தலிலும் வெற்றிபெற முடியாத காரணத்தால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. எனவே தற்போது ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்கிறோம். இதில் எங்கே இருக்கிறது அரசியல்? விக்கிரவாண்டி திமுகவிற்கு கேரண்டி" என்றார் முடித்தார் அந்த நிர்வாகி.
 

 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.