Skip to main content

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருந்தால் இந்த ஊரடங்கே தேவையில்லாமல் போய் இருக்கும் - விக்ரமராஜா பேச்சு!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 21 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1  லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 400-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 13,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கத்தலைவர் விக்ரமராஜா அவர்களிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

 

 

fg



மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகமே முடங்கிக் கிடக்கிறது. இந்தியவே முடங்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் அத்தியாவசியக் கடைகள் திறந்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் நாடு முழுவதும் திறந்திருக்கின்றது. பழக்கடைகளும் திறந்திருக்கின்றன. இந்தச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

குறிப்பாக இந்த கரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி போது நாமெல்லாம் வேடிக்கை பார்த்தாகத்தான் நான் நினைக்கிறேன். இந்த அளவுக்கு உலகம் முழுவதும் பரவும் என்று கூட நாம் நினைக்கவில்லை. அது நம் நாட்டிற்குள் நுழைந்து இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா எனும் எண்ணத்தைக் கூட எங்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தது. இன்றைக்கு இந்தியா முழுவதும் இதுவரை கண்டிராத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் கடுமையான ஒரு நிலையைச் சந்தித்துள்ளது. என்ன செய்வது என்று தெரியாதபடி சூழ்நிலைகள் நெருக்கடியான காலக் கட்டத்தில் இருக்கின்றது. இன்றைக்கு நாம் ஊரடங்கை போட்டுள்ளோம். ஆனால் கடந்த ஜனவரி மாதமே வெளிநாடுகளில் வருபவர்களை ஒரு விமான நிலையத்தில் வருவது போல செய்து அங்கேயே மருத்துவமனை அமைத்து சிகிச்சை அளித்திருந்தால், இன்றைக்கு நாம் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
 

http://onelink.to/nknapp


அதை எல்லாம் முறையான காலத்திலேயே செய்யாமல் விட்டுவிட்டார்கள். இன்றைக்கு மளிகைக் கடைகாரர்கள், காய்கறி கடைக்காரர் எல்லாம் எவ்வித கஷ்டமும் இல்லாமல் வியாபாரம் செய்வது போல நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அவர்களுக்கும் கடுமையான கஷ்டங்கள் இருக்கிறது.  நாங்கள் முதல் போட்டு கடை நடத்தி வருகிறோம், ஆட்களுக்குச் சம்பளம் கொடுத்து வருகிறோம். ஆனால் பொருட்களை அரசாங்கம் சொல்கிற நேரத்தில்தான் விற்க வேண்டி உள்ளது. ஆறு துறை அதிகாரிகளுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டி வருகிறது. காவல்துறை அதிகாரிகள், ஊராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என பல்வேறு அதிகாரிகள் கடைக்கு வருகிறார்கள். இதில் ஒரு துறை அதிகாரிகள் நன்றாக விதிமுறைகளைக் கடைபிடிப்பதாக கூறிவிட்டு சென்றால், மற்றொரு அதிகாரி வந்து கடைக்கு சீல் வைத்துவிடுவேன் என்று கூறுகிறார். நாளைக்கு என்ன சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டி வருமோ என்ற நிலையில்தான் நாங்கள் தொழில் செய்து வருகிறோம். 

 

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Sonia Gandhi is infected with Corona for the second time!

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசின் நெறிமுறைகளின் படி, சோனியா காந்தி தனிமைப்படுத்துதலில் உள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

கடந்த மூன்று மாதங்களில் அவர் இரண்டாவது முறையாக, கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து கவலைத் தெரிவித்திருக்கும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

 

அவரது உடல் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்கும் பிரார்த்திப்பதாக கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

ஏற்கனவே, பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், சோனியா காந்திக்கும் மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.