Skip to main content

அன்று 3 கோடியில் தங்கத்தோடு, வைர ப்ரேஸ்லட்... இன்று??? விஜய் மல்லையாவின் இன்றைய நிலை என்ன??

Published on 13/12/2018 | Edited on 13/12/2018
vijay maalya

 

விஜய் மல்லையா கிங்ஃபிஷர் நிறுவனத்தின் அதிபர். செல்வந்தர், ஜொலிக்கும் ப்ளேபாய் இப்படியாகதான் நமக்கு தெரியும். 2016க்கு பிறகு அவர் வெளிநாட்டில் தஞ்சமடைந்த ஒரு கடனாளியாக தெரியும். விஜய் மல்லையாவை லண்டனிலிருந்து நாடுகடத்துவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. ஏற்கனவே அவரது சொத்துகள் அனைத்தும் நீதிமன்றத்தின் வசம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

தனது நிறுவனத்திற்காக பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் அவர் வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டித்தொகை ஆகியவற்றின் மதிப்பு  ரூ. 9000 கோடி, அவர் நாட்டைவிட்டு போனது, நாடுகடத்த உத்தரவிட்டது. இப்படி எல்லாமே அதற்காகதான்.  


ஆடம்பரத்தை அதிகம் விரும்பும் மல்லையா 10 இலட்சம் மதிப்புள்ள 2 தங்க நெக்லஸ், 3 கோடிக்குமேல் மதிப்புள்ள தங்கத்தோடு, வைர ப்ரேஸ்லட்டும், தினசரி பயன்பாட்டிற்காக 70 இலட்சம் மதிப்புள்ள 9 ஆடம்பர வாட்ச், பச்சை மரகதக்கல் பதித்த மோதிரம், வைரக்கல் பதித்த மோதிரம் இவற்றின் மதிப்பு மட்டும் கிட்டதட்ட 5.4 கோடி. மேலும் 9 கோடி மதிப்புள்ள 2 செவ்வந்திக்கல். ரொல்ஸ் ராய்ஸ் பென்டோம், மினி ஜான் கூப்பர், ரேஞ்ச் ரோவர், பென்ட்லே டர்போ, 3 ஃபெராரி, இவற்றின் மதிப்பு மட்டும் 16 கோடி. 3 சொகுசு கப்பல்கள் இவற்றின் மதிப்பு மட்டும் 30 கோடி. இவையெல்லாம் அவரது சொத்துகளில் சிலவைதான். இவைகளில் பல அவரின் அன்றாட பயன்பாடுகளில் உட்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. 


நேற்று விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் கடன் மோசடி உள்ளிட்ட வழக்குகளில் மல்லையாவிடம் இருந்த சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அவரிடம் இருந்த வாட்ச், ப்ரேஸ்லெட், மோதிரங்கள் உள்ளிட்ட நகைகள், சொகுசு கார்கள் என அனைத்துமே நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டன, என குறிப்பிட்டிருந்தார். வைர ப்ரேஸ்லெட் உட்பட 7 நகைகள், 9 வாட்ச், 9 சொகுசு கார்கள், சொகுசு கப்பல்கள், 12 கத்தி, 2 கேடயம், கவச உடையுடன் கூடிய சிலை ஆகியவையும் அடங்கும். என தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

மல்லையா, நிரவ் மோடி வரிசையில் 8000 கோடி ஏமாற்றிவிட்டு வெளிநாடு பறந்த பிரபல தொழிலதிபர்...

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்திய வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றனர்.

 

sterling biotech

 

அந்த வரிசையில் குஜராத்தின் வடோதராவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஸ்டெர்லிங் குழும நிறுவனத்தின் நிறுவனர்களான நிதின், சேத்தன் என்ற சகோதரர்கள் இந்திய வங்கிகளில் 8,100 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தப்பியோடினர்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 300–க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை பினாமி பெயரில் தொடங்கி அதன்மூலம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இவ்வாறு அவர்களுக்கு பினாமி நிறுவனங்கள் அமைக்க அவர்களது மைத்துனரான ஹிதேஷ் படேல் உதவியதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது.

இந்நிலையில் ஒரு வருடமாக தேடப்பட்டு வந்த ஹிதேஷ் படேலுக்கு கடந்த மாதம் ரெட் நோட்டீஸ் கொடுத்தது அமலாக்கத்துறை. இதனை தொடர்ந்து இன்டர்போல் உதவியுடன் ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளிகளான நிதின், சேத்தன் ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் தலைமறைவாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது.  

 

 

Next Story

தப்பி ஓடிய குற்றவாளி விஜய் மல்லையா- சிறப்பு நீதிமன்றம்

Published on 05/01/2019 | Edited on 05/01/2019

 

vijay mallya


9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தப்பி ஓடிய குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொருளாதார குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யலாம் எனவும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.