Skip to main content

தமிழிசைக்கு பதவி...உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்...அதிர்ச்சியில் தமிழக பாஜக சீனியர்கள்!

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

கவர்னர் பதவியை குறிவைத்து தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பலரும் காய்களை நகர்த்தி வந்த நிலையில், தமிழிசைக்கு தெலங்கானா கவர்னர் வாய்ப்பு கிடைத்ததில் பா.ஜ.க. தலைவர்கள் பலருக்கும் அதிர்ச்சி. இந்த இடத்தை அடைய தமிழிசை கடந்து வந்த பாதை நெடியது. தமிழிசைக்கு படிக்கும் காலத்திலிருந்தே அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. தனது குடும்பம் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் காங்கிரசை தேர்ந்தெடுக்காமல் பா.ஜ.க.வை தேர்ந்தெடுத்தார் தமிழிசை.

 

bjp



பொதுவாக கட்சியில் பொறுப்புகள் கிடைக்கும்வரை வேகமாக ஓடுபவர்கள், பொறுப்புகள் கிடைத்ததும் முடங்கி விடுவதுண்டு. ஆனால், அக்கா தமிழிசை அப்படி அல்ல. பொறுப்புகள் கிடைத்ததும் கட்சியை வளர்ப்பதில் பல மடங்கு உழைத்தார். தமிழகத்தில் பா.ஜ.க.வை பட்டிதொட்டியெல்லாம் தெரிய வைத்ததில் தமிழிசையின் பங்களிப்பு அதிகம். பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் அமித்ஷாவின் நம்பிக்கையை பெற்றதால் 2014-ல் தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார் தமிழிசை. அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைத்தது. கட்சியின் சட்டவிதிகளின்படி இரண்டு முறைக்கு மேல் தலைவர் பதவியில் ஒருவர் இருக்க முடியாது. அவரே எதிர்பார்க்காத சூழலில் உயரிய பதவிகளில் ஒன்றான ஆளுநர் பதவியில் அவரை நியமித்திருக்கிறார் பிரதமர் மோடி. உழைப்பையும் நேர்மையையும் அங்கீகரிக்கும் பரிசாக அவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது'' என்கிறார் தமிழக பா.ஜ.க. வின் ஊடகப் பிரிவு தலைவரான ஏ.என்.சுப்ரமணியபிரசாத் பெருமிதமாக.

 

bjp



மாநில தலைவர்களின் பதவிக்காலம் முடிபவர்களில் சிலரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களை கவர்னர்களாக நியமிக்க டெல்லியிலுள்ள அகில இந்திய பா.ஜ.க. தலைமையகத்தில் கடந்த மாதம் ஆலோசனை நடந்திருக்கிறது. அந்த ஆலோசனையில் தமிழக பா.ஜ.க.வை முதலில் கையிலெடுத்துள்ளார் அமித்ஷா. இதனையடுத்து, மத்திய உளவுத்துறையின் ரீஜினல் டைரக்டருக்கு இரண்டு உத்தரவுகள் பறந்திருக்கின்றன. அதாவது, தமிழிசையின் அரசியல் பணிகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும், புதிய தலைவராக நியமிப்பதில் கீழ்க்கண்ட 9 நபர்களின் பாசிட்டிவ், நெகட்டிவ் குறித்தும் நீண்ட களஆய்வு நடத்தி இரண்டு வாரங்களுக்குள் முழுமையான ரிப்போர்ட் தரும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதில் பட்டியலிடப்பட்ட 9 நபர்களைப் பற்றிய குறிப்புகளை அறிய 10 கேள்விகளையும் உளவுத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளது பா.ஜ.க.வின் தேசிய தலைமை. முதலில் தமிழிசையின் அரசியல் பணிகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து 80 சதவீதம் பாசிட்டிவ்வாகவே ரிப்போர்ட் தந்துள்ளது உளவுத்துறை. அதனால்தான் "மேதகு' தமிழிசை என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
 

bjp



இந்த நிலையில், இரண்டாவது ரிப்போர்ட் குறித்து உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, "தமிழக பா.ஜ.க.வில் கோலோச்சும் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, லஷ்மணன், நரேந்திரன், வானதி சீனி வாசன், கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் ஆகிய 9 நபர்களைப் பற்றி 10 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான ரிப்போர்ட் தரும்படி கேட்டுள்ளார் பா.ஜ.க.வின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா. தமிழகத்தில் திராவிட கட்சிகளை கையாளும் திறமை, இவர்கள் மீது மாநிலம் முழுவதும் மக்களிடமிருக்கும் ஆழமான பார்வை, சிவில் மற்றும் குற்ற நடவடிக்கைகள், நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அரவணைக்கும் பாங்கு மற்றும் தனி மனித ஒழுக்கம், கட்சி அல்லது அரசாங்கத்தின் உயர் பதவிகள் வழங்கினால் அதனை வழிநடத்தும் ஆற்றல் என்கிற கேள்விகளுக்கு விரிவான பதிலை கேட்டிருந்தனர். மேலும், இந்த கேள்விகளுக்கு பதிலை தயாரிக்கும் அதிகாரி விருப்பு வெறுப்பின்றி உண்மைத் தகவல்களை அளிக்க வேண்டும். ஏனெனில், இன்னொரு குழுவும் இதேரீதியில் விசாரணையில் இறங்கியுள்ளது எனவும் எச்சரித்தது பா.ஜ.க. தலைமை.

 

bjp



இதனையடுத்து முழுமையான தகவல்களை கடந்த 28-ந்தேதி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர் உளவுத்துறை அதிகாரிகள். உளவுத்துறையின் ரிப்போர்ட்டில், 9 நபர்களில் 5 பேர் மீது ஏகத்துக்கும் புகார்கள் வாசிக்கப்பட்டுள்ளன. 4 பேர்தான் 70 சதவீதம் பாசிட்டிவ் ரிப்போர்ட்டுகளை பெற்றுள்ளனர். அதில் முதலிடத்தில் இருப்பவர் நரேந்திரன். அந்த வகையில் நரேந்திரன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியவர்களிடையே புதிய தலைவருக்கான போட்டி வலிமையாக இருக்கிறது'' என்கிறது உளவுத்துறை.


புதிய தலைவர் தேர்வு குறித்து மூத்த தலைவர் ஒருவரிடம் நாம் பேசியபோது, "மாநில பொறுப்புகளில் இப்போது இருப்பவர்களில் ஒருவர் மீதும் கட்சித் தலைமைக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும் ஒவ்வொருவரும் தங்களுடைய டெல்லி லாபியை முழுமையாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். அதேசமயம், சாதி சமூக அரசியலை முன்னிறுத்தி பிரபலமே இல்லாத ஒருவரை நியமித்து தலைவர் பொறுப்பை ஒப்படைத்தால் என்ன? என்கிற ஸ்கெட்ச்சும் டெல்லியில் நடக்கிறது. இதனையும் தாண்டி, கட்சியின் கொள்கை வகுப்பாளர்களோ, "நடிகர் ரஜினியை தலைவராக்கினால் பா.ஜ.க.வின் அரசியல் வளர்ச்சி அதிரடியாக இருக்கும்' என அமித்ஷாவிடம் வலியுறுத்தி வருகிறார்கள். இரண்டாவது முறை மிருகபலத்துடன் மோடி பிரதமர் ஆனதில் ரஜினி பல விசயங்களை யோசிக்க ஆரம்பித்திருக்கிறார். அதனால், ரஜினியை பா.ஜ.க.விற்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என அமித்ஷாவிற்கு அழுத்தம் தரப்படுகிறது. இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை'' என சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கிடையே, "தேர்தல் களத்தில் போட்டியிட்டு பலமுறை தோல்வியடைந்த தமிழிசைக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டது கௌரவமானது என்றாலும் அந்த பதவியைக் கொடுத்து அவருடைய அரசியல் வளர்ச்சியை முடக்கி விட்டனர்' என்கிறார்கள் தமிழிசைக்கு நெருக்கமான பா.ஜ.க. வினர். இதுகுறித்து முன்னாள் தலைவர் ஒருவரிடம் விவாதித்த போது, ""கவர்னர் பதவியில் நியமித்து விட்டால் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது என நினைக்க வேண்டாம். கட்சி தலைமை நினைத்தால் கவர்னர் பதவியிலிருந்து விலக்கி மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர முடியும். இதற்கு சில முன் உதாரணங்கள் இருக் கின்றன'' என்கிறார் அழுத்தமாக.

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.