Skip to main content

கடுமையாக எச்சரித்த உளவுத்துறை... அசால்ட்டாக இருந்த எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்... கோபமான மோடி!

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதை கவலையுடன் கவனிக்கிறது பிரதமர் அலுவலகம். பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத் துறையுடனும் மாநில அரசுகளுடனும் விவாதித்தபடி இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடியிடம் அண்மையில் பேசிய மோடி,தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக ஐ.ஏ.ஏஸ். அதிகாரிகள் தரப்பில் எதிரொலிக்கிறது.
 

வருவாய்த்துறை அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது, தமிழகம் கந்தக பூமி என்பதாலும் கோடை காலம் துவங்கியிருப்பதாலும் கரோனா வைரஸ் தமிழகத்தைத் தாக்காது என்கிற ஒரு நம்பிக்கையை முதல்வரிடம் ஏற்படுத்தியிருந்தனர்.அவர்கள் கொடுத்த நம்பிக்கையில் அசால்ட்டாகவே இருந்தது எடப்பாடி அரசு.முழுமையான ஊரடங்கு சூழலிலும்,ஓரிரு துறைகள் தவிர பெரும்பான்மையான துறைகளை அத்யாவசியத் துறைகளின் பட்டியலில் இணைத்து அதன் அதிகாரிகளை அலுவலகத்துக்கு வந்து வேலையைப் பாருங்கள் என உத்தரவு போடப்பட்டதையும், அமைச்சர்கள் பலரும் தங்களது இஷ்டம் போல பேட்டி தருவதையும்,மக்கள் ஒன்று கூடலைக் கட்டுப்படுத்தத் தவறியதையும், எதற்காக முழு ஊரடங்கை மோடி அறிவித்தாரோ அது நிறைவேற்றுவதில் அக்கறை காட்டாததையும் நோட் போட்டு டெல்லிக்கு அனுப்பியது மத்திய உளவுத்துறை.

 

 

admk



தினமும் டெல்லிக்கு அறிக்கை அனுப்பும் உளவுத்துறையினர், அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்குத் தேவையான கையுறை கூட போதிய அளவுக்கு இல்லை என்பதையும்; வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடு, கரோனாவுக்கான தனி படுக்கைகள் தட்டுப்பாடு,தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஏற்படுத்துதலில் சுணக்கம் எனப் பல விசயங்களையும் எடப்பாடி அரக்கு எதிராக டெல்லிக்கு அனுப்பியபடி இருந்தனர்.

கோபமடைந்த பிரதமர் மோடி தமிழக அரசிடம் பேசும் முறை வந்தபோது, எடப் பாடியைத் தொடர்புகொண்டு கோபத்தை வெளிப்படுத்தினாராம். அமைச்சர்கள் எதற்கு அடிக்கடி பேட்டி கொடுக்கிறார்கள்? அவர்கள் ஊர்வலம் போவதும் அவர்களுக்குப் பின்னால் ஒரு படை செல்வதும் எதற்கு? உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஒரு அரசின் கடமை.அதில் அரசாங்கம் கவனம் செலுத்தினால் போதும்.நாட்டில் என்ன சூழல் இருக்கிறது என்பதையும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை பற்றியும் மக்களுக்குச் சொல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள். தமிழக அரசிடம் நிறைய எதிர் பார்த்தேன்.ஆனா, கரோனாவை கட்டுப்படுத்துவதில் எனக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளீர்கள் என முதல்வரை கண்டித்துள்ளார் பிரதமர்.

 

admk



அதனையடுத்தே ஒவ்வொரு பிரச்சனைகளையும் கண்காணிக்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை அடங்கிய 9 குழுக்களை அமைத்த எடப்பாடி,அமைச்சர் விஜயபாஸ்கரிடம், இனி தினமும் பேட்டி தர வேண்டாம்;ஹெல்த் செக்ரட்டரியே பேட்டி தரட்டும் எனச் சொன்னதோடு,இதே உத்தரவை மற்ற அமைச்சர்களுக்கும் தெரியப்படுத்தினார்.அதேபோல, கலெக்டர்கள்தான் பேட்டி தர வேண்டுமென்கிற உத்தரவும் மாவட்ட ஆட்சியர்களுக்குப் போனது.இதனால்தான் கடந்த சில நாட்களாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி தருகிறார் என்கிறார்கள் வருவாய்த்துறையினர்.
 

bjp



மோடியின் கண்டிப்பைத் தொடர்ந்து, மக்கள் ஒன்று கூடுதலைக் கட்டுப்படுத்துவதிலும், காய்கறி சந்தைகளில் கூடும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவதிலும் சீரியஸ் காட்டியது எடப்பாடி அரசு.அது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்க,சந்தைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் ; தேசிய நெடுஞ் சாலைகளில் 1 மீட்டர் இடை வெளியில் மக்களை வரிசையில் நிற்க வைத்து சந்தை பொருட்களை வாங்கிச் செல்வதற்கேற்ப நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் ; மக்கள் ஒரு முறை வெளியே வந்தால் தேவையான மளிகை சாமான்கள்,காய்கறிகள், மருந்துகள் வாங்கிச் சென்று விட வேண்டும் என்கிற யோசனைகளை அதிகாரிகள் தெரிவித்தனர்.அதனை உடனடியாகச் செய்யுங்கள் எனக் கட்டளையிட்டார் எடப்பாடி.

இந்த நிலையில், ஒவ்வொரு பணிகளையும் கவனிக்க அமைக்கப்பட்ட 9 குழுக்களின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனும் 29-ந்தேதி ஆலோசனை நடத்தினார் எடப்பாடி.அந்த ஆலோசனையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், அத்யாவசியப் பொருட்களின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்கள் வராததால் புதிய உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. வைரஸ் தாக்கம் அதிகரித்திருப்பதை உணர முடிகிறது. ஆனால், இதனைச் சமாளிக்க அரசு மருத்துமனைகள் மட்டுமே போதாது. இனி வரும் நாட்களில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது ஏற்படும் ஆபத்துகளும் பொருளாதார நெருக்கடியும் ஜீரணிக்க முடியாதவைகளாக இருக்கும்.

 

modi


வைரஸ் பரவுதலைத் தடுக்க மைக்ரோ லெவல் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறோம். தனியார் மருத்துவக் கல்லூரிகள் அடங்கிய மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தையும் கரோனா சிகிச்சைக்காக அரசு கையகப் படுத்த வேண்டும்.குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் சில ப்ளாக்குகள் மட்டும் எடுத்திருப்பது போதுமானதாக இல்லை.2 லட்சம் நபர்களைக் கண்காணிக்கிறோம் என்கிற தகவலும்,தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிப்பதும் மக்களிடம் ஒருவித அச்சத்தை உருவாக்கியிருக்கிறது என்றெல்லாம் தெரிவிக்க ஏகத்துக்கும் அப்-செட்டாகியிருக்கிறார் எடப்பாடி.

"எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள். வைரஸ் பரவுதலைத் தடுத்த மாநிலம் என தமிழகத்தைத்தான் சொல்ல வேண்டும்.இனி ஒரு முறை நம் மீது பிரதமருக்கு அதிருப்தி வரக்கூடாது என எடப்பாடி கேட்டுக் கொண்டார்'' என்கிறார் ஆலோசனையில் கலந்து கொண்ட ஒரு அதிகாரி.இதற்கிடையே சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு வருகை தந்த 2,09,284 நபர்களைக் கண்காணித்து வருவதாகவும், 74 ஆயிரத்து 533 பயனிகளைத் தனிமைப்படுத்தியிருப்பதாகவும்,2040 ரத்த மாதிரிகள் எடுத்து சோதனைகளுக்கு உட்படுத்தியிருப்பதாகவும், 364 நபர்கள் மருத்துவமனை ஐசோலேஷன் வார்டுகளில் தனிமைப் படுத்தப்பட்டிருப்பதாகவும் கடந்த 30-ந்தேதி சில புள்ளி விபரங்களைத் தெரிவித்திருக்கிறது தமிழக சுகாதாரத் துறை.

இந்தப் புள்ளி விபரங்கள் குறைத்து காட்டப் பட்டிருப்பதாகக் கூறும் சுகாதாரத்துறைக்கு நெருக்கமானவர்கள்,தமிழகம் ஆபத்தான வளையத்தில் சிக்கியிருக்கிறது.அதிலிருந்து மக்களை மீட்க இன்னும் அதிக கவனம் வேண்டும். மைக்ரோ லெவல் ஆபரேசனிலுள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத் துவதும்,கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை 2 மணி நேரத்தில் தெரிந்துகொள்ளும் அளவுக்கு சோதனைகளை மேம்படுத்துவதும் அவசியம் என அதிர்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.

இந்தச் சூழலில், இந்தியா எதிர் கொள்ளவிருக்கும் பொருளாதார நெருக்கடியில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும் அதனூடான பல்வேறு பிரச்சனைகளைச் சமாளிக்கவும் நிதி வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் மோடி. இதற்காக,புதிதாக ஒரு அக்கவுண்ட் நெம்பரும் கொடுக்கப்பட்டிருக்கிறது.பாலிவுட் நடிகர்களும் பிரபல தொழிலதிபர்களும் நிதி உதவியளித்து வருகின்றனர். மோடியின் நிதி கோரலிலும் சில சர்ச்சைகளைக் கிளப்புகிறது ஆடிட்டர் உலகம்.

இயற்கை பேரிடர் காலங்களில் மக்களிடம் அரசாங்கம் நிதி உதவி கேட்பது இயல்பானது தான்.இதற்காக, ப்ரைம் மினிஸ்டர் தேசிய நிவாரண நிதி (பி எம் என் ஆர்.எஃப் ) என்கிற அக்கவுண்டை உருவாக்கி வைத்திருக்கிறது மத்திய அரசு.இந்தக் கணக்கிற்காக ஏஏசிடிபி 4637கியூ என்கிற பான் எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அக்கவுண்டில் அளிக்கப்படும் நிதிக்கு வரிவிலக்கு, ரகீதும் உண்டு. இந்த அக்கவுண்டைத்தான் முந்தைய பிரதமர்கள் பயன்படுத்தி வந்தனர்.


ஆனால், நடைமுறையிலுள்ள அந்த அக்கவுண்டைப் பயன்படுத்தாமல் பிஎம் கேர்ஸ் (பிஎம் சிஏஆர்இஎஸ்) என்கிற பாரத ஸ்டேட் வங்கியின் புதிய அக்கவுண்டை (எண்: 2121பிஎம் 20202, ஐஎஃப்எஸ்சி கோட்: எஸ்பிஐஎன்0000691) கொடுத்திருக்கிறார்கள்.பிரதமரின் தேசிய நிவாரண நிதி என ஒன்று இருக்கும் போது,புதிதாக எதற்கு ஒரு அக்கவுண்டைத் தர வேண்டும்? தவிர, இந்த அக்கவுண்டில் பான் எண், அதுவும் இணைக்கப்படவில்லை.அதனால், இந்த அக்கவுண்டுக்கு கொடுக்கப்படும் நிதி உதவிக்கு வருமானவரி விலக்கு பெற முடியாது.மேலும் ரசீதும் கிடைக்காதாம்.ஆன்லைன் தனியார் நிறுவனமான "ஃபோன்பே' விற்கும் தற்போதைய புதிய அக்கவுண்டிற்கும் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் உண்டு.இது தொடர்பாக சில விவகாரங்கள் விரைவில் பூதாகரமாகும் என்கிறது ஆடிட்டர் உலகம்.
 

 

 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.