Skip to main content

இளம்பெண்ணால் பாதிக்கப்பட்டது சிறார்கள்தான்! - விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் புதிய திருப்பம்! 

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

The victims of the teen were minors! - New twist in Virudhunagar  case!

 

விருதுநகரைச் சேர்ந்த இளம்பெண், ஆபாச வீடியோ மிரட்டலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். சிபிசிஐடி போலீசார் விசாரித்துவரும் இவ்வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய நால்வரோடு, சிறார்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிறார்கள் நால்வர், விருதுநகர் இளஞ்சிறார் குழும நீதிபதி ஜாமீன் வழங்கியதும் விடுவிக்கப்பட்டனர். அதேநேரத்தில், ஹரிஹரன் உள்ளிட்ட நால்வரும், விருதுநகர் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையினருடைய பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், 15 வயதே ஆன 9-ஆம் வகுப்பு மாணவன் போக்சோ நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அந்த இளம்பெண்ணுக்கு எதிராக அனுப்பியிருக்கும் புகார்  பகீர் கிளப்புவதாக இருக்கிறது.   இந்தப் புகாரானது,   ‘ரஷோமோன் விளைவு’ பாணியில் அமைந்துள்ளது. அதாவது,  ஒரே நிகழ்வு (பாலியல் வன்கொடுமை) சம்பந்தப்பட்ட வெவ்வேறு நபர்களால், தன்முனைப்பாக -  முரண்பாடாக – வேறுபட்டு விவரிக்கப்பட்டுள்ளது. 

 

The victims of the teen were minors! - New twist in Virudhunagar  case!

 

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 15 வயது சிறுவன் அளித்துள்ள புகார், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இளம்பெண்ணே குற்றம் புரிந்தார் என அந்தப் பெண் பக்கம் திரும்பியுள்ளது. 

 

அச்சிறுவன் தரப்பு கூறுவதென்ன?

 

எங்கள் தெருவில் குடியிருக்கும் ஹரிஹரன் அண்ணனை எங்களுக்குத் தெரியும். நானும் அவரும், என்னுடன் பள்ளியில் மேல்வகுப்பு படிக்கும் நண்பர்கள் இருவரும்,  செல்போனில் பப்ஜி விளையாட்டு மூலம் பழகி வந்தோம். ஹரிஹரன் எங்களிடம்  “வாழ்க்கை என்றால், எப்போதும் சந்தோஷமாகவும் உல்லாசமாகவும் இருக்கவேண்டும்.” என்று கூறிவந்தார். மேலும் ஹரிஹரன், அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று, பணம் கொடுத்து  உல்லாசமாக இருப்பதாகச் சொன்னார்.  அப்பெண்ணின் கைப்பேசி எண்ணை ஹரிஹரனிடமிருந்து பெற்று நாங்களும் பேசி வந்தோம். 

 

அந்தப் பெண், சிறுவனான என்னுடைய நண்பனின் செல்போனில் பேசியபோது, “வாழ்க்கை என்றால் கடைசிவரை பல ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்து சாகவேண்டும். அதுதான் எனது வாழ்க்கையின் லட்சியம்.” என்று ஆசை வார்த்தைகளைக் கூறினார். சிறுவர்களான எங்கள் மூவரையும் தனித்தனியாக வெவ்வேறு நாட்களில் அவருடைய வீட்டுக்கு வரச் சொன்னார். பெத்தனாட்சி நகரிலுள்ள ஒரு இடத்துக்கும் வரவைத்தார்.  அங்கு வைத்து, அவருடைய கைப்பேசியில் இருந்த ஆபாசப் படங்களைக் காண்பித்து, எங்களைத் தவறாக வழிநடத்தினார். 2021 ஜூலை மாதத்திலிருந்து 5 மாதங்களாகக் கட்டாயப்படுத்தி எங்களை அழைத்து, தவறான வழிகாட்டுதலைத் தொடர்ந்தார். அவர் சொன்னதைக் கேட்டு, எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தோம். அந்தப் பணத்தில்தான்,  அழகு சாதனப் பொருட்களும் ஆணுறைகளும் வாங்குவதாகச் சொன்னார். ஒருகட்டத்தில், இந்தத் தவறை வெளியில் சொல்லக்கூடாது.  வெளியில் தெரிந்தால், எங்களுடைய எதிர்கால வாழ்க்கை கெட்டு, படிப்பிற்குப் பிரச்சனை ஆகிவிடும் என்று மிரட்டினார். 

 

கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில்,  ஹரிஹரனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது எங்களுக்குத் தெரியாது. கடந்த மார்ச் 19-ஆம் தேதி, ஊரகக் காவல்நிலையப் போலீசார், வீட்டிலிருந்த என்னைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஹரிஹரன் அண்ணன் அங்கு இருந்தார். விசாரணை நடத்தியபோது, அந்தப் பெண் எங்களைக் கட்டாயப்படுத்தி தவறாக நடத்தியதைச் சொன்னேன்.  அப்போது காவல்நிலையப் பணியிலிருந்த சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளருடன் டி.எஸ்.பி. அர்ச்சனாவும் இருந்தார். அர்ச்சனா மேடம் என்னிடம் “அந்தப் பெண் உங்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார். இந்த விவரம், பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியாகி மேல் அதிகாரிகள் வரை சென்றுவிட்டது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவுசெய்து, உங்களைச் சிறையில் அடைக்கவுள்ளோம்.” என்று தெரிவித்தார். நாங்கள் அர்ச்சனா மேடத்திடம் “நாங்கள் வயதில் இளையவர்கள்.  தவறாக வழிநடத்தியது அந்தப் பெண்தான். பாதிக்கப்பட்டது சிறுவர்களாகிய நாங்கள்தான். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக,  அந்தப் பெண் யார் யாரிடம் பேசினார் என்பதை அறிய,  அவருடைய கைப்பேசியை ஆய்வுக்கு உட்படுத்துங்கள். உண்மை தெரியவரும்.” என்றோம். நாங்கள் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல்,  பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்கள். 

 

The victims of the teen were minors! - New twist in Virudhunagar  case!

 

அடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தபோது, அந்தப் பெண்ணால் தவறாக நடத்தப்பட்டதைச் சொன்னேன். அவர்களோ “இந்த வழக்கு பெரிய அளவில் பத்திரிக்கைச் செய்தியாக வெளிவந்துவிட்டது. அரசியல் கட்சியினர் வேறு போராட்டம் நடத்துகின்றனர். எங்களிடம் சொன்னதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது” என்று அவர்கள் பங்கிற்கு மிரட்டினார்கள். 

 

18 நாட்கள் சிறையில் இருந்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி, மன வேதனையுடன் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். விருதுநகர் ஊரகக் காவல்நிலையப் போலீசார், இளவரான என்னைக் கட்டாயப்படுத்தி தவறாக வழிநடத்திய அந்தப் பெண் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அதனால், இந்த  வழக்கில் தாங்கள் (போக்சோ நீதிமன்றம்) தலையிட்டு, விசாரணை மேற்கொண்டு, அந்தப் பெண் மீது வழக்கு பதிவுசெய்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்கச் செய்யுங்கள் என்று புகாரில் முறையிட்டுள்ளார்.  

 

இந்த விவகாரம் குறித்து அந்தப் பெண் வசிக்கும் பகுதியில் களவிசாரணை மேற்கொண்டபோது நமக்குக் கிடைத்த ‘முரணான’ தகவல்களை, தொடக்கத்திலிருந்தே நீக்குபோக்காகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். சிறுவனின் புகாரிலும்கூட, அத்தகைய குற்றச்சாட்டே அந்தப் பெண் மீது சுமத்தப்பட்டுள்ளது. 

 

இந்த விவகாரத்தை வழக்காகப் பதிவுசெய்து வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த விருதுநகர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனாவிடம் ‘சிறார்கள் மிரட்டப்பட்டார்களா? அவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா?’ எனக் கேட்டு விளக்கம்பெற, அவருடைய கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டோம். தொடர்ந்து நம்மைத் தவிர்த்தார். குறுந்தகவலும் அனுப்பினோம். எந்த பதிலும் இல்லை. தனது விளக்கத்தை டி.எஸ்.பி. அர்ச்சனா பகிர முன்வந்தால், வெளியிடத் தயாராகவுள்ளோம். 

 

 

 

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.