Skip to main content

ம.நீ.ம. வேலூர் தேர்தலை புறக்கணித்ததில் உள்நோக்கம் இருக்கிறதா? 

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

 

மக்கள் நீதி மய்யம் வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸ். 
 

வேலூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் தலைவர், நாம் எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிடலாம். ஆனால் வேலூர் தேர்தலில் நிற்க காரணம் என்ன? நாடாளுமன்றத் தேர்தலை முழுமையாக சந்தித்தோம். இடைத்தேர்தல்களையும் சந்தித்தோம். அரவக்குறிச்சி, தஞ்சாவூர், ஆர்.கே.நகர் போன்ற தொகுதிகளில் பணப்பட்டுவடா புகாரில் தேர்தலை ரத்து செய்தார்கள். மீண்டும் தேர்தல் அறிவித்து, அதே நபர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுவதும் நடக்கிறது. இப்படித்தான் தேர்தல் நடக்கும் என்றால், ஏன் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாமலேயே தேர்தலை நடத்தி, விசாரணை நடத்தி அதற்கான தண்டனை வழங்கியிருக்கலாம். தேர்தலை ரத்து செய்தார்கள் என்றால் அதற்கான விசாரணை நடத்தி முடித்துவிட்டு, அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டாவது நடத்தலாம். ஒன்றுமில்லாம் மீண்டும் தேர்தலை நடத்துவதுதால் நேர்மையாக தேர்தலை சந்திப்பவர்கள் எவ்வளவு நஷ்டத்தை சந்திக்கிறார்கள். தேர்தல் ஆணையத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் விதத்தில் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று அவர் சொன்னதால் இப்படிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டது. 

 

kamal


 

கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாக சிலர் கூறுகிறார்களே?
 

ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டதால் காலதாமம் ஆனது. மேலும் 18ஆம் தேதி மதியம் 3 மணி வரை காலஅவகாசம் இருக்கும்போது அறிவிக்க என்ன அவசரம். 

 

உள்நோக்கம் இருப்பதாக கூறுகிறார்களே?

 

எந்தவித உள்நோக்கமும் கிடையாது. இந்த தேர்தலில் யாரும் யாருக்கும் விட்டுக்கொடுக்க வேண்டாம். நிற்கக்கூடிய பெரிய கட்சிகள் மக்களை நம்பி நிற்கவில்லை. பணபலத்தை நம்பிதான் நிற்கிறது. அந்த விளையாட்டைத்தான் அவர்கள் விளையாடப்போகிறார்கள். இப்போதும் பணப்பட்டுவாடா குறைந்த மாதிரி தெரியவில்லை. 


 

போட்டியிடாதது மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு ஏமாற்றமாக இருக்காதா?

 

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தபோது, அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தினோம். ஒரே ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. இதனை ஏன் புறக்கணிக்கிறோம் என்று தெளிவுப்படுத்தியிருக்கிறோம். தேர்தல் ஆணையத்தை கண்டிப்பதற்காக புறக்கணித்திருக்கிறோம். 


 

makkal needhi maiam Murali Appas



பிக்பாஸ் பாதிக்கப்படும் என்பதால்தான் தேர்தலை புறக்கணித்தாக சொல்லுகிறார்களே?

 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 1972ல் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர். 77ல் முதலமைச்சரானார். இந்த இடைப்பட்ட காலத்தில் 16 திரைப்படங்கள் நடித்திருக்கிறார். படங்களில் நடித்தற்காக அரசியல் பங்கெளிப்பை குறைத்துக்கொண்டு எதுவும் அவர் செய்யவில்லை. எங்கோ வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு இங்கே ஏதாவது நடந்தால் அரைமணி நேரத்தில் அறிக்கை விடும் தலைவர்களெல்லாம் இருக்கிறார்கள். அப்படி அரசியல் செய்பவர்கள் யாரும் இவர்கள் கண்ணுக்குப்படவில்லை. இங்கேயே இருந்து கொண்டு ஒரு நாள் தொழில் ரீதியில் போவது மட்டும் சிலருக்கு கண்ணை உருத்துகிறது.


 


 

 

 

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

வேட்பாளர்கள் யார்?- விசிக அறிவிப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் யார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிதம்பரத்தில் ஏற்கனவே போட்டியிட்ட திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அண்ணா அறிவாலயம் அழைத்து சென்று முதல்வரை சந்தித்து ஆசிபெற்று வரும் நிலையில் இன்று விசிக தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னதாகவே செய்தியாளர் சந்திப்புகளில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என திருமாவளவன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், ''இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அடையாளப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு இன்று முக்கியமான தேவையாக இல்லை. பாஜகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் வேட்கையாக இருக்கிறது. ஆகவே இந்திய அளவில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், ஒட்டுமொத்தத்தில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் இன்று மக்கள் இருக்கிறார்கள்.

மக்கள் ஒருபுறமும் சங்பரிவார் கும்பல் ஒரு புறமும் இந்த தேர்தல் களத்தில் இருக்கிறது. நாட்டு மக்கள் ஒருபுறம் நிற்கிறோம் பாரதிய ஜனதா தலைமையிலான சங்பரிவார் ஒருபுறம் இருக்கிறது. எனவே இங்கு யுத்தம் நடப்பது காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் அல்ல, அல்லது இந்தியா கூட்டணிக்கும் என்டிஏ கூட்டணிக்கும் அல்ல. மக்களுக்கும் சங்பரிவார்களுக்கும் இடையிலான யுத்தம் தான் இது''என்றார்.