Skip to main content

ம.நீ.ம. வேலூர் தேர்தலை புறக்கணித்ததில் உள்நோக்கம் இருக்கிறதா? 

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

 

மக்கள் நீதி மய்யம் வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸ். 
 

வேலூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் தலைவர், நாம் எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிடலாம். ஆனால் வேலூர் தேர்தலில் நிற்க காரணம் என்ன? நாடாளுமன்றத் தேர்தலை முழுமையாக சந்தித்தோம். இடைத்தேர்தல்களையும் சந்தித்தோம். அரவக்குறிச்சி, தஞ்சாவூர், ஆர்.கே.நகர் போன்ற தொகுதிகளில் பணப்பட்டுவடா புகாரில் தேர்தலை ரத்து செய்தார்கள். மீண்டும் தேர்தல் அறிவித்து, அதே நபர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுவதும் நடக்கிறது. இப்படித்தான் தேர்தல் நடக்கும் என்றால், ஏன் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாமலேயே தேர்தலை நடத்தி, விசாரணை நடத்தி அதற்கான தண்டனை வழங்கியிருக்கலாம். தேர்தலை ரத்து செய்தார்கள் என்றால் அதற்கான விசாரணை நடத்தி முடித்துவிட்டு, அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டாவது நடத்தலாம். ஒன்றுமில்லாம் மீண்டும் தேர்தலை நடத்துவதுதால் நேர்மையாக தேர்தலை சந்திப்பவர்கள் எவ்வளவு நஷ்டத்தை சந்திக்கிறார்கள். தேர்தல் ஆணையத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் விதத்தில் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று அவர் சொன்னதால் இப்படிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டது. 

 

kamal


 

கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாக சிலர் கூறுகிறார்களே?
 

ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டதால் காலதாமம் ஆனது. மேலும் 18ஆம் தேதி மதியம் 3 மணி வரை காலஅவகாசம் இருக்கும்போது அறிவிக்க என்ன அவசரம். 

 

உள்நோக்கம் இருப்பதாக கூறுகிறார்களே?

 

எந்தவித உள்நோக்கமும் கிடையாது. இந்த தேர்தலில் யாரும் யாருக்கும் விட்டுக்கொடுக்க வேண்டாம். நிற்கக்கூடிய பெரிய கட்சிகள் மக்களை நம்பி நிற்கவில்லை. பணபலத்தை நம்பிதான் நிற்கிறது. அந்த விளையாட்டைத்தான் அவர்கள் விளையாடப்போகிறார்கள். இப்போதும் பணப்பட்டுவாடா குறைந்த மாதிரி தெரியவில்லை. 


 

போட்டியிடாதது மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு ஏமாற்றமாக இருக்காதா?

 

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தபோது, அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தினோம். ஒரே ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. இதனை ஏன் புறக்கணிக்கிறோம் என்று தெளிவுப்படுத்தியிருக்கிறோம். தேர்தல் ஆணையத்தை கண்டிப்பதற்காக புறக்கணித்திருக்கிறோம். 


 

makkal needhi maiam Murali Appas



பிக்பாஸ் பாதிக்கப்படும் என்பதால்தான் தேர்தலை புறக்கணித்தாக சொல்லுகிறார்களே?

 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 1972ல் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர். 77ல் முதலமைச்சரானார். இந்த இடைப்பட்ட காலத்தில் 16 திரைப்படங்கள் நடித்திருக்கிறார். படங்களில் நடித்தற்காக அரசியல் பங்கெளிப்பை குறைத்துக்கொண்டு எதுவும் அவர் செய்யவில்லை. எங்கோ வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு இங்கே ஏதாவது நடந்தால் அரைமணி நேரத்தில் அறிக்கை விடும் தலைவர்களெல்லாம் இருக்கிறார்கள். அப்படி அரசியல் செய்பவர்கள் யாரும் இவர்கள் கண்ணுக்குப்படவில்லை. இங்கேயே இருந்து கொண்டு ஒரு நாள் தொழில் ரீதியில் போவது மட்டும் சிலருக்கு கண்ணை உருத்துகிறது.


 


 

 

 

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்