Skip to main content

வி.சி.க- பா.ம.க பொதுச் செயலாளர்கள் ஒரே தொகுதியில் போட்டி !

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க.வின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனும் விழுப்புரத்தில் களம் காண்கிறார்கள். பிரதான கூட்டணிகளின் சார்பில் போட்டியிடும் இவ்விருவருமே வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், நிதி வசதியிலும் பின்தங்கி இருப்பவர்கள்.

 

ravikumar



எனினும் தொண்டர்கள் பலத்தில் இருவருமே சரிசமமாக உள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க. தலைமைகளின் கண்ணசைவுக்கேற்பதான் களத்தில் இவர்களின் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் தெரியும். தி.மு.க.வின் விழுப்புரம் மத்திய மா.செ. பொன்முடி, தனது மகன் கௌதம சிகாமணி போட்டியிடும் கள்ளக்குறிச்சியிலேயே கவனம் செலுத்துவதால், தெற்கு மா.செ.அங்கயற்கண்ணி, வடக்கு மா.செ.மஸ்தான் மற்றும் எம்.எல்.ஏ.க்களான மாசிலாமணி, சீத்தாபதி, ராதாமணி, கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோரையே அனைத்து ஒத்துழைப்புகளுக்கும் பெரிதும் நம்பியுள்ளார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ரவிக்குமார். 

"கட்சித் தலைமையிடம் காட்டும் நெருக்கம் அளவுக்கு அடிமட்டத் தொண்டர்களிடம் ரவிக்குமாருக்கு நெருக்கமில்லை. என்றாலும் இந்தத் தேர்தல் எங்களுக்கு வாழ்வா சாவா என்கிற நிலையில் இருப்பதால், தலைவர் திருமாவின் கட்டளையை ஏற்று ரவிக்குமாரின் வெற்றிக்குப் பாடுபடுவோம். அதேபோல் உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமார் நிற்பதால், தி.மு.க.வினரும் உழைப்பும் சிறப்பாகவே இருக்கும்'' என்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகளின் தொண்டர்கள்.

 

villupuram



பா.ம.க. ஏரியாவிலும் புலம்பல்கள் கேட்கின்றன. "பாக்கெட்ல இருந்து பைசாவை எடுப்பதற்கு ரொம்பவே யோசிப்பாரு. இதுவே ஏ.டி.எம்.கே. கேண்டிடேட்டா இருந்தா தாராளமா அள்ளிவிடுவாரு. ஆனா இப்ப என்ன செய்றது, யார்ட்ட சொல்றது'' என புலம்புகிறார்கள் பா.ம.க. தொண்டர்கள். 

இரு கட்சிகளின் பொ.செ.க்களுக்கு எதிராக அ.ம.மு.க. சார்பில் களம் இறங்கியிருக்கிறார் வானூர் எக்ஸ் எம்.எல்.ஏ.கணபதி. எனவே விழுப்புரம் தொகுதியில் மும்முனைப் போட்டி இருந்தாலும் உதயசூரியனுக்கும் மாம்பழத்துக்கும் இடையேதான் கடும் போட்டி. 

 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.