Skip to main content

“மோடி குட்டிக்கரணம் அடிச்சாலும் ஜெயிக்க முடியாது” -  ‘ஆம் ஆத்மி’ வசீகரன்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Vasigaran  Interview

 

பாஜக ஆட்சி குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கர்நாடகாவில் போட்டியிடும் வேட்பாளர் வசீகரன் பகிர்ந்துகொள்கிறார்.

 

அவர் கூறியதாவது “கர்நாடக மக்கள் தெளிவாக உள்ளனர். பாஜக ஆட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் கர்நாடகம். குறுக்கு வழியின் மூலமாகவே கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தது பாஜக. இந்த முர்றை அவர்களை கர்நாடக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மோடி என்ன குட்டிக்கரணம் போட்டாலும் பாஜக வெல்ல முடியாது. எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதில் பாஜக ஆர்வமாக உள்ளது. அனைத்துமே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். டெல்லியில் நாங்கள் ஆட்சி செய்வது பாஜகவின் கண்ணை உறுத்துகிறது. 

 

இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குபவர்களுக்கு உயர் பதவி அளிப்பது இவர்களுடைய வழக்கம். அந்த வகையில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதிக்கும் பதவி உயர்வு வழங்கியுள்ளனர். வெட்கமே இல்லாத அரசாங்கம் பாஜக அரசாங்கம். அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். மானங்கெட்ட கட்சி பாஜக. பாஜக செய்யும் மத அரசியல், சாதி அரசியலை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் செய்ய வேண்டும். அவருடைய பேச்சுக்களை இனி மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

 

இந்த ஆளுநர் தமிழ்நாட்டுக்கு எதிரானவர். அரசுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் எதிரானவராக இவர் இருக்கிறார். இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. இந்த நிலைமை நீடித்தால் மக்களால் அடித்து விரட்டப்படுவார் ஆளுநர். ஆட்சியை எல்லாம் யாராலும் கலைக்க முடியாது. அதிமுகவின் ஜெயக்குமார் ஏதாவது பேச வேண்டும் என்று பேசுகிறார். திமுகவை குறை சொல்ல அதிமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. குஜராத்தில் ஒவ்வொரு வருடமும் பல பெண்கள் கடத்தப்படுகிறார்கள் என்கிற தகவல் வந்துள்ளது. அப்படியென்றால் முதலில் கலைக்கப்பட வேண்டியது குஜராத் பாஜக அரசுதான். 

 

மக்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக குஜராத் இருக்கிறது. மோடியையும் பாஜக கூட்டத்தையும் முதலில் அப்புறப்படுத்த வேண்டும். அவர்களால் இன்று நாட்டுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஜனநாயக விரோத செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்தையும் விட இன்று முக்கியமானது பாஜகவை வீழ்த்துவது தான். எனவே வரும் தேர்தலில் அவர்கள் வீழ்த்தப்படுவார்கள். வரும் 2024 தேர்தலில் ஒரு நல்ல ஆரோக்கியமான முடிவை ஆம் ஆத்மி எடுக்கும்.”

 


 

Next Story

“சிறையில் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம்” - டெல்லி எம்.பி. குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024

 

 "Anything can happen to Kejriwal in jail" - Delhi MP Accusation

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை எம்.பி சஞ்சய் சிங் ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார். மேலும், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையிலேயே கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி நேற்று முன்தினம் குற்றம் சாட்டியிருந்தது. குறிப்பாக வீட்டில் சமைத்த உணவு, இன்சுலின் போன்றவை அவருக்கு மறுக்கப்பட்டு உள்ளதாக டெல்லி மந்திரி அதிஷி குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், அக்கட்சியின் எம்.பி சஞ்சய் சிங்கும், டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியதை உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பா.ஜ.க.வின் நடவடிக்கை ஒருவரைக் கொல்லும் நிலைக்குக்கூட தள்ளும். எனவே, சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம். அவருக்கு எதிராக சதி செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார். 

Next Story

அரவிந்த் கெஜ்ரிவால் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Arvind Kejriwal Petition Hearing in Supreme Court

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (15.04.2024) விசாரிக்க உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.