Skip to main content

எங்களிடம் ஒரு மந்திரம் இருக்கு! செயல் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி

Published on 03/02/2019 | Edited on 04/02/2019
vasanthakumar



தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
 

செயல் தலைவர் பதவியை எப்படி நினைக்கிறீர்கள்?
 

ராகுல்காந்தி இந்த பதவியை வழங்கியிருக்கிறார். நல்ல பதவியை தந்த அவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, கட்சிக்காக மேலும் தீவிரவமாக உழைப்பேன். 
 

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டுள்ளாரே?
 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை நியமிப்பதும், மாற்றுவதும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரின் விருப்பம். அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்படுகிறோம். 
 

பாராளுமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?
 

காங்கிரஸ் - திமுக கூட்டணித்தான் நிலைப்பாடு. 
 

திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி உள்ளது?
 

திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. 
 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும்?
 

அது ராகுல்காந்திக்குத்தான் தெரியும். 
 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாவது இடத்திற்கு வந்தீர்கள். வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவீர்களா?
 

மீண்டும் குமரி தொகுதியில் போட்டியிடுவதற்கு ராகுல்காந்தியிடம் வாய்ப்பு கேட்போம். அவர் அனுமதித்தால் போட்டியிடுவோம். 
 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நிறைய உட்கட்சி பூசல் உள்ளதே?
 

காங்கிரஸ் கட்சி எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமில்லை. அதில் நான் பெரியவனா? நீ பெரியவனா என்று சண்டைப்போடுவதில் அர்த்தமேயில்லை. எல்லோருக்கும் பெரியவங்க ராகுல்காந்திதான். ராகுல்காந்திதான் நெம்பர் 1. நாங்களெல்லாம் ஜீரோ. அதனால் ராகுல்காந்தி என்ன சொல்கிறாரோ அதனை நாங்கள் கேட்கப்போகிறோம். 
 

உட்கட்சி பூசலால் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்காதா?
 

அதற்கெல்லாம் எங்களிடம் ஒரு மந்திரம் இருக்கு. நாங்கள் அந்த மந்திரத்தை பிரயோகிச்சமென்றால் எல்லாம் சரியாகிவிடும். 
 

ஜி.கே.வாசன் மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைவற்கான வாய்ப்பு உள்ளதா?
 

கண்டிஷன் பேரில் யாரையும் சேர்க்க மாட்டார்கள். யாராக இருந்தாலும் அவர்களாக வந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொள்ள வேண்டியதுதான். 
 

இடைக்கால பட்ஜெட் வரக்கூடிய தேர்தலுக்கு பின் எடுக்கப்பட உள்ள புதிய வளர்ச்சிப்பாதைக்கான டிரைலர் என பிரதமர் நரேந்திர மோடி சொல்லியிருக்கிறாரே?
 

விவசாயிக்கு ஒரு நாளைக்கு 17 ரூபாய் கொடுப்பேன் என்பது டிரைலரா? ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பதிலும் இல்லை. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி எதுவும் இல்லை. இந்த தற்காலிக பட்ஜெட் தற்காலிகமாகவே இருக்கும். பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவோம். 
 

மாநில அளவில் பொறுப்புக்கு வந்துவிட்டீர்கள். பாஜகவின் மாநிலத் தலைவராக இருப்பவர் தமிழிசை சௌந்தரராஜன் உங்கள் உறவினர். அவர்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கடுமையான பேட்டியோ, அறிக்கையோ வெளியிட்டால்...
 

அதையும் தாண்டி, அதற்கு மேலேயும் அறிக்கை வெளியிடுவோம். 

 

vasathakumar



உறவினர் என்பதால்...
 

யார் எந்த இடத்தில் இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் பிறப்பால் காங்கிரஸ்காரர்கள். எங்களுக்கு காங்கிரஸ் கட்சித்தான் முக்கியம். சொந்தமெல்லாம் சம்மந்தமில்லை...
 

ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுவாரா?
 

கண்டிப்பாக.
 

மம்தா பானர்ஜி நடத்திய பொதுக்கூட்டத்தில் தேர்தலுக்குப் பின் பிரதமரை தேர்ந்தெடுப்போம் என அதில் கலந்து கொண்ட தலைவர்கள் பேசினார்களே?
 

அது அவர்களுடைய நிலைப்பாடு. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னுறுத்துவோம். வெற்றி பெறுவோம். அவர்களும் எங்களை ஆதரிப்பார்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.