Skip to main content

மாஃபியாக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறது கர்நாடக காங்கிரஸ்! - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

Published on 11/05/2018 | Edited on 12/05/2018

வரும் 12ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அம்மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன். கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக சமூக வலைதள பொறுப்பாளராக பணியாற்றிய அவர், தமிழக தலைவர்களின் பிரச்சார சுற்றுப் பயண ஏற்பாடுகள், தமிழக கட்சி நிர்வாகிகளை பல்வேறு இடங்களுக்கு பிரச்சாரத்திற்கு பிரித்து அனுப்புவது போன்ற பணிகளையும் மேற்கொண்டிருந்தார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில் கர்நாடக தேர்தல் களம் அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

 

vanathisinivasan

 

 


''பாஜகவுக்கு அடுத்த வெற்றி முகம் கொடுப்பது கர்நாடகா மாநிலம். கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் அம்மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் பின் தங்கியிருப்பது பற்றியும், விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு என்ன செய்துக்கொண்டிருக்கிறது என்பது பற்றியும், ஏற்கனவே எடியூரப்பா ஆட்சிக் காலத்தில் நடந்த பணிகளையும் மக்களிடம் எடுத்துச் சென்றோம். 
 

மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்றார்கள். பின்னர் காங்கிரஸ் - பாஜக சரிசமமாக வரும் என்றார்கள், பின்னர் பாஜக ஆட்சிக்கு வரும் என கருத்துக் கணிப்புகள் பல விதமாக வந்தது. நிச்சயமாக பாஜக தனி பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்கும். 
 


மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மோடியின் பிரச்சாரம் இருந்தது. அதேபோல பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். இதேபோல் காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ராகுல் காந்தியும் அதிக நேரத்தை ஒதுக்கி கர்நாடகத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ராகுல் சென்றார். நடிகர் ராஜ்குமார் நினைவிடத்திற்கும் சென்றார். 

லிங்காயத் சமுதாய மக்களிடம் பிரிவிணையை ஏற்படுத்தி அரசியல் செய்ய காங்கிரஸ் முயற்சி செய்தது. முஸ்லீம் மக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வைத்து, அதன் மூலம் ஒரு சில முஸ்லீம் வேட்பாளர்களை காங்கிரசுக்கு ஆதரவாக வாபஸ் பெற வைத்துள்ளனர். எந்த வகையில் மக்களை பிரித்து வைத்து அரசியல் செய்ய முடியுமோ, அத்தனை முயற்சிகளையும் காங்கிரஸ் இங்கு செய்தது. 
 

 

 

காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பாஜக மீது குற்றச்சாட்டு வைக்கிறது, மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை வைக்கிறது. இருப்பினும் 2014க்கு பின்பாக பீகாரை தவிர அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதரவாகத்தான் வாக்குகள் வந்திருக்கின்றன''. 


 

modi


நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால் கர்நாடகத்தில் பாஜக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதா?
 

ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு கட்சிக்கும் அடுத்தக்கட்டத்துக்கான நகர்வு என சொல்லுவார்கள். எங்களைப் பொறுத்தவரை இந்த தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதவில்லை. தென் இந்தியாவை பொறுத்தவரையில் முக்கியமான தேர்தல். கர்நாடகத்தை பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள். ஆகையால் இது எங்களுக்கு முக்கியமான தேர்தலாக கருதுகிறோம்.
 

முன்பு இல்லாத அளவுக்கு பிரச்சாரத்திற்காக அதிக செலவு பாஜக செய்திருக்கிறதே. செய்தி சேனல்களை வைத்தால் ஐந்து நிமிடத்திற்கோர் பாஜக விளம்பரம் வருகிறது. மத்திய அரசின் சாதனைகளை அடுக்குகிறது. இணைய இணைப்பில் மொபைல் போனை திறந்தால் பாஜக விளம்பரம் வருகிறது. மோடி, அமித்ஷா, எடியூரப்பா சிரிக்கிறார்கள்...
 

ஒவ்வொரு மாநில தேர்தலையும் இப்படித்தான் சந்திக்கிறோம். உத்திரப்பிரதேசத்திலும் இப்படித்தான் பிரச்சாரம் செய்தோம். ஒவ்வொரு மாநிலத் தேர்தலையும் பாஜக சீரியஸாக எடுத்துக்கொள்கிறது. தன்னுடைய அத்தனை பலத்தையும் பிரயோகிக்கிறது. 

 

rahul-gandhi


 
தனி பெரும்பாண்மையுடன் பாஜக வெற்றி பெறும் என்கிறீர்கள். எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள்?
 

135 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும். எடியூரப்பா முதல் அமைச்சராக பதவியேற்பார். 
 

 

 

தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கள நிலவரம் எப்படி இருந்தது?
 

பெங்களூரு நகரத்தில் 8 தொகுதிகளில் தமிழர்கள் வசிக்கின்றனர். எடியூரப்பாவை முதல்வராக அறிவித்ததால் இங்குள்ள தமிழர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 18 ஆண்டுகள் திருவள்ளுவர் சிலையை மூடி வைத்திருந்ததை திறந்தார் என்பதால் அவர் மீது தமிழர்கள் மிகப்பெரிய மரியாதை கொண்டிருக்கிறார்கள். 
 

கர்நாடகாவில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. எடியூரப்பா மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. ரெட்டி சகோதரர்கள் மீது வழக்குகளும் தொடரப்பட்டது. இருப்பினும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் போட்டியிடுவதாகவும், பெரும்பாலான இடங்களில் அவர்கள் கை காட்டும் நபரே பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதே?. 
 

யார் யாரெல்லாம் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானார்களோ, எடியூரப்பா உள்பட அவர்களெல்லாம் நீதிமன்றத்திற்கு சென்று வழக்குகளை சந்தித்தார்கள். நீதிமன்றத்தாலேயே குற்றமற்றவர்கள் என்று சொன்னதற்கு பின்னால்தான் அவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. 
 

ரெட்டி சகோதரர்கள் அவர்கள் மீதான வழக்கை எதிர்கொண்டுள்ளார்கள். அவர்கள் மீது வழக்கு இருக்கிறது என்பதால், கட்சியில் இருக்கக்கூடிய அவர்களுடைய உறவினர்களை தண்டிக்க முடியாது. கட்சிக்காக உழைக்கக்கூடியவர்களை அவர்களுடைய உறவினர் என்ற ஒரே காரணத்திற்காக தள்ளி வைக்க முடியாது. 

 

vanathisinivasan


இந்த பிரச்சாரத்தை காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது. ஆனால் தற்போது உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. பெங்களூருவில் உள்ள மாஃபியாக்களுடன் அந்த அமைச்சர்கள் கைகோர்த்துக்கொண்டு ஒரு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை காங்கிரஸ் மறந்துவிட்டது. 
 

பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் பணம் விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுகிறதே?
 

பாஜக பண விநியோம் செய்வதாக சொல்வது முற்றிலும் தவறானது. காங்கிரஸ் கட்சிதான் பண விநியோகம் செய்தது. காங்கிரஸ் சார்பாக இதுவரை இல்லாத அளவிற்கு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அரசியல் விமர்சகர்கள் தமிழகத்தின் பாணி என்று பேசுகிறார்கள், பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Prime Minister Modi praises Tamil Nadu BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும்  பாராமல் ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Congress struggles against the central government

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சூழலில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கெனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், தற்போது ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 1993-94, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ் கங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரூ. 11 கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் (P.A.N.) எண்ணை பயன்படுத்தியதற்கு ரூ. 11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (30.03.2024) நாடு தழுவிய போராட்டம் நடத்த, அனைத்து மாநில தலைமையகம் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமையகங்களில் அனைத்து காங்கிரஸ் பிரிவுகளுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.

Congress struggles against the central government

இது குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய ஜனநாயகத்தை முறியடிக்கும் முறையான செயல்பாட்டினை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கும் சட்டவிரோத முயற்சி நடந்து வருகிறது. நேற்று (28.03.2024) ரூ. 1823.08 கோடி ரூபாய் செலுத்துமாறு வருமான வரித்துறையின் தகவல் தொழில்நுட்பத் துறையிடம் இருந்து புதிய நோட்டீஸ் வந்தது. ஏற்கனவே வருமான வரித்துறை காங்கிரசின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 135 கோடி ரூபாயை வலுக்கட்டாயமாக எடுத்துள்ளது.

இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த மோசமான தாக்குதலையும், முக்கியமாக மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில் கட்சி மீது வரிப்பயங்கரவாதத்தை சுமத்துவதையும் கருத்தில் கொண்டு, அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் நாளை (30.03.2024) அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில மற்றும் மாவட்ட தலைமையகத்தில் மாபெரும் பொது ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.