Skip to main content

சிங்கிள்ஸ் படிக்காதீங்க... காதலர் தினத்திற்கு காரணமான கதை..!

Published on 12/02/2019 | Edited on 14/02/2020

பிப்ரவரி 7 முதல் 14 வரை உலகெங்கும் காதலர் வாரம் கொண்டாடப்படுகிறது. ரோஸ் நாளில் தொடங்கி ப்ரபோஸ் செய்து, சாக்லேட் பகிர்ந்து, பொம்மை கொடுத்து, வாழ்நாள் முழுவதும் உடனிருப்பேன் என ப்ராமிஸ் செய்து, அணைப்பில் அன்பை பகிர்ந்து, முத்த தினம் கொண்டாடி, மொத்த காதல் வாழ்க்கையின் சுருக்க வடிவத்தையும் நினைவுகூர்ந்து இறுதியில் காதலர் தினத்தை கொண்டாடுகிறோம். காதல் வாழ்த்து அட்டைகளும், சிகப்பு ரோஜாக்களும், சிறகு முளைத்த இதயங்களும் அன்பை ஏற்றிக்கொண்டு அனைவருக்கும் வழங்கி வருகையில்...

 

valentain day

 

நான் ஒரு காதல் கதை சொல்ல போகிறேன். கதையை கேட்டு "ஏய் இந்தப் படத்தை நான் பாத்துருக்கேன்"னு சொல்லிடக்கூடாது. காதல் திரைப்படங்கள் வெற்றியடைய காரணம், காதல் உயிரினங்களின் பொதுவான உணர்ச்சி. இந்தக் கதையும் அப்படித்தான்.  பொதுவான உணர்ச்சியென்றாலும் எல்லா காதலும் ஒரே மாதிரி இல்லையே! காதல் என்றால் இப்படித்தான் என வரையறைகள் எழுத பலர் முயற்சித்தாலும் எதற்கும் வசப்படாத மாயப் பறவையாய் பறக்கிறது காதல். உண்மை காதல் பொய்யான காதல் என கண்டுகொள்வதற்கான கற்பிதங்கள் அனைத்தும், கிழிந்த வலையை விரித்துவிட்டு, பறவையை பிடித்துவிட மரக்கிளையில் காத்திருக்கும் வேடனைபோல தோற்றுவிடுகின்றன. அப்படி, கண்ணால் காண்போருக்கு அகப்படாத காதலெனும் மாயப்பறவை கண்ணில்லாத பெண் ஒருத்திக்கு அகப்பட்ட கதைதான் இது.

 

நம் கதாநாயகன் சினிமாக்களில் வருவது போல் காலேஜில் கடைசி பெஞ்ச் மாணவனோ, தெருஓர குட்டி சுவற்றில் சிகரெட் பிடித்துக்கொண்டே பெண்களை வம்பிழுக்கிற வி.ஐ.பி யோ, மார்க்கெட் கடைகளில் மாமூல் கேட்கும் ரவுடிகளுடன் சண்டைபோட்டு மார்க்கெட்டையே காலி செய்யும் ஆக்ஷன் ஹீரோவோ இல்ல. அதுக்கும் ஒருபடி மேல். தேச துரோகியாக பாதாள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதி. அந்த சிறையின் மற்ற கைதிகள் கொலை, கொள்ளை, என பல்வேறு குற்றங்களுக்காக தண்டிக்கப்படுகின்றனர். நம் நாயகனோ நாடோடிகள் பட கதாநாயகன் போல் காதலை சேர்த்துவைத்ததால் சிறைக்கு வந்தவர்.  அந்த சிறையின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் பெண் தினமும் சிறைக்கு வந்து கைதிகளுக்கு மத போதனை செய்வது வழக்கம். பிறவியிலேயே பார்வையற்ற அவளது பாதைகள் அன்பின் வெளிச்சத்தில் மட்டுமே அவளுக்கு தெரிந்தன.

 

பாதாள சிறையில் கண்ணிருந்தும் இருளில் கிடந்த கைதிகள் அவளின் வருகைக்காகவே தினந்தோறும் காத்திருந்தனர். நமது நாயகனுக்கும் அப்படிதான். எப்போதும் சிறைச்சாலையின் படிக்கட்டுகளையும், பாதைகளையும், உடலில் சுவாச சுழற்சி நடப்பது போல் இயல்பாய் கடந்துவரும் அவளது கால்கள், இன்று ஏதோ ஒரு பரவசத்தில் ஆங்காங்கே இடித்தபடி வந்தன. கையில் பைபிளுக்கு பதில் சிகப்பு ரோஜாக்கள். சிறைக்கதவுகள் திறந்து சூரிய கதிர்களின் ஜொலிப்பில் தேவதையாய் தோன்றினால் அவள். கைதிகள் பக்தியில் திளைத்திட நம் நாயகனோ காதலில் திளைத்தான். கைதிகளின் கண்கள் அவளுடனே பயணமாகி கடைசியில் நாயகனின் அறையில் வந்து நின்றன. அருகருகே அவர்கள், நடுவில் கம்பிகளாலான கதவு. அந்த இடம் முழுவதும் மவுனம் நிலைகொள்ள மனதிற்குள் வார்த்தைகள் ஆரவாரம் செய்தன. முதலில் அவளே தொடங்கினாள் "என் உலகம் ரொம்ப பெருசா இருந்துச்சி, பரந்த கடலுக்கும் எனக்கும் இருக்க நட்புக்காக தென்றல் தூது போகும், மின் மினி பூச்சிகள் நான் தூங்குறதுக்கும், தேன் வண்டுகள் நான் எழுந்திருக்கவும் பாட்டு பாடும், என் கால்கள் தரையில படாம மேகம் தூக்கிட்டு போகும்... இப்ப எல்லாமே மாறிப்போச்சு. என் பெரிய உலகம் சிறைக்குள்ள இருக்கு" அவள் பேசிக்கொண்டேயிருக்க அவன் "இல்ல, அது தூக்கு மேடையில இருக்கு. தயவுசெஞ்சி உன் எண்ணத்த மாத்திக்கோ" என அவனது காதல் அனைத்தையும் குரல்வளைக்கு கீழே அடக்கிக்கொண்டான்.

 

valentain day

 

பார்வையற்றவளாய் இருந்தாலும் வசதியும் அந்தஸ்தும் இருக்கிற அதிகாரியின் மகளுக்கு கைதியின் மேல் காதல் வர காரணம் என்ன? காதலை சேர்த்துவைத்தால் தூக்குத்தண்டனையா கொடுப்பார்கள்? என கேள்விகள் வரலாம். இரண்டு கேள்விக்கும் ஒரே பதில்தான். 'க்ளாடியஸ் நிமி' என்ற அரசர் தன் போர் படையை வலிமையாக்க நினைத்தான். படை வீரர்களின் வலிமையையும், எண்ணிக்கையையும் பெருக்குவதற்காக நாட்டில் இளைஞர்கள் யாரும் திருமணம் செய்யக்கூடாது என தடைவிதித்தான். இதை மீறுபவர்களுக்கு மரணதண்டனை எனவும் அறிவித்தான். காதலும், குடும்பமும் இல்லையென்றால் நிறைய வீரர்கள் படையில் சேருவார்கள் என்ற எண்ணம் அவனுக்கு. இந்த அறிவிப்பால் காதலித்த அனைவரும் பிரிந்தனர். காதலர்கள் தேடி தேடி கொல்லப்பட்டனர். இந்த சூழலில் கிறிஸ்துவ பாதிரியாராக இருந்த நம் நாயகன் அரசுக்கு தெரியாமல் பல காதலர்களுக்கு திருமணம் செய்துவைத்தார். கொடுமைக்கார அரசரின்மேலும், அவருக்கு கீழ் வேலை பார்க்கும் தன் தந்தையின்மீதும் வெறுப்பில் இருந்த நாயகி, நாயகனின் துணிச்சலான செயலை கேள்விப்பட்டு அவர்மீது ஈர்ப்பு கொண்டிருந்தாள். வெகு விரைவிலேயே நாயகன் பற்றிய செய்தி அரசருக்கு தெரிந்து அவர் சிறைபிடிக்கப்பட்டார். மரண தண்டனையும் வழங்கப்பட்டது.

 

நமது நாயகன் சிறைக்கு வந்த பிறகு, தினமும் போதனைக்காக சிறைக்கு வரும் நாயகி மீது காதல் ஏற்பட்டது. எனினும் தன்நிலை கருதி வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் நாயகியோ இறந்தாலும் இணைந்தே இறப்போம் என தன் காதலை கூறிவிட்டாள். இன்னும் சில தினங்களில் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற நிலையில் பூக்களுடன் வந்து நிற்கிறாள் அவள். அவன் கூறிய மறுப்புக்கு அவளது கண்ணீர் கண்டனம் தெரிவிக்கிறது. அந்த கண்கள் தன் இருப்புக்கான வேலையை இன்றுதான் செய்கிறது. அழுவதின் மூலமாக. "நான் உனக்கு முன்னாடி கல்லறையில காத்திருப்பேன்" என தழு தழுத்த குரலில் சொல்லி முடிப்பதற்குள் அவன் அவள் கைகளை பிடித்தான். அவனுள் அடக்குமுறைக்கு ஆளான காதல் புரட்சி செய்தது. அவனது ஸ்பரிசம் பட்டவுடன் கண்ணீரில் நனைந்த அவளின் முகத்தில் புன்னகை துளிர்விட்டது. இனி வார்த்தைக்கு இடமில்லாமல்  உணர்வுகள் உரையாடின. கரத்தின் பிடி இறுகியது. கடந்தகாலமும் எதிர்காலமும் இல்லாத நிகழ்கால காதல் அரங்கேறியது...

 

ஒரு நிமிஷம். நான் ஹீரோ ஹீரோயின் பெயர சொல்லவே இல்லையில? நாயகன் வாலன்டைன், நாயகி அஸ்டோரிஸ். கி.பி.207 ஆம் ஆண்டு நடந்த இவர்களின் கதை தான் இது. வாலண்டைன் நினைவாகத்தான் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.