Skip to main content

அதிகாரத்தை பறித்த பிறகும் எவன் ஒருவன் எஞ்சி நிற்கிறானோ அவனே பலசாலி - வைரமுத்து பேச்சு!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசியல் பிரபலங்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினார்கள். இதில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து பேசியதாவது, "எந்த விலங்குகளுக்கும் இல்லாத ஒரு சிறப்பு சிங்கத்திற்கு இருக்கிறது. பின்னோக்கி திரும்பி பார்க்கும் ஆற்றல் அதற்கு மட்டும்தான் இருக்கிறது. அதற்கு பேர்தான் அரிமா நோக்கு. அது மட்டும் அரிமா நோக்கு அல்ல, படுத்துக்கொண்டிருந்த சிங்கம் எழுந்த உடன், முதலில் வலது பக்கம் பார்க்கும், பிறகு இடது பக்கம் பார்க்கும், பிறகு பின்பக்கம் பார்த்த பிறகுதான், முன்னோக்கி செல்ல பார்க்கும். தளபதிக்கும் அந்த அரிமா நோக்கு பார்வை உண்டு என்று சொல்வதில் பெருமை அடைகின்றேன். தளபதி எழுந்து நின்று பின்பக்கம் பார்க்கிறார், அதில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் இருக்கிறார்கள். இடது பக்கம் பார்க்கிறார் அவருடைய எதிரிகள் தெரிகிறார்கள், வலது பக்கம் பார்க்கிறார்கள் அவருடைய நண்பர்கள் தெரிகிறார்கள். பிறகு முன்பக்கம் பார்க்கிறார் கிரீடமும், சிம்மாசனமும் தெரிகின்றது.  

 

klj



தலைவரின் மகன் என்பதற்காகவே அவர் மீது எனக்கு பாசம் அதிகம் இருக்கின்றது. அவரை நான் உற்று நோக்கி வருகிறேன். ஒருவனின் பலவீனத்தை அறிய அவனிடம் பதவியை கொடுத்துப்பார் என்பார்கள், ஒருவனின் பலத்தை அறிய அவரிடம் அதிகாரத்தை பறித்துப்பார் என்பார்கள். அந்த வகையில் எட்டு ஒன்பது ஆண்டுகளாக எந்த அதிகாரமும் இல்லாமல், இந்த இயக்கத்தை முதல் நிலையில் கட்டிகாப்பது என்பது மிக ஆச்சரியமான ஒன்று, யாராலும் எளிதில் செய்ய முடியாத ஒரு காரியம். அதிகாரத்தை பறித்த பிறகும் எவன் ஒருவன் எஞ்சி நிற்கிறானோ அவனே பலசாலி. அந்த வகையில் அவரின் உழைப்பு என்பது நிகரில்லாதது. தளபதி என்பவர் கலைஞர் நமக்கு விட்டுச்சென்ற கொடை, இந்த திராவிட இயக்கத்தை காக்க ஒரு ஆள் தேவைப்படுகிறார். அதை தளபதி நமக்கு ஈடுசெய்து வருகிறார். அவரின் பாதை சரியாக இருக்கின்றதா? அவர் தன்னை சரியாக தகவமைத்துக் கொள்கிறாரா என்பதை நான் தொடர்ந்து பார்த்து வருகின்றேன். அந்த பணியை அவர் மிகச் சிறப்பாக செய்து வருகின்றார். 



இந்த தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு கட்சிகள் மட்டும் தான் கட்டமைப்பு உள்ள கட்சிகள். பத்திரிக்கை நண்பர்கள் இதனை தயவு செய்து திரித்து எழுத வேண்டாம். தமிழகத்தில் விஞ்ஞான பூர்வமாக கட்டமைப்பு உள்ள கட்சிகள் ஒன்று திராவிர முன்னேற்றக் கழகம், மற்றொன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இதை யாரும் மறுப்பதிற்கில்லை. இதிலிருந்து ஒப்பிட்டு பார்ப்பதில் இருக்கின்றது உங்களின் பெருமை. அதிகாரம் மறுக்கப்பட்ட இந்த காலத்தில் இந்த இயக்கத்தை இவ்வளவு உயரம் கட்டி எழுப்ப முடியும் என்றால் அதற்கு காரணம் கலைஞர், தளபதியின் அளவிட முடியாத உழைப்பு தான். அறிவாலயத்தின் அடித்தளத்தை திடமாக கலைஞர் உருவாக்கி வைத்திருக்கிறார், அதில் உயரமான கட்டடமாக தளபதி எழுந்து நிற்கிறார்" என்றார். 
 

 

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. 

Next Story

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.