Skip to main content

"நேற்று ஸ்மிருதி இரானி... இன்று வெங்கையா நாயுடு" பாஜகவை அலறவிடும் வைகோ!

Published on 26/07/2019 | Edited on 26/07/2019

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவி ஏற்றார். 1978ம் ஆண்டு முதல் 1996 ஆண்டு வரை தொடர்ச்சியாக மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர், 96க்கு பிறகு மாநிலங்களவைக்கு செல்லவில்லை. கடந்த 23 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டும் சிவகாசி தொகுதி மக்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டிருந்தார். 2004ம் ஆண்டில் இருந்து அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கபடவில்லை. சில முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நாடாளுமன்றம் சென்ற அவர், தன்னுடைய முதல் கேள்வியை நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பினார். இதுதொடர்பாக பேசிய அவர், "சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் மாநிலங்களவைக்கு வருகிறேன். இதை என்னுடைய கன்னிப் பேச்சாகவே நினைத்து பேசுகிறேன்" என்றார்.

 

 vaiko speech in parliament

மேலும், கேள்வி நேரத்தின் போது வைகோ நூற்பாலை பிரச்சனை தொடர்பாக பேசினார். இந்தியாவில் உள்ள அனைத்து நூற்பாலைகளும் விதிகளை பின்பற்றுகிறதா? அதனை அரசாங்கம் முறையாக கவனிக்கிறதா? பருத்தி விலை, பஞ்சு விலை அடிக்கடி மாறுவதால் ஏகப்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசாங்கம் என்ன செய்ய உள்ளது. தமிழ்நாட்டின் நூற்பாலைகள் விதிகளை முறையாக பின்பற்றுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் நூற்பாலைகள் விதிகளை மதிக்காமல் உள்ளது. அதனை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். சீனாவில் இருந்து ஆயத்த ஆடைகளை குறைந்த விலைக்கு வங்கதேசத்துக்கு அனுப்பி, அவர்கள் அந்த நாட்டின் முத்திரையை ஆடைகளில் பதித்து இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். இதனை தடுக்க அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது என்று கேளவி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி இரானி, "உறுப்பினர் கூறுவதுபோல எதுவும் நடைபெறவில்லை" என்று ஒற்றை வரியில் பதிலளித்தார். இதனால், அதிருப்தி அடைந்த அவர், அமைச்சரின் பதில் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவித்தார். முதல் நாளே அமைச்சர்களை அலற வைத்த வைகோ, இன்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவையும் அலற வைத்தார். இரண்டாவது நாளான இன்று அவையில் பேசிய அவர், " தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தால் தமிழகத்தில் உணவு பஞ்சம் ஏற்பட்டு, தமிழகமும் எத்யோப்பியா போன்று மாறிவிடும். எனவே அந்த திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது, மீறி செயல்படுத்தினால், மக்கள் கிளர்ச்சி ஏற்படும் என்றார். இதை கேட்ட சபாநாயகர் வெங்கையா நாயுடு, அரசுக்கு கோரிக்கை வையுங்கள், எச்சரிக்கை விடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.