Skip to main content

திமுக மீது சந்தேக வலையை வீசும் காங்கிரஸ்! 

Published on 13/08/2019 | Edited on 13/08/2019


                   
காஷ்மீர் பிரச்சனையில் காங்கிரஸுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாள் சுழற்றினார் வைகோ. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரஸுக்கு எதிராக வைகோ பேசுவதில் அதிர்ச்சியடைந்தது காங்கிரஸ் மேலிடம். உடனே வைகோவை கண்டிக்கும் வகையில் அறிக்கை வாசித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. உடனே இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மிக காட்டமாக காங்கிரஸை தாக்கினார் வைகோ. இதனால் இரு தரப்புக்குமான அரசியல் பொது வெளியில் சூடு பிடிக்க, வைகோவின் காங்கிரஸ் எதிர்ப்பில் திமுக ஒளிந்திருக்கிறதா? என்கிற விவாதம் சத்தியமூர்த்திபவனில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. 

 

vaiko


இது குறித்து நம்மிடம் பேசும் காங்கிரஸ் தலைவர்கள், ‘’திமுக கூட்டணியிலுள்ள காங்கிரசை வைகோ விமர்சிப்பதை திமுக இதுவரை கண்டிக்கவில்லை ; கண்டுகொள்ளவும் இல்லை. ஏதோ, இந்த விவகாரம் காங்கிரஸுக்கும் வைகோவுக்கும் தனிப்பட்டப் பிரச்சனை போல நினைத்து ஒதுங்கியிருக்கிறது திமுக. கூட்டணியின் தலைவர் என்கிற முறையில் வைகோவிடம் இது குறித்து மு.க.ஸ்டாலின் விசாரித்திருக்க வேண்டும். அல்லது இந்த விசயத்தில் திமுகவின் கருத்தையாவது வெளிப்படையாக அவர் சொல்லியிருக்க வேண்டும். இந்த இரண்டுமே நடக்காததால்தான் திமுக மீது எங்களுக்கு சந்தேகம் வருகிறது. 


        
அதாவது, சட்டமன்ற தேர்தலின் போது 200 இடங்களில் திமுக போட்டியிடவும், மீதமுள்ள 34 இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் திமுக திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் எங்களுக்கு கிடைக்கிறது. கூட்டணியில் காங்கிரசை வைத்துக்கொண்டு திமுக மட்டுமே 200 இடங்களில் போட்டியிட முடியாது. அதனால் காங்கிரசை கழட்டி விட நினைக்கிறது திமுக. அதற்காக  காங்கிரசுக்கு எதிரான அரசியலை வைகோ மூலம் திமுக தூண்டிவிடுவதாக எங்களுக்கு சந்தேகம். வைகோ மூலம் காங்கிரசின் மனநிலையை ஆழம் பார்க்கிறது திமுக. அதனால்தான், காங்கிரசுக்கு எதிராக வைகோ கடுமையாக பேசியும் அது குறித்து கண்டிக்காமல் மௌனமாக இருப்பது ஆரோக்கியமா? 

 

கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்தால், கூட்டணியின் தலைவர் அதில் தலையிட்டு சரி செய்வதுதான் அரசியல் நாகரீகம். அப்போதுதான் தேர்தல் காலங்களில் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் விறுப்பு வெறுப்பின்றி வேலைப்பார்ப்பார்கள். அப்படி இல்லையெனில், அது கூட்டணியாக இருக்காது. அந்த வகையில், இரு தரப்பையும் அழைத்து திமுக பேசாமால் இருப்பதால் காங்கிரசை கழட்டிவிட திமுக நினைப்பதாகத்தான் நாங்கள் கருத வேண்டியிருக்கிறது. அதனால் வைகோவின் பேச்சின் பின்னணியில் திமுக இருக்கலாம் என நாங்கள் சந்தேகப்படுவது நியாயம்தானே? நாடாளுமன்ற தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக ஜெயிக்க காங்கிரசும் முக்கிய காரணம் என்பது அரசியல் கட்சிகளுக்குத் தெரியும்’’ என்கிறார்கள் ஆவேசமாக கதர்சட்டை தலைவர்கள். திமுக தரப்போ, வைகோவின் அரசியல் தனிப்பட்டது. அவரின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையிலும் திமுக எப்படி கேள்வி கேட்க முடியும் என்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.