Skip to main content

"கட்சியில சேருங்கன்னு அழைத்த காமராஜர்; ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்கோன்னு சொன்ன அண்ணா..." - வைகோ பகிர்ந்த சுவாரசியம்

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

cvm

 

தமிழக அரசியலை தன் பேச்சால் இன்றளவும் கட்டிப் போட்டிருக்கும் வைகோ தன்னுடைய இளம் வயது முதலே அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். வைகோ பேசிக்கொண்டிருக்கிறார் என்றால் உறக்கத்தில் இருப்பவர்களும் எழுந்திருப்பார்கள் என்று அவரை அறிந்தோர் கூறுவார்கள். அத்தகைய பேச்சாற்றலுக்குச் சொந்தக்காரரான அவர் நம்முடைய நக்கீரன் சரித்திரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணாவுடனான தனது சந்திப்பு குறித்துப் பேசினார். 

 

இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " 1964, ஆகஸ்ட் 15-ல ராஜாஜி ஹால்ல காமராஜர் மாணவர்கள சந்திச்சு பேசுறாரு. ஹாலுக்கு முன்னாடி பத்தாயிரம் மாணவர்கள திரட்டி வச்சு சுதந்திர தினத்த பத்தி பேசுறாரு. நெ.து.சுந்தரவடிவேலு வைஸ் சான்சிலர்.பிரசிடென்சி காலேஜ் பிரின்சிபல் பி.ஜி.எல். சுவாமி கிட்ட நல்ல பேச்சாளனா அனுப்பி வை, காமராஜர வரவேற்றும் நன்றி தெரிவிச்சும் பேசனும்னு சொல்றாரு. பிரசிடென்சி காலேஜ்ஜோட சிறந்த பேச்சாளனா நான் இருந்தேன். நான் போயி காமராஜர் முன்னாடி ஏழெட்டு நிமிசம் பேசிருப்பேன்.

 

மறுநாள் காலைல விக்டோரியா ஹாஸ்டல்ல என் அறைக்கு செவப்பா ஒருத்தர் வந்திருந்தாரு. " என் பேரு அஜீஸ். இளைஞர் காங்கிரஸ் தலைவர். நேற்று உங்க பேச்சு அவ்ளோ நல்லா அமைஞ்சது. தலைவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. தலைவர பாக்க வாங்க. கட்சில நல்ல இடத்துக்கு வரலாம்" அப்டினு சொன்னாரு. இல்லைங்க... நான் தி.மு.க.வோட ஐக்கியமாகி அண்ணா மேல பெரிய பற்றோட இருக்கேன். இப்படி நீங்க அழைச்சதே நான் பெரிய பெருமையா நினைக்கிறேன். நான் வர மாட்டேங்கனு சொல்லிட்டேன். அதுக்கு அவரு, "சரிங்க... சத்தியமூர்த்தி பவனுக்கும் சரி, இல்ல திருமலைப் பிள்ளை ரோடு வீட்டுக்கு வந்தாலும் சரி, தலைவர வந்து பாருங்கனு" சொல்லிட்டு போய்ட்டாரு. நான் சின்ன பையனா இருந்தப்போ காமராஜர் முதலமைச்சராகி தன்னோட முதல் சுற்றுப்பயணத்துல எங்க வீட்டுக்கு வந்திருக்காரு. வந்து சாப்பிட்டு ஓய்வெடுத்திருக்காரு.

 

அதுக்கு பிறகு பத்து நாள்ல கோகலே ஹால்ல இந்தி எதிர்ப்பு கருத்தரங்குல அண்ணா பேசினாரு. அண்ணாவுக்கு முன்னாடி நான் பேசினேன். அன்னிக்கு நைட் நுங்கம்பாக்கம் வீட்டுல அண்ணாவ சந்திக்க எல்.ஜி.பெ.சீனிவாசன், நா.வளவன்லாம் கூட்டிட்டு போனாங்க. அண்ணா என்கிட்ட, நல்லா பேசுனயா. எந்த ஊருனு கேட்டாரு. கலிங்கப்பட்டி, சங்கரன் கோவில் தாலுக்கால இருக்குனு சொன்னேன். அதன் பிறகு தி.மு.க. ஆட்சியப் பிடிச்சதுக்கப்புறம் சட்டக்கல்லூரி எலெக்சன் நடக்குது. நான் தி.மு.க. சார்பா போட்டி போடுறேன். கிருஷ்ணராஜ் வானவராயன் காங்கிரஸ் சார்பா நிக்கிறாரு. கொங்கு பெல்ட் ஓட்டு பூராம் அவருக்கு போயிடுச்சு. தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநில மாணவர்கள் யாரும் எனக்கு ஓட்டு போடல. நான் 80 ஓட்டுல தோத்துட்டேன். செக்ரட்ரிக்கு நின்ன ஜின்னா மும்முனைப் போட்டில ஜெயிச்சிட்டாரு. 

 

அதைத் தொடர்ந்து அண்ணாவ பார்க்க அவர் வீட்டுக்குப் போறோம். அப்பவும் நான் எந்த ஊரு, என்னனு கேட்டுட்டு, கவலைப் படாத, இதெல்லாம் ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்கோ அப்டின்னு சொன்னாரு. அப்புறமா கேன்சர் ட்ரீட்மெண்ட் போயிட்டு வந்தப்றம் அண்ணாவ சந்திக்க நாங்க மாணவர்களெல்லாம் போனோம். அவர் மாடில ஒரு அறைல, ஒரு மூலைல ஜன்னலோரமா உட்காந்து இருந்தார். என்ன அப்படியே பார்த்தாரு. என் கைல பெர்ட்ரண்ட் ரஸலோட  ‘பவர்' அப்டிங்கிற புக் இருந்தது. அது என்ன புஸ்தகம்னு கேட்டாரு. ரஸலினுடைய பவர்னு சொன்னேன். அதுக்கு தலைய மட்டும் மெல்ல மேலயும் கீழயும் ஆட்டுனாரு. அதுதான் அவர சந்திச்ச அடுத்த சந்தர்ப்பம்" என்றார்.


 

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.