Skip to main content

நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரலை வைகோ ஒலிப்பார்! 

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

 

தடைகளைக் கடந்து மாநிலங்களவையில் வைகோவின் குரல் ஒலிக்கப்போகிறது. இது மதிமுகவினருக்கு மட்டுமின்றி தமிழக நலன் காக்கப் போராடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் கூறியுள்ளார்.

 

vaiko

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு வைகோ வேட்பு மனு ஏற்கப்பட்டிருப்பது மதிமுக தொண்டர்களுக்கும், சாதி, மதம், கட்சிகளைக் கடந்த மனித உரிமை, மனித நேயம் போற்றக்கூடிய மக்களுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி.

 

பொதுவாகவே வைகோ பல தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுகிறவர். மாநிலங்களவை தேர்தலிலும் அதுவே நடந்திருக்கிறது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று பல தரப்பினரும் விரும்பியதை ஏற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது கிடைத்த ஆதரவு அவரை நெகிழச்செய்தது. 

 

mdmk




ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நாடாளுமன்றத்தில் உரிமை முழக்கமிடக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்ற மகிழ்ச்சி அவரிடம் காணப்பட்டது. அடுத்த ஓரிரு நாளில் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது, வழக்கம்போல ஆவேசப் புயலாக எழுந்து நின்றார். தடைகள் வருகிறபோதும், எதிர்ப்புகள் எதிர்வருகிறபோதும், நெருக்கடிகள் சூழ்ந்து வருகிறபோதும் மின்னல் வேகத்தில் பந்தைய குதிரையாய் பாய்ந்து ஓடுவதும், அடுத்தக்கட்ட பணிகளில் ஈடுபடுவதும் அவரது குணம். அந்த அடிப்படையில்தான் நீதிமன்ற வாசலில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை வரவேற்பதாக முழங்கினார்.

 

இந்த நிலையில் அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. வழக்கை பொறுத்தவரையில் மேல்முறையீட்டில் வருகிற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் வரவேற்போம். வைகோ நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நாடாளுமன்றத்திற்கு செல்கிறார். இனி நம்முடைய உரிமைகளுக்காக அங்கே அவர் குரல் ஒலிக்கும் என்றார்.


 

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.