Skip to main content

அண்ணாமலை நடைபயணத்தை எப்படி பார்க்கிறீங்க? அவருக்கு சுகர் அளவை நிச்சயம் குறைக்கும்னு பார்க்கிறோம் - குடியாத்தம் குமரன்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

பரக

 

உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற சம்பவம் சில நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்தகட்டமாக அண்ணாமலையின் வாட்ச் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரபேல் போர் விமானத்தைத் தயாரித்த நிறுவனம் உருவாக்கியதாக அண்ணாமலையால் கூறப்பட்ட அந்த வாட்ச் உலகத்திலேயே மொத்தம் 500 மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த வாட்ச் விலை 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்ற நிலையில், இந்த வாட்ச் வாங்கியதற்கான பில்லை வெளியிடும் படி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் அதுதொடர்பாக பேசாத அவர், அமைச்சர்களின் சொத்துக்கணக்கை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "எங்கள் அமைச்சர்கள் மீது சொத்துக்கணக்கை வெளியிடுவேன் என்று தொடர்ந்து கூறிவருகிறார். அவர் சொத்துக்கணக்கை மட்டும் அல்ல, எந்தக் கணக்கை வேண்டுமானாலும் வெளியிடட்டும். அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை.

 

நாங்கள் ஒன்றும் மற்றவர்களைப் போல் சமூக விரோத காரியங்கள் செய்யவில்லை. இன்றைக்கு இவர்களைப் போல் ரவுடிகளையும், சட்டவிரோத காரியங்கள் செய்பவர்களை தேடித்தேடிப் போய் கட்சியில் சேர்க்கவில்லை. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பவன் எந்தக் கட்சியில் இருக்கிறான் என்று பார்த்தால் அவனெல்லாம் பாஜகவில் உறுப்பினராக இருக்கிறான். இந்த லட்சணத்தில் கட்சியை வைத்துக்கொண்டு அடுத்த கட்சிக்காரர்களை விமர்சனம் செய்து வருகிறார் அண்ணாமலை. இப்போது பில்லை கேட்டால் நடைப்பயணம் போறேன் என்கிறார். அண்ணாமலைக்கு சுகர் அதிகமாக இருப்பதனால் போகிறார் போல என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அண்ணாமலை பேசுவதை நீங்கள் எப்போதாவது கூர்ந்து பார்த்திருக்கிறீர்களா? 

 

அண்ணாமலை பேசுகிறார் என்றாலே தொலைக்காட்சியில் வேலை செய்பவர்கள், ரிப்போர்ட்டர், யூடியூப் வைத்திருப்பவர்கள் எல்லாம் அடித்துப் பிடித்துப் போவது எதற்காக என்று நினைக்கிறீர்கள், ஒரு அரை மணி நேரம் வாயில் வந்ததை எல்லாம் பேசுவார். காமெடியாக பொய் பேசுவதைக் கேட்டுவிட்டு வரலாம் என்ற நினைப்பில் போகிறார்கள். அதைத்தவிர அவர் பேசுவதைக் கேட்டு என்ன அறிவையா வளர்த்துக்கொள்ள முடியப் போகிறது? வடிவேல் அவர்களை போல் இவர் பேசுவதைப் பார்த்தால் கூட அதற்கு இணையான சிரிப்பு வர வைப்பார். எனவே இவர் எந்த காலத்திலேயும் அரசியல் தலைவராக மாறவே முடியாது. அரசியல் காமெடியனாகவே எப்போதும் இருப்பார் என்பதில் மட்டும் உறுதியாகச் சொல்கிறேன்" என்றார்.

 

 

Next Story

'நீங்கள் எல்லோரும் கலைஞரின் பேரன்கள் தான்' - தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'You are all grandsons of the artist'- Udayanidhi campaign supporting Dayanidhi Maran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை  நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன்  கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.

அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.

Next Story

''விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும்''- அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
"May his people succeed in their work" - Udayanidhi wishes

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

இதனிடையே கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சிப் பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்த அமைச்சர் உதயநிதியை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிளித்த அவர், 'இந்திய ஜனநாயகத்தில் யாரும் அரசியல் கட்சி இயக்கம் தொடங்கலாம். அதற்கான உரிமை இருக்கிறது. நடிகர் விஜய் அந்த முடிவை எடுத்திருக்கிறார். அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்வோம். அவருடைய மக்கள் பணி சிறக்கட்டும்'' என்றார்.