Skip to main content

குளிராமல் இருக்க பேண்டிலேயே சிறுநீர் கழித்தானாம் அந்தக் கதைதான் ஆண்ட்ராய்டின் கதை...

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
android

 

 

 

ஆண்ட்ராய்ட் இன்றைய நவீன உலகின் தவிர்க்கமுடியாத ஒன்று. ஒன்றுக்கும் உதவாது, தோல்வியடைந்துவிடும் என பத்து ஆண்டுகளுக்குமுன் சொல்லப்பட்டது. ஆனால் இன்று ஆண்ட்ராய்ட் இல்லாமல் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

 

இன்றுடன் ஆண்ட்ராய்ட் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆண்ட்ராய்ட் பற்றிய சில குறிப்புகள்                            

 

  • ஆண்ட்ராய்டை பலர் கூகுள் நிறுவனம் தயாரித்ததாக நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. கூகுள் நிறுவனம் 2005ல் ஒரு நிறுவனத்திடம் இருந்து வாங்கினர்.
     
  • பயன்பாட்டிலுள்ள மொபைல்களில் 88 சதவீத மொபைல் ஃபோன்கள் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்-ஐ சார்ந்தவை.
     
  • ஆண்ட்ராய்ட் உண்மையில் டிஜிட்டல் கேமிராக்களுக்கான ஓ.எஸ். ஆகதான் தயாரிக்கப்பட்டது. 
     
  • லினக்ஸ் என்ற ஓ.எஸ். ஐ அடிப்படையாக வைத்துதான் ஆண்ட்ராய்ட் உருவானது.
     
  • முதல் ஐந்து ஓ.எஸ்.கள் பிளாக்பெர்ரி போன்று இருக்கும்.
     
  • முதன்முதலில் ஹெச்.டி.சி (HTC) ஜி1 மொபைலில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
     
  • ஆண்ட்ராய்டின் அடையாளமான பச்சை பொம்மையின் பெயர் பக்டிராய்ட் 
     
  • 2 பில்லியனுக்கும் அதிகமான மொபைல் பயன்பாட்டாளர்கள் ஆண்ட்ராய்டை பயன்படுத்துகின்றனர்.



     
  • ஆண்ட்ராய்ட் 1.0                  (குறிப்பிட்ட பெயர் இல்லை)                           23.09.2008
     
  •                   1.1                               பெடிட்ஃபோர்                                                         09.02.2009  
     
  •                   1.5                              கப்கேக்                                                                      27.04.2009 
     
  •                   1.6                              டோனட்                                                                      15.09.2009
     
  •               2.0 - 2.1                          எக்லைர்                                                                     26.10.2009
     
  •                   2.2                              ஃப்ரோயோ                                                               20.05.2010
     
  •              2.3 - 2.3.7                       ஜிஞ்சர் பிரட்                                                             06.12.2010
     
  •             3.0 - 3.2.6                       ஹனிகாம்ப்                                                               22.02.2011 
     
  •             4.0 - 4.0.4.                      ஐஸ்க்ரீம் சேண்ட்விச்                                            18.10.2011
     
  •             4.1-4.3.1                        ஜெல்லிபீன்                                                                  09.07.2011 
     
  •            4.4-4.4.4                         கிட்கேட்                                                                         31.10.2013 
     
  •           5.0-5.1.1                          லாலிபாப்                                                                      12.11.2014
     
  •           6.0-6.0.1                          மார்ஸ்மல்லோ                                                           05.10.2015 
     
  •           7.0-7.1                            நோகட்                                                                             22.08.2016 
     
  •           8.0-8.1                            ஓரியோ                                                                           02.08.2017 
     
  •           9.0                                            பீ                                                                                06.082018 


     
  • பின்லாந்து சிறுவன் குளிராமல் இருப்பதற்காக தனது பேண்டில் சிறுநீர் கழித்தானாம் அந்தக்கதைதான் ஆண்ட்ராய்டின் கதை என்று 2010ம் ஆண்டில், அப்போதைய நோக்கியாவின் சி.இ.ஓ.வாக இருந்த அன்ஸ்ஸி வன்ஜோகி கூறினார். ஆனால் அதையெல்லாம் உடைத்து ஆண்ட்ராய்ட் வளர்ந்து நிற்கிறது.



     

Next Story

பப்ஜி கேமில் மூழ்கிய இளைஞர்; தாய் கண்டித்ததால் எடுத்த சோக முடிவு

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
Youth immersed in pubg game; A sad decision taken because of mother's reprimand

மொபைல் போனில் கேம் விளையாண்டதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் விளையாட்டுகளில் இளைஞர்கள் சிலர் மூழ்கி கிடக்கும் நிலையில் சில அசம்பாவித சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அதுவும் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வெளிநாட்டு வெர்ஷன்கள் மூலம் பதிவிறக்கி விளையாடும் சூழல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான பிரவீன் செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை பொழுதுபோக்காக கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து முழுநேரமாக கேம் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டியதால் அவருடைய தாயார் அவரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி மாணவர் பிரவீன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மீண்டும் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சமையல் குறிப்பு வீடியோ பார்த்த அதிகாரிகள்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

Officials watched the recipe video at the Farmers Grievance Meeting

 

வேலூரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் அதிகாரி ஒருவர் செல்போனில் சமையல் குறிப்பு பார்த்துக் கொண்டிருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி, அது தொடர்பாக புகார் எழுந்துள்ளது.

 

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் வந்திருந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் சீரியசாக நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட சிலர் செல்போனில் யூடியூபில் சமையல் குறிப்பு வீடியோ பார்த்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.