Skip to main content

இந்தியாவின் புதிய வரைப்படத்தை ஐ.நா அங்கீகரிக்குமா?

Published on 03/11/2019 | Edited on 03/11/2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த பிறகு அநத் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. அதன்பிறகு அந்த மாநிலத்தின் எல்லையை வரையறை செய்து புதிய வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

UNION HOME MINISTRY RELEASED NEW INDIA MAP

(இந்தியாவின் புதிய வரைப்படம்)
 

இந்த மேப்பில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள மிர்புர், முஸாபர்பாத் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சீனா வசம் இருக்கிற காஷ்மீர் பகுதிகள் இந்த வரைபடத்தில் இணைக்கப்படவில்லை. காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானும் இந்தியாவும் தொடர்ச்சியாக உரிமைகொண்டாடி வருகின்றன. ஆனால், பாகிஸ்தான் பக்கம் ஒருபகுதியும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் ஒருபகுதியும் நீண்டகாலமாக இருந்துவருகிறது.

UNION HOME MINISTRY RELEASED NEW INDIA MAP

 

இடையில் சீனா தனது பங்கிற்கு ஒரு பகுதியை கைப்பற்றி வைத்திருக்கிறது. அக்‌ஷய் சின் என்ற பெயரில் அந்த பகுதியும், பாகிஸ்தானால் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்ட ஒரு பகுதியும் சீன வரைபடத்தில் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. பாகிஸ்தானின் அதிகாரபூர்வமான வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அதுபோல இந்தியா வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிவரை இடம்பெற்றிருக்கிறது.
 

UNION HOME MINISTRY RELEASED NEW INDIA MAP

                                                                                                                                               (பாகிஸ்தானின் வரைப்படம்)


இதுதவிர, இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதையும் சீனா உரிமை கொண்டாடுகிறது. அந்த மாநிலத்தை தனது வரைபடத்தோடு இணைத்தே வெளியிடுகிறது சீனா. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் அந்த மாநிலத்தின் புதிய மேப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

UNION HOME MINISTRY RELEASED NEW INDIA MAP

                               (ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் புதிய வரைப்படம்)
 

இந்த மேப்பில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இன்றுவரை உள்ள மிர்பூர், முஸாபர்பாத் ஆகியவையும் இணைக்கப்பட்டிருக்கிறது. 1947ல் ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 14 மாவட்டங்கள் இருந்தன. கதுவா, ஜம்மு, உதாம்பூர், ரியாஸி, அனந்தநாக், பாரமுல்லா, பூஞ்ச், மிர்பூர், முஸாபர்பாத், லே, லடாக், கில்ஜிட், கில்ஜிட் வஸாரட், சில்ஹாஸ், ட்ரைபல் டெரிட்டரி ஆகியவை இந்த மாவட்டங்கள். இப்போது இந்த மாவட்டங்களை 28 மாவட்டங்களாக மத்திய அரசு பிரித்திருக்கிறது. குப்வாரா, பந்திப்பூர், கண்டர்பால், ஸ்ரீநகர், பட்காம், புல்வாமா, ஷுப்ரியன், குல்காம், ரஜூரி, ராம்பன், கிஷ்டிவார், சம்பா, கார்கில் என்ற 14 மாவட்டங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
 

UNION HOME MINISTRY RELEASED NEW INDIA MAP


                    (காஷ்மீரை சொந்தம் கொண்டாடும் நாடுகள்)


இந்திய அரசு புதிய மேப்பை வெளியிட்டிருந்தாலும் இந்த மேப்பை ஐ.நா. சபை அங்கீகரிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். மேலும் இப்போது ஜம்மு காஷ்மீர் அபாயகரமான பகுதியாக மாறியிருக்கிறது எனவும் கூறுகிறார்கள். இனிமேல், பாஜகவை விரும்பாத ஐ.ஏ.எஸ். மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தண்டனைப் பகுதியாக இது மாறும். பாஜகவுக்கு வேண்டாத அதிகாரிகள் இந்த பகுதிக்கு தூக்கியடிக்கப்படலாம் என்று ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்னொரு முக்கியமான விஷயம் இந்த மேப்பில் பாகிஸ்தான் மற்றும சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள லடாக்கின் பெரும்பகுதி இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த புதிய மேப்பை சீனா ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது. இந்த புதிய மேப் காஷ்மீர் பகுதியில் மேலும் தீவிரமான ஆயுதப் போராட்டத்தையே ஊக்குவிக்கும். இந்தியாவுக்கு பதிலடியாக சீனாவும் பாகிஸ்தானும் தங்களுடைய புதிய மேப்பை வெளியிடும் என்றெல்லாம் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
 

இதெல்லாம் நடக்காமல், எல்லாம் அமைதியாக முடிந்து மோடி மற்றும் அமித்ஷாவின் நடவடிக்கை பலனளிக்கும் என்று எதிர்பார்ப்போம்.



 

Next Story

போராட்டக்காரர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரகாஷ் ராஜ்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
prakash raj celebrate his birthday with sonam wangchuk protest

பிரகாஷ் ராஜ் கடைசியாக மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். தமிழில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது தனுஷின் ராயன், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா உள்ளிட்ட சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை கைவசம் வைத்துள்ளார். 

தமிழ், மலையாலம், கன்னடம், இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ் 5 முறை தேசிய விருது வென்றுள்ளார். நடிப்பதை தாண்டி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். திரைப்படங்களைத் தாண்டி அரசியல் ரீதியாக தனது கருத்துகளை தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார். மேலும் பா.ஜ.க-வை தீவிரமாக எதிர்த்து வருகிறார்.  

prakash raj celebrate his birthday with sonam wangchuk protest

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் பிரகாஷ் ராஜ். அவருக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும் அரசியல் சாசனத்தில் ஆறாவது அட்டவணையை அமல்படுத்தக்கோரியும் பொறியியலாளர் மற்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமக்காக, நம் நாட்டிற்காக, நமது சுற்றுச்சூழலுக்காக, நமது எதிர்காலத்திற்காக போராடும் லடாக் மக்களுடன் துணை நிற்போம். சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் கலந்துகொண்டு எனது பிறந்தநாளைக் கொண்டாடினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் மன்றம் புறக்கணிக்கும்' - திருமா கருத்து

Published on 12/12/2023 | Edited on 12/12/2023

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.  வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

 

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து என்ற தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்தேன். காஷ்மீருக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் என்பது உறுதி' என தெரிவித்துள்ளார்.