Skip to main content

“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...

Published on 28/11/2020 | Edited on 28/11/2020
ddd

 

 

நவம்பர் 27 திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை உடன்பிறப்புகள் தமிழகம் முழுவதும் கொண்டாடியுள்ளனர். திமுக முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவிதத்னர். 27ஆம் தேதி காலை சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தியப் பின்னர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.

 

உதயநிதியின் அரசியல் நுழைவை எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சனம் செய்துள்ளனர். இதுகுறித்து அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் பேசினோம்.

 

உதயநிதியின் அரசியல் நுழைவை எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சனம் செய்கிறார்களே?

உதயநிதி ஸ்டாலினின் அரசியல் நுழைவை அரசியல் விமர்சகர்கள், எதிர்கட்சியினர், பார்வையாளர்கள் என பலரும் பல விதமாக விமர்சித்தனர், துவக்கத்தில். ஏதோ பொழுதுபோக்குக்காக வந்தது போல்  சிலர் கிண்டல் செய்ததும் உண்டு. ஆனால், அவர் அரசியலை ரசித்து, உணர்ந்து, ஈடுபாட்டுடன்  தான் பயணித்தார், பயணிக்கிறார். அந்த ஈடுபாடு சமீபத்திய "விடியலை நோக்கி" என்ற பிரச்சார பரப்புரை பயணத்தில் தெளிவாக வெளிப்பட்டது, எதிரிகளுக்குப் புலப்பட்டது. 

 

உதயநிதி தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது, அரசியலுக்கு வரவில்லை. தி.மு.கழகம் இரண்டாவது முறை எதிர்கட்சியாக இருக்கும்போது தான் வந்தார். மத்தியில் மோடி பிரதமராக இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்தார். தமிழகத்தில் மோடியின் செல்லப்பிள்ளை எடப்பாடி ஆட்சியின் போது தான் அரசியலுக்கு வந்தார். எதிர்கட்சியாக, இரண்டு அரசுகளின் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று தெரிந்து தான் வந்தார்.

 

வாரிசு அரசியல் என்றும் எந்த கொள்கைக்காக அவர் போராடி இருக்கிறார் என்றும் விமர்சனமும் வைக்கப்படுகிறதே? 

போராட்டங்களில் கலந்துகொண்டுதான் அரசியலுக்கு வந்தார், தொடர்ந்து கலந்து கொண்டும் வருகிறார். ஆனாலும், வாரிசு அரசியல் என்ற ஓட்டை விமரசனத்தை கடுமையாக சிலர் வைத்தார்கள். அவர்களுக்கு அப்போதே தெரிந்திருக்கிறது, இவர் கடுமையாக உழைப்பார் என்று. அது அடுத்த ஆண்டே நிரூபணமாயிற்று, நாடாளுமன்ற தேர்தல் போது.

 

உதயநிதி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதே அவரது அரசியல் ஈடுபாடும், கொள்கை பிடிப்பும், கடின உழைப்பும் வெளிப்பட்டது. ஆனால், தேர்தல் பரபரப்பில் அதனை பலரும் கவனிக்கவில்லை. அவர்களை இப்போதைய 'விடியலை நோக்கி' பயணம் கவனிக்க வைத்திருக்கிறது. 

 

நாடாளுமன்ற தேர்தல் போது, அவர் மேற்கொண்ட தொடர் பிரச்சார பயணம் அவரது அயராத உழைப்பை வெளிப்படுத்தியது. பிரச்சாரப் பயணத்தில் அவரது பேச்சு யதார்த்தமாக அமைந்து மக்களை கவர்ந்தது, அதே சமயம் கொள்கையில் இருந்து விலகாமல் இருந்தது. அரசின் அவலங்களை பட்டியலிட்டவர்,  மறக்காமல் எல்லா இடத்திலும் ஒரு விஷயத்தை தன் பேச்சில் குறிப்பிட்டார். அது, "நீட் தேர்வு".

 

தேர்தல் பிரச்சாரத்தின் போது, நீட் தேர்வு போன்ற கொள்கை விஷயத்தை பேசுவது எளிதல்ல. ஆனால், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளை பேசினார். நீட் தேர்வால் உயிரை மாய்த்துக் கொண்ட "மாணவி அனிதா" குறித்து பேசும்போது உணர்வு மயமானார். அது அவரது "எதிர்கால சிந்தனையையும், மனித நேயத்தையும்'' வெளிப்படுத்தியது. தேர்தல் வெற்றி, அவரது பிரச்சார பயணத்திற்கு பெரும் அங்கீகாரமாக அமைந்தது.

 

ddd

 

கட்சியில் பொறுப்புகளை பெற்ற பிறகு உதயநிதியின் செயல்பாடுகள் உடன்பிறப்புகளுக்கு திருப்பி அளிக்கிறதா? 

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உடன் இளைஞரணி உறுப்பினர் சேர்த்தலில் தீவிரம் காட்டி, பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களை திமுகவில் இணைத்தார். 

 

"கலைஞர் கடிதங்களை" படிக்க முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தவர்கள் உதயநிதியின் ட்விட்டர் பதிவுகளை கண்டு எல்லையில்லா ஆனந்தம் கொண்டார்கள். தலைவர் கலைஞரின் கிண்டலும், கேலியும் பொங்கி வழிகிறது அவரது ட்விட்களில். பேட்டிகளிலும், பேச்சுகளிலும் பின்னி எடுக்கிறார். "உதயநிதி சாக்லேட் பாய்", என விமர்சித்தார் அமைச்சர் ஜெயக்குமார். " ஜெயக்குமார் ப்ளேபாய்", என பதிலளிக்க அண்ணன் ஜெயக்குமார் கப்சிப்.

 

ddd

 

திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது செய்யப்பட்டாரே? 

கடந்த காலங்களில் உதயநிதியை அலட்சியமாக பார்த்த எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது. தேர்தல் பரப்புரை துவங்கியவரை கண்டு திணறுகிறார்கள். அவரது 'விடியலை நோக்கி' பயணத்தை முடக்குவதே ஸ்பெஷல் டி.ஜி.பியின் பணியாகிப் போனது. எடப்பாடி தினம், தினம் அதிகாரத்தை பயன்படுத்தி அவரது பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டாலும், அவர் அசரவில்லை, பயணத்தை தொடர்கிறார், மக்களை சந்திக்கிறார், சந்திப்பார்.

 

ddd

 

'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தில் உதயநிதி ஏற்று நடித்த கேரக்டர், சாப்ட் நேச்சர் கொண்ட சரவணன். தங்களை 'பார்த்தா' சந்தானமாக நினைத்து நக்கலடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தான் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சரவணனில்லை, சமூக அவலங்களை கண்டு கொதிக்கிற கலைஞரின் பராசக்தி "குணசேகரன்" என முத்திரை பதித்து விட்டார். 

 

தன் பிறந்தநாளுக்கும் 'கருப்பு சட்டை' உடன் என்ட்ரி கொடுத்திருக்கிறார். தெறிக்கிறது! இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை இளைய சூரியனுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.