Skip to main content

ஜெ.விற்கு பிறகு நான்தான் என அரசியலில் ... செயல்படும் எடப்பாடி!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

காஞ்சிபுரத்தில் கூட்டத்தை முடித்து விட்டு கிளம்பிய தினகரன், "எடப்பாடி பழனிச்சாமி அ.ம.மு.க.வினரை எப்படியெல்லாம் பேரம் பேசினார் என்கிற ஆடியோ டேப் இருக்கிறது' என போகிற போக்கில் ஒரு தகவலை சொல்லிவிட்டுப் போனார். அந்த தகவல் அ.தி.மு.க. வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது.  இதுகுறித்து அ.ம.மு.க. வட்டாரத்தில் கேட்டபோது ஒன்றும் சொல்ல மறுக்கிறார்கள். ஆனால் தினகரனுக்கு நெருக்கமானவர்கள் பல தகவல்களை வாரி வழங்கினார்கள்.

 

admk



"பொதுவாக அ.ம.மு.க.வில் இருப்பவர்களுக்கு "யார் பேசுவதையும் டேப் செய்யுங்கள்' என தினகரன் முன்பே ஒரு கட்டளையை பிறப்பித்திருக் கிறார். அதனால்தான் தங்க தமிழ்ச்செல்வன் தினகரனின் உதவியாளரான செல்லபாண்டிய னிடம் பேசியது டேப் ஆகி ஊடகங்களில் வெளிவந்தது. தங்க தமிழ்ச்செல்வனை தொடர்ந்து அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இந்த மூவர் இணைப்பு விவகாரம்தான் டேப் ஆக மாறியிருக்கிறது'' என அடித்துச் சொல்கிறார்கள் தினகரனின் ஆட்கள். 

 

ammk



இதில் அறந்தாங்கி ரத்தினசபாபதி வித்தியாசமானவர். சசிகலாவையும் தினகரனை யும் கட்சியை விட்டு நீக்குகிறோம் என எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் அறிவித்த சமயத்தில் பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு ஆதரவாக நின்றார்கள். அவர்களை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர். அதற்குப் பிறகு, தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தவர்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரில் ரத்தினசபாபதியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூட்டிக் கொண்டு வந்து எடப்பாடியை சந்திக்க வைக்கிறார். புதுக் கோட்டை மாவட்ட எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் ரத்தினசபாபதி விஜயபாஸ்கருக்கு நல்ல பழக்கம். அதனடிப்படையில் ரத்தின சபாபதியை அப்பொழுது அழைத்து வந்தார் விஜயபாஸ்கர்.

 

admk



உடனே தினகரன் அழைக்க அடுத்தநாளே, தினகரனை போய் சந்தித்து எடப்பாடி வயிற்றில் புளியை கரைத்தவர். அந்த ரத்தினசபாபதிக்கு சபாநாயகர், தகுதி நீக்க உத்தரவு பிறப்பித்தபோது, "என்னை தகுதி நீக்கம் செய்யச் சொல்லும் சபாநாயகரின் நாக்கை அறுப்பேன்' என முழங்கினார். ஆனாலும், காலப்போக்கில் தினகரனிடம் ஒட்டாமலே இருந்தார். "என்னை எம்.எல்.ஏ. ஆக்குனது சின்னம்மா' என்கிற டயலாக்கோடு தினகரன் ஆதரவாளராக இருந்த இவரிடம் தினகரனும் பெரிதாக ஒட்டவில்லை. பதவி நீக்கத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ரத்தினசபாபதியும் விருத்தாசலம் கலைச்செல்வனும்தான் வழக்கு போட்டார்கள். அதுவும் தினகரனை கேட்காமல் போட்டார்கள். தினகரன் வழக்கு போட வேண்டாமென சொல்வார். அதை கேட்க முடியாது' என இருவரும் மறுதலித்தனர். சுப்ரீம் கோர்ட் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை என சொன்னதும் தினகரன் அவருக்கு நெருக்கமான கள்ளக்குறிச்சி பிரபு எம்.எல். ஏ.வையும் மனு போட வைத்து அந்தத் தீர்ப்பு எனக்கும் பொருந்தும் என இணைப்பு தீர்ப்பை பெற்றார். எனவே ரத்தினசபாபதியும் கலைச்செல்வ னும் அ.தி.மு.க.வில் இணைந்தது ஆச்சரியமில்லை. கள்ளக்குறிச்சி பிரபு அ.தி.மு.க.வில் இணைந்ததில் தான் தினகரனுக்கு கேசட் சிக்கியிருக்கும் என சொல்லும் தினகரன் ஆட்கள் அதற்கு பின்னணியாக ஒரு கதையையும் சொல்கிறார்கள். 


பிரபுவின் அப்பா அ.தி.மு.க.வின் ஒன்றிய செயலாளராக எடப்பாடி அணியில் இருக்கிறார். பிரபுவுக்கு இன்னமும் திருமணம் கூட ஆகவில்லை. அ.தி.மு.க. ஒ.செ.வாக இருக்கும் அப்பா பெரிய பங்களா வீட்டையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் சம்பாதித்திருக்கிறார். "நீ ஒழுங்காக எடப்பாடி அணிக்கு வந்துவிடு' என்பதுதான் அப்பாவின் வேண்டுகோள். டி.டி.வி. தினகரனோடு ஏற்பட்ட நெருக்கத்தால் அப்பா வின் வேண்டுகோளை கண்டுகொள்ளாமல் இருந்த பிரபுவை தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க. அணிக்கு அழைத்து வர எடப்பாடி கடுமையாக முயற்சி செய்தார். முதலில் அவரது சமுதாய எம்.எல்.ஏ.க்களை அனுப்பினார். அதற்கு பிரபு மசியவில்லை என்றதும், பலவீனங்களை அறிந்து காய்நகர்த்தும் தி.நகர் எம்.எல்.ஏ.வான சத்யாவை களமிறக்கினார். சத்யாவும் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ.வான விருகை ரவியும் சேர்ந்து பிரபுவின் தோள்மேல் கைபோட்டு அழைத்துச் செல்லும் படம் நக்கீரன் உட்பட மீடியாக்களிலும் சமூக வலைத்தளங் களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கும் மசியாத பிரபு தினகரனை தொடர்பு கொண்டு பேசினார். "நான் அ.தி.மு.க.வுக்கு செல்லவில்லை என்றால் என்னை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து விடுவார்கள்' என வருத்தப்பட்ட பிரபுவின் கோரிக்கையை ஏற்று "சில காரியங்களை செய்து கொடுத்து விட்டு போ' என தினகரன் சொன்னார். அதற்குப்பிறகுதான் பிரபு போய் எடப்பாடியை சந்தித்தார் என்கிறார்கள் பிரபுவை நன்கு அறிந்தவர்கள். 

ஏற்கனவே ஓ.பி.எஸ். தினகரனை வந்து சந்தித்ததை ரகசிய கேமராக்களில் பதிவு செய்து வைத்து "தினகரனை ஓ.பி.எஸ். சந்தித்தார்' என சொன்ன தங்க தமிழ்ச்செல்வனின் கருத்தை ஓ.பி.எஸ்.சால் மறுக்க முடியவில்லை. அதே தங்க தமிழ்ச்செல்வன் கோபமாக தினகரனை பற்றி கூறிய கருத்துக்களை ஒலிப்பதிவாக தினகரன் வெளியிட, அவரால் மறுக்க முடியவில்லை, தற்பொழுது எடப்பாடி பேசும் பேச்சை தினகரன் வெளியிடும் போது என்ன ஆகும் என சொல்ல முடியாது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். ஜெ.விற்கு பிறகு நான்தான்' என அரசியலில் தன்னை நிலைநாட்ட நினைத்து செயல்படும் எடப்பாடிக்கு இந்த கேசட் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் சசிகலா தலைமையில் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற திவாகரனின் முயற்சிக்கு வெடிகுண்டாகவே அமையும் என பீதியோடு காத்திருக்கிறார்கள் அ.தி.மு.க. ர.ர.க்கள்.
 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.