Skip to main content

திரிபுரா தீர்ப்பு எப்படி இருக்கும்? சிவப்பைத் தொட முடியுமா காவி?

Published on 16/02/2018 | Edited on 17/02/2018

நாளை மறுநாள் திரிபுராவில் வாக்குப்பதிவு தொடங்கப் போகிறது. அந்த மாநிலத்தில் 2013 சட்டமன்றத் தேர்தலில் 1.5 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருந்த பாஜக இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து வருகிறது.

 

பாஜக அணுகமுறை என்றால் அது நேர்மையாகவா இருக்கும்? வழக்கம்போல பொய்யும் புனைச்சுருட்டும்தான் அதன் மூலதனமாக இருக்கிறது. கட்சியே இல்லாத பாஜக, காங்கிரஸ் கட்சியையும், திரிணாமுல் காங்கிரஸையும் விலைக்கு வாங்கி தனது கட்சியாக்க பார்க்கிறது.

 

சட்டமன்றத்தில் ஒரு இடம்கூட இல்லாத பாஜக, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, எதிர்க்கட்சி வேஷத்தை போட்டிருக்கிறது. இதற்காக அந்தக் கட்சி கொஞ்சம்கூட வெட்கமோ கூச்சமோ படவேயில்லை.

 

Manik

 

மாநிலத்தில் மூன்றுமுறை முதல்வராக இருந்தாலும் கையில் வெறும் ஆயிரத்து 500 ரூபாயை மட்டுமே வைத்திருக்கிற எளிமையான மக்கள் முதல்வரை வீழ்த்த, பணத்தை வாரியிறைக்கிறது பாஜக.

 

திரிபுரா கணக்குப்படி, 2013 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 36 சதவீத வாக்குகளைப் பெற்று, 10 இடங்களை மட்டும் வென்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 46 சதவீத வாக்குகளுடன் 50 இடங்களை கைப்பற்றியது. பாஜக 1.5 சதவீத வாக்குளைப் பெற்றிருந்தது.

 

இப்போது அந்தக் கட்சி மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பேன் என்று கூறுகிறது என்றால் எந்த நம்பிக்கையில் பேசுகிறது?

 

கார்பரேட் நிறுவனங்களின் கைக்கூலியாக பிரிவினை அமைப்பு ஒன்றை உருவாக்கி, பழங்குடியின மக்களை திசைதிருப்புகிறது. தேசபக்தி, தேசியவாதம் பேசும் பாஜக தனிநாடு கோரும் தீவிரவாத அமைப்பின் அரசியல் முகத்துடன் கூட்டணி வைத்திருக்கிறது.

 

பழங்குடி மக்களுக்கு பண ஆசை காட்டுகிறது. எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்களிடம் படாடோபத்தை புகுத்தி படமெடுத்து ஆட நினைக்கிறது. ஆனால், இதையெல்லாம் தனது அமைதியான பிரச்சார யுத்தியால், மக்களுடனான நெருக்கத்தால் முறியடிக்க முடியும் என்று முதல்வர் மாணிக் சர்க்கார் நம்புகிறார்.

 

1.5 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்கத் தேவையான 31 இடங்களை பாஜக பெற முடியுமென்றால், அந்த வாக்குகள் எங்கிருந்து வரும். காங்கிரஸிலிருந்தா? திரிணாமுல் காங்கிரஸிலிருந்தா என்பது தெரியவில்லை.

 

பக்கத்து மாநில ஆட்களைக் கூட்டிவந்து கூட்டம் காட்டும் பாஜக, மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

திரிபுராவில் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி, ஒடுக்கப்பட்ட உரிமையிழந்த மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டி எழுப்பிய வரலாற்றை மாணிக் சர்க்கார் கூறுகிறார். பழங்குடியின பெண்களையும், ஆண்களையும் அவர் சக தோழர்களாக பாவித்து பிரச்சாரம் செய்கிறார். பாஜக என்பது ரத்தத்தை உறிஞ்சும் அடிப்படைவாதக் கொள்கையைக் கொண்ட கட்சி என்று கூறுகிறார். வசந்தகாலத்தில் வரும் அரிதான சில பறவைகளைப் போல இன்று வருவார்கள். பின்னர் அவர்களைத் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி உங்களுக்கு மத்தியிலேயே இருக்கிற கட்சி என்று அவர் பேசுகிறார்.

 

நாள் ஒன்றுக்கு 5 கூட்டங்களில் பேசும் மாணிக் சர்க்கார் ஏற்கெனவே இருக்கிற வாக்கு வங்கியை தக்கவைத்தாலே, ஆட்சியையும் தக்கவைப்பார் என்பது உறுதி என்கிறார்கள்.

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.