Skip to main content

முதலில் செருப்பால் அடித்ததே அவர்கள்தான் - பேரணியில் கலந்துகொண்ட பெரியார் தொண்டர் பேச்சு!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020


துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ரஜினி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினி, பெரியார் குறித்து பேசும்போது கவனமாக பேச வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். திருமாவளவன் உள்ளிட்டவர்களும் ரஜினி பெரியார் குறித்த விமர்சனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். பெரியாரிய அமைப்புக்கள் பெரியார் விவகாரத்தில் பொய்யான தகவலை சொன்ன ரஜினி கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்கள். 

மேலும் ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்ற சில அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய ரஜினி, பெரியார் தொடர்பாக நான் எனது சொந்த கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்றும், பத்திரிக்கைகளில் வந்த செய்தியினை அடிப்படையாக கொண்டே கருத்து தெரிவித்தேன் என்று நேற்று முன்தினம் விளக்கம் அளித்திருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் ரஜினி குறிப்பிட்டு பேசிய போராட்டத்தில் பங்குகொண்டு எந்த வாகனத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதாக கூறப்பட்டதோ அதே வாகனத்தில் பயணம் செய்த திருச்சி செல்வேந்திரன் அவர்களிடம் இதுதொடர்பான கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு மிக தெளிவான பதிலை அவர் வழங்கினார். இதுதொடர்பாக அவரிடம் பேசியதாவது,
 

hj



துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய ரஜினிகாந்த் பெரியார் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமர் சிலை அவமரியாதை செய்யப்பட்டதாக கூறியது உண்மையா?

அவர் சொல்வதை போன்று ராமர் சிலையை வைத்து பெரியார் தலைமையில் ஊர்வலம் நடந்தது உண்மை. அது மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு. அதனால் கடவுள் சிலைகளை  லாரியில் வைத்து எடுத்து சென்றோம். இந்த நேரத்தில் அந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறி ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்கத்தினர் காவல்துறையினரிடம் அனுமதி பெற்று பேரணி நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அவர்களை  வளைவு அமைத்து காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இதே போன்று வேறு சில இடங்களிலும் தடுப்புக்கள் போடப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புக்கு நின்றிருந்தார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர், எங்களை நோக்கி செருப்பை வீசினார். அது எங்களை விட பல மடங்கு உயரமாக இருந்த ராமர் சிலை மீது மோதி எங்கள் மீது விழுந்தது. அதனை தொடர்ந்து மேலும் சிலர் செருப்புக்களை வீசினார்கள். இதனால் கோபமான  கீழே நின்றவர்கள் ராமர் சிலையை அவர்கள் வீசிய செருப்பை கொண்டே அடித்தார்கள். மேலே நின்ற நானும் செருப்பால் ஒரு அடி அடித்தேன். ஆனால் இது பெரியாருக்கு இது தெரியாது. இப்போது இந்த செய்திகளை பேசுவது என்பது வெறும் அரசியலுக்காக மட்டுமே இருக்குமே தவிர வேறு எதற்காகவும் இல்லை. நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு இது. இதற்கு மேல் இதில் ஒன்றுமில்லை.

 


 

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

“கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம்” - நடிகர் ரஜினிகாந்த்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024

 

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி (24.8.2021) சட்டமன்றப் பேரவை விதி 110 ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பின் படி நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலைஞர் சதுக்கத்திற்கு கீழே ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களில் அண்ணா சிலை, திருவாரூர் - சென்னை ரயில் பயண ஒலி-ஒளிக் காட்சி, சாதனை விளக்கப் புகைப்படத் தொகுப்புகள், கலைஞர் பொன்மொழிகள் கலைஞர் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்றப் பேரவை தலைவர் மு. அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், பா.ம.க. சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே. மணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Lets call it an kalaignar Taj Mahal says actor Rajinikanth

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கலைஞரின் நினைவிடம் மிகவும் அருமை. ரொம்ப அற்புதம். இதனை கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதை விட, கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம். அவ்வளவு அருமையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.