Skip to main content

முதலில் செருப்பால் அடித்ததே அவர்கள்தான் - பேரணியில் கலந்துகொண்ட பெரியார் தொண்டர் பேச்சு!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020


துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ரஜினி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினி, பெரியார் குறித்து பேசும்போது கவனமாக பேச வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். திருமாவளவன் உள்ளிட்டவர்களும் ரஜினி பெரியார் குறித்த விமர்சனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். பெரியாரிய அமைப்புக்கள் பெரியார் விவகாரத்தில் பொய்யான தகவலை சொன்ன ரஜினி கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்கள். 

மேலும் ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்ற சில அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய ரஜினி, பெரியார் தொடர்பாக நான் எனது சொந்த கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்றும், பத்திரிக்கைகளில் வந்த செய்தியினை அடிப்படையாக கொண்டே கருத்து தெரிவித்தேன் என்று நேற்று முன்தினம் விளக்கம் அளித்திருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் ரஜினி குறிப்பிட்டு பேசிய போராட்டத்தில் பங்குகொண்டு எந்த வாகனத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதாக கூறப்பட்டதோ அதே வாகனத்தில் பயணம் செய்த திருச்சி செல்வேந்திரன் அவர்களிடம் இதுதொடர்பான கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு மிக தெளிவான பதிலை அவர் வழங்கினார். இதுதொடர்பாக அவரிடம் பேசியதாவது,
 

hj



துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய ரஜினிகாந்த் பெரியார் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமர் சிலை அவமரியாதை செய்யப்பட்டதாக கூறியது உண்மையா?

அவர் சொல்வதை போன்று ராமர் சிலையை வைத்து பெரியார் தலைமையில் ஊர்வலம் நடந்தது உண்மை. அது மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு. அதனால் கடவுள் சிலைகளை  லாரியில் வைத்து எடுத்து சென்றோம். இந்த நேரத்தில் அந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறி ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்கத்தினர் காவல்துறையினரிடம் அனுமதி பெற்று பேரணி நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அவர்களை  வளைவு அமைத்து காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இதே போன்று வேறு சில இடங்களிலும் தடுப்புக்கள் போடப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புக்கு நின்றிருந்தார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர், எங்களை நோக்கி செருப்பை வீசினார். அது எங்களை விட பல மடங்கு உயரமாக இருந்த ராமர் சிலை மீது மோதி எங்கள் மீது விழுந்தது. அதனை தொடர்ந்து மேலும் சிலர் செருப்புக்களை வீசினார்கள். இதனால் கோபமான  கீழே நின்றவர்கள் ராமர் சிலையை அவர்கள் வீசிய செருப்பை கொண்டே அடித்தார்கள். மேலே நின்ற நானும் செருப்பால் ஒரு அடி அடித்தேன். ஆனால் இது பெரியாருக்கு இது தெரியாது. இப்போது இந்த செய்திகளை பேசுவது என்பது வெறும் அரசியலுக்காக மட்டுமே இருக்குமே தவிர வேறு எதற்காகவும் இல்லை. நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு இது. இதற்கு மேல் இதில் ஒன்றுமில்லை.

 


 

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.