Skip to main content

நகை கொள்ளையனைப் பற்றி அறியாத பல அதிர்ச்சி தகவல்!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

"தீரன்' சினிமா பட பாணியில் கொள்ளையடித்து "ஜென்டில்மேன்' பட அர்ஜுனைப் போல உதவிகளைச் செய்துள்ள லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளைக் கும்பலின் தலைவன் திருவாரூர் முருகனைப் பற்றித் தோண்டித் துருவிக்கொண்டிருக்கிறது காவல்துறை. அவனிடம் செல்போன் கிடையாது. பொது நிகழ்ச்சிகளில்கூட போட்டோ எடுத்துக்கொள்ள மாட்டான். ஒரு திருட்டுக்கு வந்த கூட்டாளிகளை அடுத்த திருட்டுக்கு வைத்துக்கொள்ள மாட்டான். இவை எல்லாம் க்ளூ கண்டு பிடிப்பதில் போலீசுக்கு சவாலாக உள்ளது. 

 

trichy incident



முருகன் குறித்து நன்கு தெரிந்த சிமெண்ட் கலவை தொழிலாளி ஒருவரை திருவாரூர் மாவட்டம் கச்சனத்தில் சந்தித்து விசாரித்தோம். "முருகனுக்கு சொந்த ஊர் திருவாரூர் கிடையாது திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமம். பிழைப்புக்காக திருவாரூர் வந்து, நான்கு சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் கொளுத்தும் வெயிலில், காலில் செருப்புக்கூட இல்லாமல் சாலை போடும் வேலைகளை செய்தாங்க. திருவாரூர் சீராத்தோப்புலதான் முருகனின் குடும்பம் ஆரம்பத்திலிருந்தே இருக்கு. அக்கா கனகவள்ளிதான் குடும்பத்தைக் காப்பாற்றினார். சாலைப் பணியில் பொழுதுக்கும் வேலை வாங்கிக்கொண்டு சம்பளம் கொடுக்கும் போது குறைத்தும், இழிவாகப் பேசுவதையும், தனது சமூகத்துப் பெண்களை தவறாகப் பேசுவதையும் தினசரி கண்டு கோபப்பட்ட முருகன், அந்த வேலையை வெறுத்துவிட்டு, பெங்களூர் சென்று விட்டான். அங்கு டிரைவர் வேலையில் திருநெல்வேலியை சேர்ந்த தினகரன் என்பவனோடு முதல் நட்பு ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள வீடுகளில் கொள்ளையடிக்கத் துவங்கியவன், பிறகு வங்கிகள், நகைக்கடைகளை குறிவைத்து கொள்ளையடித்தான். அங்கேயே மஞ்சுளா என்கிற பெண்ணுடன் வாழ்க்கையை ஆரம்பித்தான். இரண்டு குழந்தைகளோடு எலக்ட்ரானிக் சிட்டியில் வீடு வாங்கிக் கொண்டு அங்கிருந்தபடியே கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் கொள்ளையைத் தொடர்ந்தான்.

 

trichy incident



அந்தப் பணத்தில், சாலை போடும் வேலையில் அல்லல்படும் தனது சமூகத்து மக்களுக்கு உதவிகளை செய்யத் தொடங்கினான். காலில் அணியும் செருப்பில் தொடங்கிய உதவி, ஜே.சி.பி. ரோடு ரோலர், கான்கிரிட் கலவை மெசின் எனத் தொடர்ந்தது. அவர்கள் குடும்பத்து திருமணங்களில் மெயின் செலவும் முருகனுடையதுதான். எங்க ஊருக்கு அவன் காட்பாதர். எங்களை எல்லாரையும் பிடித்தாலும் அடித்தாலும் அவன் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியாது. அப்படியே தெரிய வந்தாலும் சொல்லமாட்டோம்''’என்றார்.

 

trichy incident



ஒரு வழக்கு விஷயமாக முருகனுக்கு உதவிய வழக்கறிஞர் ஒருவரிடம் விசாரித்தோம். "நான்கு மாநிலங்களில் முருகன் மீது வழக்கு இருந்தாலும், அவனது குடும்பம் எங்கு இருக்கிறது என்கிற தகவல்கூட காவல்துறையிடம் இல்லை. திருவாரூர் ஏரியாவுக்குள் அவன் கைவரிசை காட்டாததால், அந்த மாவட்ட காவல்துறை கண்டுகொள்ளவில்லை. கொள்ளையடித்த பணத்தில் ஹைதராபாத்தில் வீடு, பாண்டிச்சேரியில் வீடு, பெங்களூரில் வீடுன்னு எல்லா மாநிலத்திலும் அவனுக்கு வீடு இருக்கு. அங்கங்கே பெண் துணையும் இருக்கு. ஆந்திராவில் இருக்கும்போது சினிமாவில் ஆசைப்பட்டு, படமும் எடுத்தான். அதில் அவனது அக்கா மகனையும் நடிக்கவைத்தான். அப்போது நிறைய துணை நடிகைகளோடு தொடர்பில் இருந்தபோது, அவனுக்கு எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது, எய்ட்ஸ் நோயால் அதிகமாக பாதித்த முருகனை பெங்களூர் போலீஸார் தேடத் துவங்கினர்.


அப்போது மஞ்சுளாவுடன் வந்து திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்ந்தான். இதை ஸ்மெல் செய்த பெங்களூரு காக்கிகள் திருவாரூர் வந்துவிட்டனர். அதன் பிறகு வழக்கறிஞர்கள் சிலரோ மாவட்ட ஆட்சியரிடம் கருணை மனு கொடுத்துவிட்டு கொள்ளையடித்த நகைகளை, அந்தக் காவலர்களிடமே ஒப்படைக்க வைத்தோம். அவன் பிழைக்கமாட்டான் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். ஆனா இந்தப் போடு போட்டிருக்கான். சமீபகாலமாக முருகனின் அக்கா மகன் சுரேஷ், முருகனின் அண்ணன் மகன்கள், நண்பர்களோடு முருகனைப் போலவே கொள்ளையடிப்பதாக தகவல் கிடைத்தது. அவன் பெரும்பகுதி பாண்டிச்சேரியிலும், பெங்களூரிலுமே அதிகமாக இருப்பான். ஒரு வேலைக்கு ஒருவனை ஒருமுறைதான் பயன்படுத்துவான், வழக்கறிஞரையும் கூட அப்படித்தான். அவனைப் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அவனுக்கு நான்கு மாநில காவல்துறையிலும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. ஆறு மாதங்களுக்கு முன்புகூட ஒரு காவல் துறை அதிகாரி ஒருவருக்கு சைலோ கார் வாங்கிக் கொடுத்துள்ளான்''’என்கிறார் விவரமாக.

முருகனைத் தேடும் தனிப்படையில் உள்ள காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேச்சு கொடுத்தோம். திருவாரூரில் பிடிபட்ட மணிகண்டனையும் முருகனின் அக்கா கனகவள்ளி, அண்ணன் மகன் முரளி, நண்பர்கள் குணா உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரித்தோம், சமீப காலமாக துணை நடிகை ஒருவரோடு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் பிடித்துவிடுவோம். மணிகண்டன், சுரேஷின் நண்பன். மடப்புரத்தைச் சேர்ந்த 17 வது வார்டு அ.தி.மு.க. அவைத்தலைவர் இளங்கோவனின் மகன். அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் கட்சிக்கும் அணிக்கும், பிறகு திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்திலும் இணைந்து நகர பொருளாளராகவும் இருக்கிறான். நாகையில் உள்ள தாஸ் என்கிற பத்தரின் (நகை ஆசாரி) உதவியோடு கொள்ளையடித்த தங்கத்தை காயினாக மாற்றி விற்றுள்ளனர். தங்களைத் தேடும் போலீஸ் மீது உள்ள கோபத்தை விநாயகர் ஊர்வலத்தில் வைத்து வஞ்சம் தீர்த்தனர். 

முருகன் செய்துள்ள உதவிகளுக்கான நன்றியும், அவனைப் பற்றிச் சொன்னால் தீர்த்துடுவாங்கிற அச்சமும் அவங்ககிட்ட இருக்கு''’என்கிறார். சிக்கியவர்களிடம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக, திருவாரூரைச் சேர்ந்த திருமாறனும், பிரதீப்பும் கைது செய்யப் பட்டு விசாரணையை எதிர்கொண்டனர். புதிய கைதுகள் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். "தி.மு.க.வின் முன்னாள் நகரச் செயலாளர் இரா.சங்கரின் அண்ணன் திருமாறன் என்கிற மாறன் அ.தி.மு.க.வில் முக்கியமானவர். ஜெயலலிதாவின் அம்மா சந்தியா பெயரில் மன்றம் ஆரம்பித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். ஏற்கனவே இவர் மீது ஆக்கிரமிப்பு, பஞ்சாயத்து, புலிகளுக்கு டீசல் சப்ளை என வழக்குகள் போடப்பட்டாலும் அவற்றிலிருந்து சட்டப்படி விடுதலையானவர். தனது தனிப்பட்ட செல்வாக்கால் பலரிடமும் தொடர்பில் உள்ள திருமாறன், முருகன் தரப்புக்கும் நன்கு அறிமுகமானவர் என்பதால் அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறோம் எந்த ஒன்றையும் அலட்சியப்படுத்துவதில்லை''’என்றார்.

இதற்கிடையில்தான் கடந்த இதழில் காக்கி ஒருவருக்கு முருகனுடன் நெருக்கம் இருக்கிறது என்று கூறியிருந்தோம். அந்த காக்கியை ஸ்மெல் செய்த விசாரணை உயர் அதிகாரி ஒருவர் சில தகவல்களைக் கறந்துள்ளார். அதன்படியே பாண்டிச்சேரிக்கு ஒரு டீம் சென்றுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.