Skip to main content

ரேஷன் பொருட்கள் கிடைக்காத பழங்குடியின மக்கள்... உதவுமா அரசு?

Published on 05/04/2020 | Edited on 05/04/2020

 

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஏழை மக்கள் எல்லாம் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதில் ஏழை கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் வாழும் ஒன்றரை கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் ஆயிரம் ரூபாய் நிதியும், 25 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 2 கிலோ சர்க்கரை போன்றவை வழங்கப்படும் என அறிவித்து அதன்படி வழங்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் தமிழகத்தின் பூர்வகுடிகளான இருளர்கள், மலைவாழ் பழங்குடியின மக்கள், அருந்ததியர்கள் பிரிவைச் சேர்ந்த பலருக்கு குடும்ப அட்டையே கிடையாது. அதிலும் குறிப்பாக இருளர்கள் காடுகளில் மரம் வெட்டி வந்து விற்பவர்களாகவும், செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாகவும் இருப்பவர்கள். அதேபோல் பூம்பூம் மாட்டுக்காரர்கள் சமூகம் ஒருயிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ந்துக்கொண்டே இருப்பவர்கள் இவர்களுக்கும் குடும்ப அட்டை கிடையாது.


இருளர்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருச்சி என தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வசிக்கின்றனர். இவர்கள் எண்ணிக்கையில் குறைவானர்கள். அதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் நாட்றம்பள்ளி, புதுக்கோட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியில் பூம்பூம் மாட்டுக்கார சமூகத்தினர், ஜவ்வாதுமலை, கல்வராயன் மலை, கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைககளில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்களில் பலருக்கு குடும்ப அட்டை கிடையாது.

 

tttt



இவர்கள் அனைவரும் அன்றாட காய்ச்சிகள், காலை வேலைக்கு போனால் தான் மாலை அடுப்பெரியும், உலை கொதிக்கும். அப்படிப்பட்டவர்கள் தமிழகத்தில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு மேல் இருப்பார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இவர்களுக்கு குடும்ப அட்டை இல்லாததால் இவர்களால் அரசு தரும் நிதியுதவி ஆயிரம் ரூபாய் பெற முடியாத நிலையில் உள்ளனர். பணம் தரவில்லையென்றால் கூட பரவாயில்லை. வேலைக்கு செல்ல முடியாததால் அரிசி, மளிகை பொருட்கள் என எதுவும் வாங்க முடியாத நிலையில் தவிக்கின்றனர்.

 


இதுப்பற்றி நம்மிடம் பேசிய செஞ்சி – மலையனூர் பகுதி இருளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் வேளாங்கண்ணி, விழுப்புரம் மாவட்டத்தில் பலயிடங்களில் இருளர் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு குடும்ப அட்டை உட்பட எதுவும் கிடையாது. அதுப்பற்றி நாங்கள் கணக்கெடுக்க தொடங்கியபோதே 150க்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள உட்பட எதுவும் கிடையாது. தற்போது 144 ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் குழந்தை குட்டிகளை வசித்துக்கொண்டு உள்ளார்கள். இதுப்பற்றி எங்களுக்கு தகவல் வந்தது, நாங்கள் இதை மாவட்ட ஆட்சியரிடம் சென்று முறையிடக்கூட முடியாத நிலையில் உள்ளோம். அவர்களையும் கணக்கில் கொண்டு அரசாங்கம் உதவி செய்தால் அவர்களின் பசி போகும் என்றார்.

இதுப்போல் பெரும்பாலான திருநங்கைகளுக்கும், குடும்ப அட்டை கிடையாது. இவர்களுக்கும் தற்போது ஊரடங்கால் அரசு அறிவித்துள்ள எந்த சலுகைகளும், நிதியுதவியும், அரிசி, பருப்பு போன்றவையும் கிடைக்கவில்லை. இப்படிப்பட்டவர்களை கணக்கில் கொண்டு அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்து உதவி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடம் இருந்து எழுந்துள்ளது.
 

இவர்களின் நிலை குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். தொடர்ந்து தொடர்பு கொண்டோம். பலதரப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியும், 25 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 2 கிலோ சர்க்கரை போன்றவை வழங்கப்பட்டு வரும் நிலையில் இவர்களுக்கு இன்னும் உதவித்தொகையும், பொருட்களும் கிடைக்கவில்லை.  


 

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.