Skip to main content

சைலண்ட் மோடில் அ.தி.மு.க! -ஸ்டாலினை கவனிக்கும் டெல்லி!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021
dddd

 

இந்த சட்டமன்றத் தேர்தல் தி.மு.க.வுக்கு வாழ்வா-சாவா எனச் சொல்லப்பட்ட நிலையில், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ஒரு அக்னிப்பரிட்சையாகவே அமைந்திருந்தது. 30 ஆண்டுகள் அ.தி.மு.க.வை நிர்வகித்த ஜெ.வும், அவருக்குத் துணையாக இருந்த சசிகலாவும் இல்லாமல் அ.தி.மு.க. சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், அதன் வழக்கமான தேர்தல் நடைமுறைகளில் பல மாற்றங்கள் தெரிந்தன. அதற்கேற்ப பிளஸ்களும் மைனஸ்களும் அங்கங்கே களத்தில் தென்பட்டது என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமையைச் சேர்ந்தவர்கள்.

 

மற்ற மாவட்டங்களைவிட சென்னைக்குட்பட்ட தொகுதிகளில் வாக்கு சதவிகிதம் குறைந்து போனதற்கு முக்கிய காரணம், அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பல தொகுதிகளில் தேர்தல் திருவிழாவில் பங்கேற்க விருப்பம் காட்டாமல் இருந்ததுதான். இரட்டை இலையின் நிரந்தர வாக்காளர்களை வாக்குச்சாவடிக்குக் கொண்டுவருவதில் அ.தி.மு.க. சுணக்கமாக இருந்தது. உதயநிதி போட்டியிட்ட சேப்பாக்கத்தில் அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நின்ற பா.ம.க வேட்பாளருக்கு பூத்திலும் பூத் ஸ்லிப் கொடுக்கவும், அ.தி.மு.க சைடில் போதிய ஆள் பலம் இல்லை. அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட எல்.ராஜேந்திரன் தரப்பு, அ.தி.மு.க.வை விட ஆர்வமாக வேலை பார்த்தது. எழும்பூரில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இரட்டை இலையில் நின்ற ஜான்பாண்டியனுக்கு ஆளுந்தரப்பு ஆர்வம் காட்டவில்லை.

 

இதுபோலவே வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அ.தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க.வும் சோர்வுடனேயே செயல்பட்டன. கிராமப்புறங்களில் வழக்கமாக களைகட்டும் இலைத் தரப்பு, இந்த மாவட்டங்களில் டல்லடிக்க, பா.ம.க சைடில், சோளிங்கர் உள்ளிட்ட மாம்பழம் போட்டியிடும் தொகுதிகளில் ஓரளவு வேகம் தெரிந்தது. அ.தி.மு.க தரப்பின் சோர்வு... காஞ்சிபுரம், செங்கல்பட்டு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் மத்தியில் காணப்பட்டது.

 

காஞ்சி மாவட்டத்தில் பகல் 12 மணிவரைதான் அ.தி.மு.க. ஆக்டிவாக இருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் எப்போதும் சாதகமாக அமையும் பொன்னேரி தொகுதியில் அ.தி.மு.க.வினர் களத்தில் இல்லை. அதே நிலவரம்தான் திருத்தணி, கும்மிடிப்பூண்டி தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள், கட்சிக்காரர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் சிரமப்பட்டார்கள்'' என்கிறார்கள் அந்த மாவட்ட ர.ர.க்கள்.


அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரான வைத்தியலிங்கம், ஒரத்தநாடு தொகுதியில் அவரது ஆட்களைவிட அ.ம.மு.க. வேட்பாளர் சேகரின் ஆட்கள் படுஸ்பீடாக இருந்தார்கள். திருவையாறு தொகுதியில் அ.ம.மு.க.வின் வேலு கார்த்திகேயன், அங்கு போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரைவிட வேகம் காட்டினார். தாமரை இலைத் தண்ணீர்போல இந்தத் தொகுதியில் அ.தி.மு.கவும், பா.ஜ.க.வும் இருந்தன. பல இடங்களில், கட்சியினர் பூத் ஸ்லிப் கொடுக்கும் பகுதியில் அ.தி.மு.க. கொடிக்குப் பக்கத்தில் பா.ஜ.க. கொடி கட்டப்படுவதை ர.ர.க்கள் விரும்பவில்லை. "தனியா கொடி கட்டிக்குங்க' என்று பக்குவமாக சொல்லி, காவிக் கொடியைத் தவிர்த்தனர்.

 

இந்த நிலவரங்கள் குறித்து, மாநில உளவுத்துறை போலீசார் ஆட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியபடி இருந்தனர். அ.தி.மு.க.வின் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய ரிப்போர்ட்டுகளால் கரூர் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை, தனது ஐ.பி.எஸ் சர்வீஸ் மாநிலமான கர்நாடகத்திலிருந்து ஆட்களைக் கூட்டிவந்திருந்தார். கிருஷ்ணராயபுரம் எப்போதுமே அ.தி.மு.கவுக்கு சாதகமான தொகுதி. ஆனால், அங்கும் தி.மு.க.வின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அ.தி.மு.க. பின்தங்கியது. திருவரங்கம், லால்குடி தொகுதிகளில் ஈடுகொடுத்தது.

 

அ.தி.மு.கவின் தொகுதி பொறுப்பாளர்கள்-அமைச்சர்கள் என முக்கிய பங்காற்றிய வைத்தியலிங்கம், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், காமராஜ் போன்ற வி.ஐ.பி.க்கள் தங்களது தொகுதிகளை விட்டு வெளியே கவனம் செலுத்த முடியாத அளவிற்கு தி.மு.க. தரப்பு தேர்தல் வியூகத்தில் லாக் செய்திருந்தது. தங்களின் பொறுப்பில் இருந்த மற்ற தொகுதிகளை அவர்களால் பார்க்க முடியவில்லை. இப்படி பல இடங்களில் அ.தி.மு.க. பழைய தெம்புடன் இல்லை என்கிறார்கள் தேர்தல் களத்தில் நீண்ட அனுபவம் கொண்ட ர.ர.க்கள்.

 

தற்போதைய களத்தை உணர்ந்த அ.தி.மு.க.வினரோ, "இது போன்ற சோர்வையெல்லாம் தொகுதிகளில் பாய்ந்த பணம் மாற்றி விட்டது' என்கின்றனர். ஒரு கிராமத்தில் மூன்று கிளை இருக்கிற தென்றால், அந்த கிளை நிர்வாகிகளுக்கு ஆளுக்கு ஐந்தாயிரம் என மூன்று முறை வந்து சேர்கிறது. அதுபோக வாக்குகளுக்குப் பணம் என அவர்களிடம் விநியோகிக்க பணம் தரப்பட்டது. அதனால் அவர்கள் உற்சாகமாகிவிட்டனர்'' என்கிறார் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. தலைவர் ஒருவர்.

 

"அதிருப்தி என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வினர் சோர்வாக இல்லை' என்கிறார்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர்.

 

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் வெறித்தனமாகச் செயல்பட்டார்கள். தி.மு.க.வினர்தான் நாம் வெற்றிபெறுவோம் என மெத்தனமாகச் செயல்பட்டார்கள் என்கிறார்கள் அம்மாவட்ட ர.ர.க்கள்.

 

கொங்கு மண்டலமான ஈரோடு, கோவை மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் சுணக்கமாக இல்லை என்கிறார்கள் அம்மாவட்ட ர.ர.க்கள். அங்கே இதற்கு முன்பு இருந்ததைவிட தி.மு.க தரப்பு காட்டிய வேகமும் தேர்தல் களத்தை பரபரப்பாக்கியது.

 

சேலம், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க.வினர், கடைசி ஒருவாரத்தில் ரொம்பவே சோர்ந்துவிட்டார்கள். தலித், முஸ்லிம் வாக்குகள் தி.மு.க.வுக்கு முழுமையாக ஆதரவாக இருந்ததும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தி.மு.க.வுக்கு சாதகமாக இருந்ததும் அ.தி.மு.க.வினரை சோர்வடைய வைத்தது. ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.கவின் சித்ராவை மக்கள் நான்கு முறை முற்றுகையிட்டனர் என்கிற நிலை, அவர்களது சோர்வை அதிகப்படுத்தியது.

 

சில இடங்களில் அ.தி.மு.க.வைப் போல தி.மு.கவும் பண விநியோகத்தில் ஈடுபட்டது.. பண விநியோகம் வாக்குகளைப் பெற்றுத்தரும் என்கிற ஃபார்முலாவை இரண்டு கட்சிகளுமே அறிந்திருந் தாலும், கள நிலவரம் சாதகமாக இருந்தால்தான் அது முழுமையான பலன் தரும் என்பதையும் கழகத் தினர் உணர்ந்திருந்தனர். பல இடங்களில் ஓட்டுக்கு 500 என அ.தி.மு.க. கொடுக்க, தி.மு.க. தரப்பில் ஓட்டுக்கு 300 கொடுத்தது. சில தி.மு.க. வேட்பாளர் கள் 100 ரூபாய் அதிகமாக வாக்காளர்களுக்குத் தந்த னர். அ.தி.மு.க அமைச்சர்கள் தொகுதியில் 1000, 2000, தங்க காசு, கிராம சங்கத்துக்கு நிதி என அசத்தினார்கள்.

 

""எடப்பாடி தொகுதி மூன்று கட்டமாக பண விநியோகம் மேற்கொள்ளும் சூழல் உருவாகும் அளவிற்கு போட்டி கடுமையானதாகவே இருந்தது' என்கிறார்கள் சேலம் மாவட்ட அ.தி.மு.க. தலைவர்கள்.

 

""சென்னை முதல் சேலம் வரை சுணக்கம் காட்டிய ர.ர.க்கள், விழுப்புரம் முதல் ராமேசுவரம் வரை வேகம் காட்டினார்கள். இடையில் திருச்சி, தஞ்சை என ஸ்பீடு பிரேக்கர்கள் அ.தி.மு.க. வேகத் துக்கு தடை ஏற்படுத்தியதுதான் அ.தி.மு.க. களப் பணியின் நிலவரம்'' என்கிறார்கள் அ.தி.மு.க. தலை வர்கள். மற்ற மாவட்டங்களில் இரண்டு கட்சிகளின் களப்பணியும் தொகுதிகளுக்கு ஏற்றாற்போல ஏற்ற இறக்கமாக இருந்துள்ளன.

 

கலைஞரும் ஜெயலலிதா வும் தலைமை வகிக்காத இந்த தேர்தல் களத்தில், தி.மு.கவும் அ.தி.மு.கவும் தனியார் கார்ப்ப ரேட் நிறுவனங்களை வியூக வகுப்பாளர்களாக நியமித்திருந்தன. அந்த நிறுவனங்களும், அர சின் உளவுத்துறையும், வாக்குப் பதிவின் போக்கினைத் தங்கள் தலைமைக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தன. முக்கிய பிரமுகர் கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட் டோரும் இத்தகைய நிலவரத்தை அறிந்தபடியே இருந்தனர்.

 

காலையிலேயே வாக்களிக்க வந்த நடிகர் அஜித், கறுப்பு-சிவப்பு கலந்த மாஸ்க் அணிந்து வந்ததும், நடிகர் விஜய் கறுப்பு-சிவப்பு நிற சைக்கிளை ஓட்டியபடி வந்து ஓட்டுப் போட்டு விட்டு, டூவீலரின் பின்சீட்டில் உட்கார்ந்து வீட்டுக்குத் திரும்பியதும்கூட மீடியாக்களால் பர பரப்பான செய்தியாயின. "இந்த வருடம் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக வாக்களித்தேன்' என ஜெயம்ரவி யதார்த்தமாக சொன்னதும், "சாதி-மதம் கடந்து வாக்களிக்க வேண்டும் என்பதுதான் எப்போதும் என் நிலைப்பாடு' என விஜய்சேதுபதி சொன்னதும் பரபரப்பாயின.

 

இதுபோன்ற பிரபலங்களின் குறியீடுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் ரிப்போர்ட்டுகள் கட்சித் தலைமைகளுக்குப் போய்க் கொண்டிருந்தன. தி.மு.க கூட்டணியில் மு.க.ஸ்டா லின், ப.சிதம்பரம், திருமாவளவன், வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் தங்கள் கூட்டணி பெரும் வெற்றி பெறும் என வாக்களிப்புக்குப் பிறகு நம்பிக்கையுடன் பேட்டி அளித்தனர்.

 

"அனைவரும் வாக்களிக்கவேண்டும்' என்று பொதுவாகச் சொன்னார் சிலுவம்பாளையத்தில் வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அ.தி.மு.க தரப்பு சைலண்ட் மோடில் இருந்த நிலையில், ஏப்ரல் 6 இரவில் மத்திய உளவுத்துறை ரிப் போர்ட் டெல்லிக்குச் சென்றது. மறுநாள், வாக்குப் பதிவு 72.78% என உறுதியான நிலையில், "ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுங்கள். கவனித்துக் கொள்ளுங்கள்' என டெல்லியிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டையில் உள்ள அதிகாரிகளின் சமிக்ஞைகள் பலவற்றை உணர்த்துகின்றன.

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.