Skip to main content

தமிழகத்தில் தீவிரவாதம்... அதிர வைக்கும் ரெய்டு!

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) எனப்படும் தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் தமிழகத்தில் தொ டர்ந்து ரெய்டுகள் நடத்திக் கொண்டி ருக்கின்றனர். கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். இது தமிழகத்தில் தீவிரவாதி களின் நடமாட்டம் மிக அதிகம் என்கிற பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இது உண்மையா என்கிற கேள்வியை தமிழக காவல்துறை வட்டாரங்களில் முன்வைத்தோம்.

 

raid



தேசிய புலனாய்வு ஏஜென்சி எனப்படும் என்.ஐ.ஏ.வின் நடவடிக்கைகள் மிகவும் வியப்பை உருவாக்குகின்றன. அவர்கள் அசாருதீன் என்கிற நபரை கடந்த ஜூன் மாதம் கோவையில் கைது செய்தார்கள். அவர் மீது போடப்பட்ட வழக்கில் ஒரு முதல் தகவல் அறிக்கையையும் தாக்கல் செய் தார்கள். இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹாஸ்மியுடன் முகநூல் களத்தில் நட்பாக இருந் தார். அவர் முகநூல் களத்தில் இடும் பதிவுகளுக்கு லைக்கு களும் கமெண்டுகளும் கொடுத்து வந்தார். அத்துடன் கோவையில் இசுலாமிய எதிரிகள் நிறைய இருக்கிறார்கள். அவர்களை பிரான்ஸ் தலைநகரான பாரீசில் ஐ.எஸ். அமைப்பு லாரி ஏற்றி பொதுமக்களை கொன் றது போல கொல்ல வேண்டும். வெடிகுண்டுகள் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தி கொல்ல வேண்டும் என திட்டங்களை தீட்டினார். கோவை மட்டுமல்ல சென்னையிலும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்த வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்து போனார் என அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள்.


"கலிஃபா' என்கிற இயக்கம் கோவையில் அசாருதீன் தலைமையில் இயங்கி வருகிறது. இதில் ஜிஹாத் எனப்படும் இசுலாமிய மதத்திற்காக தியாகம் செய்யும் இளைஞர்கள் பலர் இணைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு கேரளா வழியாக சிரியா, ஆப்கானிஸ்தான் வரை தொடர் பிருக்கிறது. ஒசாமா பின்லேடனின் படையில் இருந்தவர்கள் கூட இவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்'' என அசாருதீனை பற்றி விளக்கி னார்கள் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள். கோவையில் அசாருதீன், சென்னையில் பிடிபட்ட இலங்கை நாட்டைச் சேர்ந்தவரான ரியாஸ் அபுபக்கர் என நீண்ட கைது தொடர்கிறது.

அது போன மாதம் என்பதை போல, இந்த மாதமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் ஹசன் அலி, யூனூஸ் மரைக்காயர், ஹரிஷ் முகம் மது ஆகிய மூவரை கைது செய்திருக்கிறார்கள். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஹசன் அலியும், ஹரிஷும் "அன்சருல்லா' என்கிற இயக்கத்தை உருவாக்கி தமிழ்நாட்டில் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிட்டார்கள் என அவர்களை சிறைக்கு அனுப்பும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த கைதுகளோடு சையது முகம்மது புத்காரி என்பவர் நிர்வாகியாக இருக்கும் வாஹ்தாத்-இ-இஸ்லமி என்கிற அமைப்பின் மண்ணடி அலுவலகத்தையும் அவரது புரசைவாக்கம் பகுதியில் உள்ள வீட்டையும் தேசிய புலனாய்வு ஏஜென்சி ரெய்டு செய்துள்ளது.

அத்துடன் வளைகுடா நாடுகளிலிருந்து பதினான்கு பேரை தீவிரவாதிகளுடன் தொடர்பு டையவர்கள் என அந்த நாடுகள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி இருக்கின்றன. பெரும்பாலும் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களான அந்த பதினைந்து நபர்களுக்கும் தமிழகத்தில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு என ஆராய அவர்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக செய்திகள் பரவின.

இப்படி கொத்துக் கொத்தாக தீவிரவாதிகள் பிடிபடுகிறார்கள். அவர்கள் கேரளாவில் கைது செய்யப்பட்டாலும் சரி, டெல்லியில் கைது செய்யப்பட்டாலும் சரி தமிழகத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை நிகழும் இந்த போக்கில் இலங்கை குண்டுவெடிப்புக்குப் பிறகு தீவிரம் அதிகமாகிவிட்டது. தேசிய புலனாய்வு ஏஜென்சி மிக வேகமாக இதில் செயல்படுகிறது. இதன் காரணமென்னவென காவல்துறை அதிகாரிகளை கேட்டோம்.

தற்பொழுது தமிழக காவல்துறையில் உள்நாட்டு பாதுகாப்பிற்கென கண்ணன் என்பவரை டிஐ.ஜி.யாக நியமித்து இருக்கிறார்கள். இவர் இந்தியாவின் முன்னணி புலனாய்வு நிறுவனங் களான ஐ.பி., ரா ஆகிய நிறுவனங்களில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர். புலனாய்வில் மிகத் திறமையான இவர், உள்துறை அமைச்சரான அமித்ஷாவிற்கும் ராணுவ அமைச்சரான ராஜ்நாத் சிங்கிற்கும் மிக நெருக்கமானவர். இவர் மத்திய அரசுப் பணிக்கு போவதற்கு முன்பு கோவையை கலக்கிய ஃபாஸி நிதி நிறுவன மோசடியை கண்டுபிடித்ததோடு அதில் பிரமோத்குமார் என்கிற காவல்துறை அதிகாரிக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியவர்.

கண்ணனின் ஒத்துழைப்போடு தேசிய புலனாய்வு ஏஜென்சி தமிழகம், கேரளா, இலங்கை, வளைகுடா நாடுகள் என ஒரு வலைத்தொடர்பில் இயங்கும் தீவிரவாதிகளை தேடி கண்டுபிடிக்கிறது. சென்னையில் கைது செய்யப்பட்ட ஹசன் அலியும் ஹரிஷ் மரைக்காயரும் நெருக்கமான உறவினர்கள். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்புகள் மற்றும் மொபைல் மெமரி கார்டுகளில் தீவிரவாதம் தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

விழிப்புடன் இருந்திருக்காவிட்டால் இலங்கை யில் வெடித்தது போல பல குண்டுகள் தமிழகத் திலும் கேரளாவிலும் வெடித்திருக்கும். கண்ணன் உள்நாட்டு பாதுகாப்பு போலீஸ் அதிகாரியாக இருப்பதால் என்.ஐ.ஏ.வின் நடவடிக்கைக்கு தமிழக போலீசார் ஒத்துழைக்கிறார்கள். சென்னையில் கைது செய்யப்பட்டவர்களின் கோவை நண்பர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ.வுக்குப் பதிலாக தமிழக போலீசாரே களமிறங்கி சோதனை நடத்தியிருக் கிறார்கள்'' என்கிறார்கள்.

இந்த விஷயத்தில் நிறைய பொய் சொல் கிறது என்.ஐ.ஏ. ரெய்டு நடத்திய சென்னையில் உள்ள இசுலாமிய அமைப்பின் அலுவலகத்தில் தீவிரவாதத்துடன் தொடர்புடைய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை'' என அந்த அமைப்பின் தலைவர் அலாவுதீன் மறுக்கிறார். தமிழகத்தில் தாமரையை மலரவைக்க எடுக்கும் நடவடிக் கையின் ஒரு பிரிவுதான் என்.ஐ.ஏ. ரெய்டுகள். இதில் புதிதாக ஒன்றுமில்லை என்கின்றன இசுலாமிய அமைப்புகள். ஆனாலும், தமிழகத்தில் வெடிகுண்டு ஆபத்து என்கிற பகீர் தகவலுடன் அதிர வைக்கும் அதிரடி ரெய்டுகளைத் தொடர்கிறது என்.ஐ.ஏ.
 

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.