Skip to main content

தி.மு.க.வோடு இணைந்திருப்பது எங்களுக்குக் கூடுதல் பலம்!

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

திராவிட-இடதுசாரி சிந்தனைகளால் பின்னிப்பிணைந்தது நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி. கஜா புயலின் கோரதாண்டவத்தால் சின்னாபின்னமாகி இருக்கும் இந்தத் தொகுதி தேர்தலைச் சந்திக்க இருக்கிறது.  அ.திமு.க. சார்பில் தாழை மா.சரவணன், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அ.ம.மு.க. வேட்பாளராக செங்கொடியும் களமிறங்குகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர். திடீரென்று நிறுத்தப்பட்டதால் சீனியர்களின் எதிர்ப்பு, கஜாவால் பாதிப்பில்லை என்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் பேட்டி, அதைக் கண்டித்துப் போராடிய மக்கள்மீது போடப்பட்ட வழக்கு, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகாயமார்க்கமாக விஜயம் செய்ததில் உண்டான கடுப்பு என தொடக்கமே ஏக மைனஸ்களாக இருக்கிறது சரவணனுக்கு. அவருக்கு நேரெதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜ், தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். மூன்று முறை எம்.பி.யாக இருந்தவர். மக்களோடு களத்தில் இறங்கி போராட்டங்களைச் சந்தித்தவர் என ஏகப்பட்ட சாதகங்களைக் கொண்டிருக்கிறார். 

 

communist



சென்றமுறை இதே தொகுதியில் வெற்றிபெற்ற அ.தி.மு.க. எம்.பி. டாக்டர்.கோபால் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என்கிற மக்களின் கோபம், சரவணனுக்கு எதிராக புதர்போல மண்டிக் கிடக்கிறது. பிரச்சாரத்திற்கு சென்றுவரும் கீழ்வேளூரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது, “கடலில் கலந்து வீணாகும் காவிரி நீரைத்தடுக்க தடுப்பணை கட்டாதது, கிடப்பில் போடப்பட்டிருக்கும் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகள், வேதாரண்ய உப்பை சர்வதேச சந்தைக்கு எடுத்துச்செல்ல ரயில்வே வசதி, நாகை துறைமுகத்தை ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக பயன்பாட்டிற்குக் கொண்டுவராதது என தொகுதிப்பக்கமே வராததால், எக்கச்சக்கமான பிரச்சனைகள். இப்படியிருக்க, சென்னைக்காரரான சரவணன் என்ன செய்துவிடப் போகிறார் என்ற எண்ணமே மக்கள் மத்தியில் இருக்கிறது. அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ் பணக்கணக்கு போடுகிறார்கள்''’என்றார் அவர்.   
 

kamaraj



ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த நாகை மக்களவை தொகுதியை, தி.மு.க. ஏ.கே.எஸ்.விஜயன் வெற்றிபெற்று கைப்பற்றினார். மூன்றுமுறை வெற்றிகண்டு ரெக்கார்ட் பிரேக்கும் செய்தார். ஆனால், சென்ற தேர்தலில் உ.பி.க்களின் உள்ளடி வேலைகள், கம்யூனிஸ்ட் கூட்டணி தனித்துப் போட்டியிட்டது என அ.தி.மு.க. டாக்டர்.கோபாலிடம் தொகுதியைப் பறிகொடுத்தார் விஜயன். “அமைச்சர் காமராஜை சுற்றிக்கொண்டு அவரின் சீடரைப் போலவே ஆகிவிட்டதால், அ.தி.மு.க.வுக்குள்ளேயே கோபால் மீது கோபம் இருக்கிறது. 2014 தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பழனிச்சாமி தனித்துநின்றே ஒன்றரை லட்சம் வாக்குகள் பெற்றார். "இந்தமுறை தி.மு.க.வோடு இணைந்திருப்பது எங்களுக்குக் கூடுதல் பலம்'’என்கிறார்கள் தோழர்கள். 

 

maniyan



கஜா புயல் பாதிப்பின்போது பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டதால் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, கீழ்வேளூர், முத்துப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு வேட்பாளரோடு செல்ல இன்னமும் தயங்குகிறார்கள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியனும், காமராஜும். ஒரேயொரு செயல்வீரர்கள் கூட்டம், முதல்வர் வந்தபோது என இரண்டேமுறை இந்தப் பகுதிகளுக்குச் சென்றிருக்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறையைப் பார்க்கப் போய்விட்டார். "திருவாரூரையும், நன்னிலத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று அமைச்சர் காமராஜும் கிளம்பிவிட்டார். இதனைக் கவனித்த இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்., ஓ.எஸ்.மணியனால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயபாலை நாகை பொறுப்பாளராக நியமித்திருக்கின்றனர். "பெருசா எதிர்ப்பு இல்லாததால ஜெயபாலை வைத்து சமாளிக்கிறாங்க'’என்கிறார் அ.தி.மு.க. வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.   

அதேசமயம், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க வீதியில் இறங்கிப் போராடியவர் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ். இதனால், மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கும் அவருக்கு இருக்கிறது. ஆனால், அவர் தரப்பு பிரச்சாரப் பணிகளோ மிகமிக மந்தம். அ.தி.மு.க. அமைச்சர்கள் தரப்பு பணத்தால் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து தேர்தல் வேலைகளைச் செய்யாமல், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தாமல் இருப்பது செல்வராஜுக்கு சரிவாகவே முடியும். 

இன்னொருபுறம், "அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளை முறியடித்து வெற்றிபெறுவேன். நானும் இடதுசாரி குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அதனால், இடதுசாரி வாக்குகள் எனக்கே கிடைக்கும். அரசியலுக்காக திருமணமே செய்யாமல் இருக்கிறேன்''’என்கிறார் அ.ம.மு.க. சார்பில் களமிறங்கியிருக்கும் செங்கொடி. இவர் சமூகப்பணி, சட்டப்பணி, அரசியல்பணி என பன்முகம் கொண்டவர். அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ் மீதான அதிருப்தி தனக்கே சாதகமாக இருக்கும் என்று கணக்கிட்டு வாக்கு சேகரித்து வருகிறார். இதை அறிந்திருக்கும் அமைச்சர்கள் செங்கொடி காட்டூர் கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருந்தபோது ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர். 
 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.