Skip to main content

தமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம்? எத்தனை பேர்? எவ்வளவு வாக்குப்பதிவு?

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87 சதவிகித வாக்குகள்  பதிவாகியுள்ளன.   தர்மபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.  குறைந்தபட்சமாக தென்சென்னையில் 56.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
 

election

 

 

மக்களவைக்கு 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் முதல் கட்டமாக  கடந்த 11ம் தேதி 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் இருக்கும் 95 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.  வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இரவு 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம் விவரம்:
 

திருவள்ளூர்- 72.02,  வடசென்னை-61.76, தென்சென்னை-56.41, மத்தியசென்னை-57.86, ஸ்ரீபெரும்புதூர்-60.61, காஞ்சீபுரம்-71.94, அரக்கோணம்-75.45, கிருஷ்ணகிரி-73.89, தர்மபுரி-80.49, திருவண்ணாமலை-71.27, ஆரணி-76.44,  விழுப்புரம்-74.96, கள்ளக்குறிச்சி-76.36, சேலம்-74.94, நாமக்கல்-79.75,  ஈரோடு-71.15, திருப்பூர்-64.56,  நீலகிரி-70.79, கோவை-63.67, பொள்ளாச்சி-69.98, திண்டுக்கல்-71.13, கரூர்-78.96, திருச்சி-71.89, பெரம்பலூர்-76.55, கடலூர்-74.42, சிதம்பரம்-78.43, மயிலாடுதுறை-71.13, நாகப்பட்டினம்-77.28, தஞ்சாவூர்-70.68, சிவகங்கை-71.55, மதுரை-62.01, தேனி-75.28, விருதுநகர்-70.27, ராமநாதபுரம்-68.26, தூத்துக்குடி-69.41, தென்காசி-71.60, நெல்லை-68.09, கன்னியாகுமரி-62.32

 
இன்று மாலைதான் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று அறிவிப்பார்கள். இந்நிலையில் கடந்த 1951ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை நடந்த 16 மக்களவை தேர்தல்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வாக்குகள் சதவீதம் எவ்வளவு பதிவாகியுள்ளன, அப்போதைய தேர்தல்களில் எவ்வளவு வாக்களர்கள் தமிழ்நாட்டில் இருந்திருந்தார்கள் என்பதையும் பார்ப்போம்...

 

 

 

  1. 1951- 56.33% - 1.99 கோடி (வாக்காளர்கள்)
  2. 1957- 47.75% - 1.09 கோடி
  3. 1962- 68.77% - 1.28 கோடி
  4. 1967- 76.56% - 1.59 கோடி
  5. 1971- 71.82% - 1.65 கோடி
  6. 1977- 67.13% - 1.82 கோடி
  7. 1980- 66.76% - 1.87 கோடி
  8. 1984- 72.98% - 2.25 கோடி
  9. 1989- 66.86% - 2.67 கோடி
  10. 1991- 63.92% - 2.55 கோடி
  11. 1996- 66.93% - 2.84 கோடி
  12. 1998- 57.95% - 2.64 கோடி
  13. 1999- 57.98% - 2.76 கோடி
  14. 2004- 60.81% - 2.87 கோடி
  15. 2009- 72.94% - 3.03 கோடி
  16. 2014- 73.74% - 4.06 கோடி 

 

 

 

 

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.