Skip to main content

’’செத்துருவேன்...’’- விஷம் குடித்ததாக டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளம்பெண் என்ன ஆனார்?

Published on 03/03/2020 | Edited on 04/03/2020
t

 

கொண்டாட்டங்களில் துவங்கும் டிக்டாக் பெரும்பாலும் துயரத்திலேயே முடிகிறது.  டிக்டாக்கினால் கொலைகளும், தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது.  எந்நேரமும் டிக்டாக்கில் மூழ்கிக்கிடந்த சகோதரிகள் கடந்த வாரம் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.  இதனால் அவர்களின் குடும்பத்திற்குள் பிரச்சனை பூதாகரமாக வெடித்ததால் அந்த சகோதரிகள் விஷம் குடித்துவிட்டதாக மீண்டும் ஒரு டிக்டாக் வீடியோ வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.  

 

t

 

‘காதல்’ பற்றி ஒரு இணைய சேனலுக்கு அளித்த பதிலில், ’’இப்பத்தான் லவ் பண்ணி கல்யாணம் கட்டுனேன்.  என்னைய விட்டுட்டு வேற ஒருத்தியோடு போயிட்டாரு.  நான் இப்படியே நின்னுக்கிட்டு இருக்குறேன். என்னை திடீர்னு வேண்டாம்னு சொல்லிட்டாரு... நல்லா இருந்தா சரிதான்.. நான் மனசார லவ் பண்ணிட்டேன்.. அவர் யார்கூட இருந்தாலும் நல்லா இருன்னு சொல்லிட்டு விலகிட்டேன்.’’’’என்று  தன்னை காதலித்து கரம் பிடித்த கணவர் தன்னை விட்டு வேறு ஒரு பெண்ணுடன் வாழ்கிறார் என்றும், அவர் கட்டிய தாலியுடன் அவர் நினைவாக வாழ்கிறேன் என்று இளம்பெண் கூறிய வீடியோ கடந்த இரண்டு தினங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. ’காதலுக்கு மரியாதை’என்று பலரும் அப்பெண்ணுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வந்தனர்.  இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணும் அவருடைய சகோதரியும் டிக்டாக்கில் ஆடிப்பாடும் பல வீடியோக்கள் வெளிவந்தன.  அதற்கு பலரும் அப்பெண்களைப்பற்றி பல விதமாக கமெண்ட் அடித்தனர். இதனால் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் பிரச்சனை நடந்திருக்கிறது. இந்நிலையில் அந்த இளம்பெண் மிகுந்த வேதனையுடன் மற்றுமொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.  

 

அந்த வீடியோவில், ’’என் தங்கச்சியும் நானும்தான் எல்லா டிக்டாக்கிலும் நடிச்சோம்.  இப்ப அவளையும் நீங்க அசிங்கப்படுத்திட்டீங்க.   அந்த பொண்ணை நான் என்ன பன்னுறது? தங்கச்சி, அக்கா, கடவுள்ன்னு எல்லாம் சொல்லி, எனக்கு ஆறுதல் சொல்லுறது மாதிரி சொல்லிவிட்டு அசிங்கப்படுத்திட்டீங்க. உங்களால எங்களோட மானம் மரியாதை எல்லாம் போச்சு. இனி இந்த உலகத்துல வாழ மாட்டேன்.  செத்துருவேன்...’’என்று குரல் உடைந்து பேசுகிறார். அந்த இளம்பெண் என்ன ஆனார்? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 

Next Story

'கெட்டவர்களை மட்டும் காயப்படுத்துவேன்' - கொலை செய்துவிட்டு பதிவு போட்ட டிக்டாக் பிரபலம்

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

'I only hurt the bad guys' - Tik Tok celebrity who recorded after killing

 

பெங்களூரில் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் சிஇஓ ஆகிய இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக்கு காரணமாக இருந்த இன்ஸ்டா, டிக்டாக்  பிரபலம் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.

 

பெங்களூரின் வடகிழக்கு தியான பம்பை எக்ஸ்டென்ஷனில் 'ஏரோனிக்ஸ் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணீந்திர சுப்ரமண்யா என்பவரும் சிஇஓவாக வினு குமார் என்பவரும் இருந்தனர். இவர்கள் இருவரையும் மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர். இதில் அலுவலக வளாகத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

 

'I only hurt the bad guys' - Tik Tok celebrity who recorded after killing

 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அதே நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த பெலிக்ஸ் என்ற முன்னாள் ஊழியர் இந்த கொலையில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. டிக்டாக் பிரபலமான பெலிக்ஸ் சில மாதங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். தனது நிறுவனத்திற்கு ஏற்படும் போட்டியை தடுக்கவே இருவரையும் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்த கொலையில் ஈடுபட்ட பெலிக்ஸ் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

கொலை நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பெலிக்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இந்த கிரக மக்கள் எப்போதும் ஏமாற்றுக்காரர்கள். அதனால் இந்த கிரக மக்களை காயப்படுத்துவேன். கெட்டவர்களை மட்டுமே காயப்படுத்துவேன். எந்த நல்ல மனிதர்களையும் காயப்படுத்தமாட்டேன்' எனப் பதிவிட்டுள்ளார். இதை வைத்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Next Story

மீசை வினித் மீண்டும் கைது

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

Mustache vinith again arrested

 

கேரளாவில் டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர் மீசை வினித். இவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருந்த நிலையில், தற்போது வழிப்பறி சம்பவத்தில் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த மாதம் 23 ஆம் தேதி பெட்ரோல் பங்கின் மேலாளர் ஒருவர் வங்கியில் பணம் செலுத்துவதற்காக 2.5 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து பிடித்து மிரட்டி 2.5 லட்சம் ரூபாய் பறித்துச் சென்றனர்.

 

இதுகுறித்து அந்த பெட்ரோல் பங்க் மேலாளர் காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருவனந்தபுரம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மீசை வினித் மற்றும் அவனது கூட்டாளி ஜீத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தைக் கொண்டு பெட்ரோல் பங்க் மேலாளரை துரத்தி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.