Skip to main content

வள்ளுவர் சிலை வைத்து அரசியல் செய்யும் பாஜக... வெளிவந்த ரகசிய பின்னணி!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

வட இந்தியாவையே வளைத்துப் பிடித்த பா.ஜ.க.வுக்கு தென்மாநிலங்களில் இதுவரை உறுதியான பிடி கிடைக்கவில்லை. எனவே இம்மாநிலங்களைக் குறிவைத்து மாநிலத்துக்கு ஒரு வியூகம் வகுத்துவருகிறது பா.ஜ.க. இந்தித் திணிப்பு எதிர்ப்பு, கோ பேக் மோடி முதலியற்றில் வேறெந்த மாநிலத் தைவிடவும் வேகம்காட்டும் தமிழகத்தை வளைக்க பிரதமர் மோடியும் பா.ஜ.க.வினரும் தொடர்முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு அம்சமாக தமிழின் தொன்மையைப் பாராட்டுவது, வேட்டிகட்டுவது என தொடங்கி தாய்லாந்தில் அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட குறளை வெளியிட்டு, குறளொன்றுக்கு விளக்கமும் அளித்தார் மோடி.

 

issues



மோடி குறளை வெளியிட்ட அதேசமயம், சமூக ஊடகங்களில் காவி உடை, திருநீற்றுப் பூச்சுடன் இருக்கும் வள்ளுவரின் படம் வெளியிடப்பட்டு, திருவள்ளுவர் இந்து என பரப்பும் முயற்சிகளில் தமிழக பா.ஜ.க. வினர், இந்துத்துவர்கள் மும்முரம் காட்டத் தொடங்கினர். அதற்கு எதிர்க்கட்சிகள், தமிழாய்வாளர்கள் என பல தரப்பிலும் எதிர்ப்புகள் வரத்தொடங்கிய நேரத்தில், தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் வள்ளுவர்மீது சேற்றை இறைத்து ஒரு கும்பல் தங்கள் அழுக்கு மனதை அடையாளம் காட்டியது.

 

issues



மதவாதங்களுக்கு என்றும் இடையூறாக இருந்துவரும் தந்தை பெரியார் மீதான காழ்ப்பால் சில மாதங்களுக்கு முன்பு தந்தை பெரியார் சிலைகள் உடைப்பு, அவமதிப்பு என்று அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறின. அதனைத் தடுக்க முடியவில்லை என்றாலும் ஆளுங்கட்சி சமாதானம் செய்து சிலைகளை சீரமைத்துத் தந்தது. ஆனாலும் எச்.ராஜா போன்றவர்களின் பேச்சு இன்னும் பெரியாருக்கு எதிராகவே உள்ளது.


இதுகுறித்து பிள்ளையார்பட்டி கிராமத்தினர் கூறும்போது.. “ஊரில் ஒருசிலர் சிலைவைக்க ஏற்பாடுகள் செய்தபோது, கிராம மக்கள் இணைந்து சிலைவைப்போம் என்று ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் சிலையை உருவாக்கினோம். அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் வைரம் (எ) ராமமூர்த்தி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வீரசண்முகமுனி திறந்து வைத்தார்.

அதன்பிறகு ஊரில் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தபிறகே தொடங்குவது வழக்கம். அந்த சிலையைத்தான் அவமதித்திருக்கிறார்கள். அவமதித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றனர். அங்கு வந்த தி.மு.க. மா.செ. சந்திரசேகரன், தஞ்சை எம்.எல்.ஏ. நீலமேகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் கிராம மக்களுடன் இணைந்து உடனடியாக நட வடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். எஸ்.எப்.ஐ. சார்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


"இல்லாமை பலவற்றுள்ளும் கொடியது அறிவில்லாமையே' என்பது வள்ளுவன் வாக்கு. தமிழகத்தின் முதன்மை முகமாக முன்வைக்கக்கூடிய வள்ளுவனின் சிலைமீது சேறடிப்பது, தன் இனத்தின் மீதே சேறடிப்பது என்பதை உணர்ந்திருந்தால் இதைச் செய்திருப்பார்களா…?

 

 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.