Skip to main content

தீவிரவாதி திருமுருகன் காந்தி!!!

Published on 14/08/2018 | Edited on 14/08/2018

தீவிரவாதி, தீவிரவாதம் என்பதற்கான பொருள் என்ன என்று கேட்டால் நம்மில் பலர் பயங்கரவாதத்தைத்தான் குறிப்பிடுவோம். ஆனால் பயங்கரவாதம் என்பது வேறு தீவிரவாதம் என்பது வேறு. தன் வாதத்தில் தீவிரமாக இருப்பவர்களைத்தான் தீவிரவாதிகள் என கூறுவார்கள். நமக்கு போராடுபவனையெல்லாம் கெட்டவனாகவே அரசு காட்டிவிட்டது என்பதுதான் உண்மை. ஆட்சியாளருக்கு அவர் தீவிரவாதியாக (பயங்கரவாதம்) தெரிந்தாலும், நாம் அவரை தீவிரவாதியாகவே (தன் வாதத்தில் தீவிரமாக இருப்பவர்) பார்க்கவேண்டும்.

 

thirumurugan




பெங்களூர் விமான நிலையத்தில் அதிரடி கைது, ஸ்டெர்லைட் போராட்டமும், அங்கு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நீதிகேட்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பேசியது, ஈழத்தமிழர்கள் கொலைக்கு நீதிகேட்டு ஐ,நா,வில் பேசியது, அதற்கான போராட்டங்கள், கூடங்குளம், மீத்தேன் வாயு, என தமிழகத்தின், தமிழர்களின் பிரச்சனைகள் பலவற்றுக்குப் போராட்டங்கள்...  இவற்றிற்கெல்லாம் மேல் தேசத்துரோகி பட்டம் என இன்றைய திருமுருகன் காந்தி பிறந்தநாள் அதாவது நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில், நல்ல வருமானம், நல்ல தொழிலறிவு, நல்ல குடும்பம் இவையனைத்தையும் விட்டுவிட்டு தமிழர்களுக்காகவும், ஈழத்தமிழர்களுக்காகவும் வந்த ஒருநாள், அந்த நாள்...



திருமுருகன் கோயம்புத்தூரில் பிறந்தவர். அப்பா பெயர் காந்தி. தமிழ்நாடு மின்சாரத் துறை பொறியாளராக பணியாற்றியவர், தொழிற்சங்கவாதியாகவும் இருந்தார். போரட்டங்களின் விளைவாக பலமுறை தொழிற்சங்கத்தின் நடவடிக்கைக்கு ஆளாகி பல ஊர்களுக்கு மாறுதலாகியுள்ளார். திருமுருகன் காந்தியின் முதல் அரசியல் ஆசான் அவரது அப்பா என்றே கூறலாம். ஆரம்பக்கல்வியை மட்டும் அவிநாசி, சேலம், வத்தலக்குண்டு, மதுரை என நான்கு ஊர்களில் படித்தார் திருமுருகன். ஆறாம் வகுப்பு முதல் கோவையில் படித்துள்ளார். இளங்கலையில் அப்ளைட் சயின்ஸ், முதுகலையில் எம்.சி.ஏ. படித்து 1998ல் தனது முதுகலையை முடித்தார். அவர் படிக்க நினைத்தது வரலாறு, ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலால் எம்.சி.ஏ. படித்தார். 12ம் வகுப்பு படிக்கும்போது தேர்வுமுறையை மாற்றியமைக்க முயற்சித்தது அரசு. அதற்கு எதிராக போராடினார் திருமுருகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

thirumurugan




கோவையில் 2000ம் ஆண்டில் நாதென்ஸ்கா என்ற விளம்பர நிறுவனத்தை தனது 26வது வயதில் தொடங்கினார். ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாவெஸ்கியின் வெண்ணிற இரவுகள் சிறுகதையில் வரும் பெண் கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘நாதென்ஸ்கா’.அவரது வாசிப்பு பழக்கத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. முதல் தலைமுறை தொழில்முனைவோர் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும் சந்தித்தார். கடைசியில் அதை கைவிட்டுவிட்டார். அதன்பின் சென்னை வந்த அவர் மீண்டும் விளம்பர நிறுவனம் வைத்து நடத்தினார். நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில், நல்ல வருமானம் இவையனைத்தையும் மாற்றியது ஒரு சம்பவம்... அந்தநாள் இதுதான்... 2009 மே 17 முள்ளிவாய்க்காலில் நடந்த கொடூர படுகொலையில் 1,50,000 பேர் இறந்தனர். இந்த கொடூர செயலுக்கு தமிழகத்திலிருந்து பெரும் எதிர்ப்பு வந்தது. திருமுருகன் காந்திக்கு அவர் நண்பர் தகவல் கூறுகிறார், சாஸ்திரி பவன் அருகில் ஒருவர் தீ குளித்துவிட்டார் என்று. இதைக்கேட்ட திருமுருகன் காந்தி சாஸ்திரிபவனுக்கு விரைந்தார். அங்கு ஒரு இளைஞர் கிட்டதட்ட இறந்துவிட்டார். அவர் எழுதியிருந்த கடிதத்தை படித்தவுடன்தான் தெரிந்தது, இது உணர்ச்சிப்பூர்வமாக எடுத்த முடிவல்ல, ஈழத்தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார் என்று. அந்த நாள்தான் தீவிரவாதி திருமுருகன்காந்தி பிறந்தநாள் என்று சொல்லலாம். இறந்த அந்த இளைஞர்தான் முத்து குமார்.

 

 



'இந்திய அரசு ஈழத்தமிழர் விஷயத்தில் பெரும் தவறிழைத்துள்ளது. இதை உலகறிய செய்யவேண்டும்' என எண்ணியவர் மே17 என்ற இயக்கத்தை தொடங்கினார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பு, பெரியாரிய சிந்தனைகள் கொண்ட திருமுருகன் தனது இயக்கத்தை தேர்தல் அரசியலிலிருந்து தவிர்த்து, இயக்க அரசியலில் ஈடுபட்டார். பெரியாருக்குப் பின், அரசியல் இயக்கமாக அனைவரும் கவனிக்கத்தக்கவகையில் வந்தது மே17 இயக்கம். இதன்பின்தான் அனைத்து போராட்டங்களிலும் மிக அதிகமாக இயங்கினார் திருமுருகன். 2010ம் ஆண்டிலிருந்து மே மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை மெரினாவில் ஈழத்தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்திவருகிறார், எந்தக் காரணம் கொண்டும் அது தடைபடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார் திருமுருகன் காந்தி.

 

 



2016 மே 21 நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தபோதுதான் அவர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார் அவரோடு பிற அமைப்புகளைச்சேர்ந்த அருண்குமார், டைசன், இளமாறன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். அவர் கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்குமுன் அவர் ஒரு வார்த்தைக் கூறினார், அதில் அவர்கள் இன்னும் தீர்க்கமாகவே உள்ளனர். அந்த வார்த்தை “துப்பாக்கிச்சூடு நடத்தினாலும் தமிழர் கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்கும்”. திகார் சிறையோ... புழல் சிறையோ எங்களுக்கு ஒரு பொருட்டல்ல, 4 மாதங்களோ, 4 வருடங்களோ, 40 ஆண்டுகள் எங்களை சிறையில் தள்ளினாலும் நாங்கள் எதிர்கொள்வோம், அந்தமான் சிறையில் தள்ளினாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் திருமுருகன் காந்தி பேசினார். இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது.

 

 



2013ல் ஜெர்மனியில் பிரீமென் நகரில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைப்பற்றி விளக்கினார். அந்த தீர்ப்பாயம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என கூறியது. இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டு 2014,15,16, ஐ.நா. மற்றும் அதன் சார்பு கூட்டங்களில் வாதாடியுள்ளார். இப்படியாக ஈழம், ஸ்டெர்லைட் போன்ற பல பிரச்சனைகளுக்காக பல்வேறு கூட்டங்களிலும், தீர்ப்பாயத்திலும் பேசியுள்ளார். ஈழ தமிழர் உரிமை, இனப்படுகொலைக்கு நியாயம், தமிழர், தமிழ்நாடு என பல உள்நாட்டு ஊடங்கள் முதல் உலக ஊடங்கள் மற்றும் அரங்குகளில் வாதிட்டுள்ளார் திருமுருகன் காந்தி. அவரது செயல்பாடுகளில் இருக்கும் தீவிரத்தைதான் இந்த அரசு அவ்வாறு குறிப்பிடுகிறது.

 

 

 


 

Next Story

“இதை மறைக்கவே மகளிர் இடஒதுக்கீடு மசோதா...”  -  திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Thirumurugan Gandhi | Women Reservation Bill

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

பா.ஜ.க. வின் ஆட்சியில் அடிப்படையில் பெண்கள் முன்னேற்றம் என்பது இல்லை. அவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறையத் தொடங்கியது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் பார்வையில் பெண்கள் வீட்டில் இருக்கவும், கணவனின் பணியாளாக இருக்கவே நினைப்பார்கள். மேலும், பெண்கள் வேலை செய்வதால் ஆண்களுக்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறினர். எனவே, நாடாளுமன்ற மசோதா பெண்கள் முன்னேற்றத்திற்கு கொண்டுவரவில்லை. மாறாக, இதனை 2029ல் தொகுதி மறுபங்கீடு செய்த பிறகு அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே தான் ஏன்? வருகிற தேர்தலில் இதனை அமல்படுத்தவில்லை என எதிர்கட்சியினர் கேட்கின்றனர். இதிலும் ஒ.பி.சி. இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஓவைசி அவர்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு இடமில்லை என எதிராக வாக்களித்துள்ளார்.

 

பா.ஜ.க. மணிப்பூர் விவகாரத்தை முறையாக கையாளவில்லை. இதனால், பெண்களிடம் ஏற்பட்ட களங்கத்தை மறைக்க இந்த இட ஒதுக்கீட்டை கொண்டுவருகிறார்கள். மேலும், பெண்கள் வாக்குகள் அதிகம் இருக்கும் இடத்தில் வெற்றி பெறுவதாலும் இது போன்று செயல்படுகிறார்கள். இதில் கவனத்தில் கொள்வது, " தொகுதி மறுவரை செய்வது" தான். ஏனென்றால், இவர்கள் மக்கள் தொகையை வைத்து தொகுதி எண்ணிக்கையை தீர்மானிக்க உள்ளனர். இதனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் பாதிப்படையும். மாறாக, வடமாநிலங்கள் கூடுதல் எம்.பி. இடங்களை பெறும். ஏற்கனவே, மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குறைந்த நிதியை பெறுகிறது.

 

ஆனால், காங்கிரஸ் அரசு 1971ல் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் வழங்கி வந்த நிதியை, பா.ஜ.க. அரசு 2011 கணக்கெடுப்பு படி மாற்றிவிட்டது. தென்னிந்தியாவின் நிதிகள் குறைந்ததற்கு முக்கிய காரணம் இதுதான். உதாரணமாக, தமிழ்நாடு 1 ரூ வரி செலுத்தினால் 0.40 பைசா திருப்பி செலுத்தப்படுகிறது. ஆனால், உ.பி. 1ரூ கொடுத்து, 2ரூ பெறுகிறது. இந்த நிலையில், தொகுதி மறுவரையறை செய்தால் மேலும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். இதற்கு மறைமுகமாகத் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என சொல்கின்றனர். இதையொட்டி தான் புதிய நாடாளுமன்றத்தின் இருக்கைகளை 843 ஆக அதிகப்படுத்தினர்.

 

தற்போதுள்ள கேரளா,தமிழ்நாடு,கர்நாடக,ஆந்திரா,தெலங்கானா, கோவா வில் 132 எம்.பி.க்கள் இருகின்றனர். மறுசீரமைப்பில் 167 எம்.பி. தொகுதியாக இது உயரும். இதன் மூலம் தென்னிந்திய மாநிலங்களுக்கு 25% சதவிதம் வரை கூடும். ஆனால், உ.பி.யில் 80ல் இருந்து 143 ஆக உயரும். இதனடிப்படையில், ஹிந்தி பேசும் மாநிலங்களின் எம்.பி. எண்ணிக்கை 439ஆக உயர்ந்து, நமக்கு சட்டம் இயற்றுவதில் சிக்கல் உருவாகும். எனவே, வரும் காலங்களில் இந்தியாவை ஹிந்தி பேசும் மாநிலங்கள் தான் ஆளப்போகிறது.  இதுமாதிரி தொகுதி மறுபங்கீடு செய்தால் பா.ஜ.க. தான் தொடர்ந்து மத்தியில் ஆட்சியமைக்கும். இதே போன்ற செயல் தான் இலங்கையில் நடந்து தமிழர்களின் இடங்கள் பறிபோனது. இந்தநிலையில், சட்டமன்ற தொகுதிகளையும் மாற்றியமைத்தால் மாநிலத்தின் அதிகாரங்கள் சிதைந்து விடும். எனவே, பெண்கள் இட ஒதுக்கீடு அல்ல அவர்களின் நோக்கம். 

 

தென்னிந்தியா முழுவதும் சேர்ந்தே பிரதிநிதித்துவம் இல்லை என்றால் தமிழ்நாட்டின் உரிமை எப்படி இருக்கும். மேலும், இவர்கள் மக்கள் தொகை கணக்கெடுத்து மறுசீரமைப்பு செய்யவுள்ளனர். நாங்கள் கேட்கிறோம் 1971 சென்சஸ் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாமே. ஏறக் குறைய ஆண்கள் பெண்கள் விகிதம் பாதியளவு தான் இருக்கும். இந்திக்காரர்களின் தேசியமாக இந்தியாவை மாற்றுவது தான் இவர்களின் நோக்கம்.  மேலும், தொகுதி பங்கீடு குறித்த ஆய்வும் வெளிவந்துள்ளது. இதைவைத்து தான் இவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தின் குரல் கேட்பது அரிது. தற்போது, கூடுதலாக எம்.பி. இடங்கள் குறைகிறது. இந்த மாதிரியான அடிமைநிலையில் நாம் வாழவேண்டும் என்பதற்கே பெண்கள் மசோதாவை கொண்டுவருகின்றனர். இதனை எங்கள் பத்திரிக்கையில் ஒரு வருடமாக சொல்லி வருகிறோம். ஆனால், வேறு பத்திரிகையில் பேச வாய்ப்பு அமையவில்லை. தற்போது நக்கீரனில் தான் தெரிவிக்கிறேன்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

Next Story

காட்டுமிராண்டிகளா இவர்கள்? தொடைநடுங்கிகள்! - விளாசும் திருமுருகன் காந்தி

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

 Thirumurugan Gandhi Interview

 

சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பகிர்ந்து கொள்கிறார்.

 

அரசியலில் கோபம் இருக்கலாம். ஆனால் கண்ணியக் குறைவு எப்போதும் இருக்கக்கூடாது. தலைக்கு விலை வைக்கும் வேலையை இவர்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் என்ன காட்டுமிராண்டிங்களா? யாராவது விமர்சனம் செய்தால் அவர்களை சிறையில் அடைக்கும் தொடை நடுங்கிகள் தான் இவர்கள். பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரை இதுபோன்று சிறையில் அடைத்துள்ளன உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிர மாநில பாஜக அரசுகள். இவர்கள் கருத்தியல் ரீதியாக உரையாடுவதாக இருந்தால் தமிழ்நாட்டில் இருக்கலாம். தலைக்கு விலை வைப்பதாக இருந்தால் வடமாநிலம் சென்றுவிடலாம். 

 

தமிழ்நாட்டு மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். சனாதன எதிர்ப்பு பற்றி உதயநிதி ஸ்டாலின் மட்டும் பேசவில்லை. அவருக்கு முன்பு பலரும் அதைப் பேசியுள்ளனர். சனாதனம் பின்பற்றப்பட்டிருந்தால், இன்று உதயநிதிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மேடையேறி இருக்கவே முடியாது. உத்தரப்பிரதேச சாமியாரின் பேச்சை எதிர்க்கும் அண்ணாமலை, ஜனநாயகவாதி போல் நடிக்கிறார். அவருடைய கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல. 

 

வட மாநிலத்தில் செய்யும் அரசியலை பாஜக இங்கு செய்தால் அது எடுபடாது. தமிழர்கள் படித்தவர்கள். உமா ஆனந்தனை இன்னும் ஏன் இந்த அரசு கைது செய்யவில்லை? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரானவர் உதயநிதி. அவருடைய தலையை வெட்ட வேண்டும் என்கிற கருத்தை ஆதரித்து பேசுகிறார் உமா ஆனந்தன். இப்படி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது இவர்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். சனாதனம் என்பது மக்களைக் குறிக்கும் சொல் அல்ல. சனாதனம் என்கிற வார்த்தையை இந்துக்கள் பயன்படுத்துவதில்லை. 

 

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது போல, இந்து மதத்தின் பெயரை சனாதனம் என்று இவர்களால் மாற்ற முடியுமா? தலையை வெட்டுவேன், நாக்கைப் பிடுங்குவேன், கண்ணை நோண்டுவேன் என்று பேசி வரும் இவர்கள் காட்டுமிராண்டிகள் தான். உலகின் எந்த நாட்டிலும் இவ்வாறு அரசியல் தலைவர்கள் பேசுவதில்லை. இவை அனைத்தையும் திமுக அனுமதித்துக் கொண்டிருக்கிறது. இப்படி கீழ்த்தரமாக பேசும் நபர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டின் அரசியல் நிலை மோசமாகும்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...