Skip to main content

'தொண்டன் என்ற பதவி மட்டுமே கடைசி வரையில் நிலையாக இருக்கும்' - திருமா நெகிழ்ச்சி பேச்சு!

Published on 09/09/2019 | Edited on 09/09/2019


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கலந்துகொண்டு பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்றைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசினார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, "இன்றைக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். நம்மை பற்றி ஆதரவான செய்திகள் வெளிவருவது ஒருபுறம் இருந்தாலும், நெகடிவ் ஆன செய்திகள் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதை எல்லாம் கடந்துதான் பயணிக்க வேண்டி உள்ளது. நண்பர் ஒருவர் சொன்னார், திருமாவளவன் ஆர்கனைஸ்சராகவே பல ஆண்டுகளாக இருக்கிறார் என்று, என் மீதான அக்கறையில் ஆதங்கத்தில் அவர் அப்படி கூறினார். ஆனால், என் வாழ்நாள் முழுவதும் நான் அப்படி இருக்கவே விரும்புகிறேன். அதுதான் என் இயல்பும்கூட. வாக்கு செலுத்துவதை தவிர எந்த புரிதலும் இல்லாத அடிதட்டு மக்களை அரசியல்படுத்த அது தேவைப்படுகிறது. அதனை செய்யவே நான் எப்போதும் விரும்புகிறேன். தலித் அரசியல் பற்றி பேசாமல் நாம் இந்திவாகவோ, பாட்டாளியாகவோ வேறு எதனாலும் நாம் இணைய முடியாது.

 

zhg



எதிர் இருக்கும் நண்பர்களுக்கு சொல்கிறேன், நகரச் செயலாளர் பதவியோ, வட்டச் செயலாளர் பதவியோ எதுவாக இருந்தாலும் அது நம்முடன் நிலையாக இருக்காது. ஆனால் தொண்டன் என்ற பதவி மட்டும் கடைசி வரையில் நிலையாக இருக்கும். நான் தலைவன் ஆகிவிட்டேன் என்றோ, எம்.பி ஆகிவிட்டேன் என்றோ நான் இப்போதும் நினைக்கவில்லை. தற்பெருமை பட்டால் அது நம்மை அழித்துவிடும் ஆற்றல் உடையது. அதையெல்லாம் கடந்துதான் நாம் அரசியலில் ஈடுபட வேண்டும். நம்மை பிரபலபடுத்த தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல விடுதலை சிறுத்தைகள் இயக்கம். மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். எந்த ஒரு தலித் இயக்கமும் தமிழகத்தில் தொட முடியாதவற்றை எல்லாம் தொட்ட இயக்கம் நம்முடைய விடுதலை சிறுத்தைகள் இயக்கம். தேர்தல் கூட்டணிகள் என்பது அந்தெந்த கால சூழ்நிலைகளுக்கும், சமூதாய தேவைகளுக்கும் ஏற்ப எடுக்கப்பட வேண்டிய ஒன்று. அதில் தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புக்கள் இருக்க கூடாது. அதில் நான் எப்போதும் தெளிவாக இருப்பேன்" என்றார்.

 

Next Story

'நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் மன்றம் புறக்கணிக்கும்' - திருமா கருத்து

Published on 12/12/2023 | Edited on 12/12/2023

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.  வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

 

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து என்ற தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்தேன். காஷ்மீருக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் என்பது உறுதி' என தெரிவித்துள்ளார்.

Next Story

திருமாவளவனிடம் நலம் விசாரிக்கும் அரசியல் தலைவர்கள்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

 Political leaders inquiring about health of Thirumavalavan

 

திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்பொழுது அவரை அரசியல் தலைவர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திடீர் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் நண்பர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர். நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமாவளவனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.